districts

img

தோழர் அரூர் வி.ஆறுமுகம் காலமானார்

தருமபுரி, ஜன.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரூர் ஒன்றியக் குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்க ஒன்றியச் செயலாள ருமான தோழர் வி.ஆறுமு கம் காலமானார். தருமபுரி மாவட்டம், அரூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வி.ஆறுமுகம் (67). இவர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரூர் ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் அரூர் ஒன்றிய செயலாளராக திறம்பட பணியாற்றி வந்தார். இந் நிலையில், இவர் ஞாயிறன்று மரப்படைப்பால் தனது வீட்டில் உயிரிழந்தார்.  அரூர் அம்பேத்கர் நகரில் அவரது வீட்டில் வைக்கப் பட்டுள்ள தோழர் வி.ஆறுமுகம் உடலுக்கு சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் ஏ. குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, ஆர்.சிசுபாலன், ஆர்.மல்லிகா, சோ.அருச் சுணன், எஸ்.கிரைஸமேரி, வே.விசுவநாதன், ஆர்.சின்ன சாமி, ஒன்றிய செயலாளர்கள் பி.குமார், கே.தங்கராஜ், தனு ஷன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.வி.மாது, சி.சதீஷ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னர். மேலும், திமுக நகர செயலாளர் ஏ.சி.மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் காசி. தமிழ்குமரன் ஆகியோர் அவரது குடும்பத்தினருக்கு ஆறு தல் தெரிவித்தனர். தோழர் வி.ஆறுமுகத்திற்கு கனகா என்ற  மனைவியும், சுதாகர், உமாநாத் என்ற இரு மகன்களும் வைகை என்ற ஒரு மகளும் உள்ளனர். இவரது குடும்பத் துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஆறுதல் தெரி வித்தனர்.