ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கணினி பொறியாளர் தற்கொலை
தருமபுரி, ஏப்.7- மாரண்டஅள்ளி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில், கணினி பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பாலசுப்ரமணியம் தெருவைச் சேர்ந்தவர் விஜய் (36). இவருக்கு கனிமொழி என்ற மனைவியும், கவின், காரண்யா ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர். விஜய் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவ னத்தில் கணினி பொறியாளராக பணியாற்றி வந்தார். இந்நி லையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபாடு கொண்ட அவர், கடந்த 3 மாதத்திற்கு முன்பு பெரும் தொகையை சூதாட்டத் தில் இழந்தார். இதனால் விரக்தியில் இருந்து வந்த அவர், ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில், சனியன்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல றிந்த மாரண்டஅள்ளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விஜய்-யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரியாணியில் கொட்டுப்போன இறைச்சி உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு
பிரியாணியில் கொட்டுப்போன இறைச்சி உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு நாமக்கல், ஏப்.7- நாமக்கல்லில் பிரியாணி கடை ஒன்றில் கெட்டுப்போன கோழி இறைச்சி பயன்படுத்தியதாக எழுந்த புகாரையடுத்து, அந்தக் கடையில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். நாமக்கல் - சேலம் சாலையில் பிரபல பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு நகரின் மேலும் சில இடங்களில் கிளைகள் உள்ளன. அண்மையில், இங்கு பிரியாணியை பொட்டலமாக வாங்கிச் சென்ற ஒருவர் சாப்பிட அமர்ந்தபோது, அதில் இருந்த கோழி இறைச்சி சரியாக வேக வைக்காமலும், கெட்டுப்போன நிலையிலும் இருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று புகாரளித்தபோது, பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில் அளித் துள்ளனர். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமா கப் பரவியது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ச.உமா உத்தர வின்பேரில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கே.சி.அருண், நாமக்கல் உணவு பாதுகாப்பு அலுவலர் முருகன் ஆகியோர் சனியன்று அந்தக்கடையில் நேரில் ஆய்வு செய்தனர். பிரியாணி கடையின் உரிமையா ளர், சமையலர்களிடம் விசாரணை செய்து, பிரியாணி மற்றும் இறைச்சி மாதிரிகளை பகுப்பாய்வுக்காக எடுத்துச் சென்ற னர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கே.சி. அருண் கூறுகையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி, நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள ஒரு கடையில் பிரியாணி வாங்கியவ ருக்கு ரத்தத்துடன் கோழி இறைச்சி வந்துள்ளது. இதற்கு கடை உரிமையாளர் சரியான விளக்கம் கொடுக்கவில்லை. இதுதொ டர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலைய டுத்து, நேரடியாகச் சென்று பிரியாணி கடையை ஆய்வு செய் தோம். உணவு, இறைச்சி மாதிரிகள் ஆய்வுக்கு உட்ப டுத்தப்பட இருக்கின்றன. கடைக்கு விளக்கம் கேட்டு நோட்டீ சும் வழங்கி உள்ளோம், என்றார்.
வன உயிரினங்களை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
வன உயிரினங்களை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை தருமபுரி, ஏப்.7- வன உயிரினங்களை வேட்டையாடினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என தருமபுரி ஆட்சியர் கி.சாந்தி எச்ச ரிக்கை விடுத்துள்ளார். வன உயிரினங்களை சட்டத்திற்குப் புறம்பாக வேட்டை யாடுவதிலிருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட மாவட்ட அள விலான குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் வெள்ளி யன்று தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து ஆட்சியர் கி.சாந்தி பேசுகையில், வன உயிரினங்களை மின் இணைப்பு, மின்சார ஒயர்கள், கம்பி வலைகள் மற்றும் நாட்டு வெடிமருந்து ஆகி யவற்றைக் கொண்டு வேட்டையாடுவதிலிருந்து பாது காக்கத் தேவையான விழிப்புணர்வை, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே ஏற்படுத்த வேண்டும். வேட்டை குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால், இந்திய வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வன உயிரி னங்களை வேட்டையாட வெடி மருந்துகளை வழங்கும் நிறுவ னம் கண்டறியப்பட்டால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்ப டும். இக்குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களைக் கண்ட றிய வனத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை அடங் கிய தனிக்குழுக்கள் அமைத்து கூட்டு களத் தணிக்கை மேற்கொள்ளப்படும். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் சமூக விரோத சக்திகளின் விவரம் அறிந்தால், தருமபுரி வனத் துறை இலவச தொலைபேசி எண்: 1800 425 4586 வாயி லாக உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவா்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்ப டும், என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வன அலுவலர் கா.ராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி நாமக்கல், ஏப்.7- நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் எஸ்ஆர்வி பெண்கள் மெட் ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்க ளுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ராசி புரம் சட்டமன்ற தொகுதியில் 359 வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள், 347 வாக்குச்சாவடி அலுவலர்கள், 1,244 வாக் குச்சாவடி அலுவலர்கள், 2,424 வாக்குச்சாவடி அலுவ லர்கள் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தலை சிறப்பாக வும், அமைதியாகவும், பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி மையங்களில் பணி களை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு நாமக் கல் மாவட்ட தேர்தல் அலுவலர் உமா அறிவுறுத்தினார். இந்நி கழ்வில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் த.முத்துராம லிங்கம், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி
கோவை, ஏப்.7- கோவையில் முகாமிட்டு இருக்கும் கிஷான் மஸ்தூர் மோட்சா விவசாயிகள், மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயற் சித்த நிலையில் காவல் துறை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக கைது செய்து விடு வித்தது. ஒன்றிய மோடி அரசின் விவசாய விரோத நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இதன்தொடர்ச்சியாக தலைநகர் டில்லியில் முற்றுகையிட சென்ற விவசா யிகளை ஹரியானா மாநில எல்லையில் தடுத்து பாஜக அரசு வன்முறையை ஏவி விட்டது. இதில், விவசாயி ஒருவர் பலியா னார். பாஜகவின் அரசு அடக்குமுறையில் பலி யான விவசாயி-யின் அஸ்தியை நாடு முழுவ தும் விவசாய கூட்டமைப்பு எடுத்துசெல்கி றது. இதன்ஒருபகுதியாக கோவையில் இந்த அஸ்தியை விவசாய சங்கங்களின் கூட்ட மைப்பு நிர்வாகிகள் கொண்டு வந்தனர். இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் தொடர்ந்து விவசாயிகளின் மீது வன்மு றையை ஏவிவிடும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், ஹரியானா மாநில முதல்வரை கண்டித்தும், நாடு முழுவதும், மோடி மற்றும் ஹரியானா மாநில முதல்வரின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. இதன்தொடர்ச்சியாக, கோவையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் இப்போராட்டத் திற்கு திட்டமிட்டதாக தெரிகிறது. இதனை யடுத்து, போலீசார் இவர்களை கைது செய்ய முயற்சித்தனர். ஆனால், விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை யடுத்து, பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போலீசார் திரும்பிச்சென்றனர்.
அதிமுக, பாஜக கள்ள உறவு - எழுதப்படாத ஒப்பந்தம்
கோபி, ஏப். 7- திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட் பட்ட கோபிசெட்டிபாளையம் நகரப் பகுதி யில் திருப்பூர் நாடாளுமன்ற திமுக வேட்பா ளர் கே.சுப்பராயன் இருசக்கர வாகன பேர ணியுடன் வார்டு வார்டாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது வாக்காளர்களிடையே பேசுகையில், அதிமுக யாரை எதிர்த்து போட்டியிடுகிறார்கள். அதிமுகவின் எடப் பாடி பழனிசாமியோ முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனோ பாஜகவின் கொடுங் கோல் ஆட்சியை பற்றி எதிர்த்து பேசிய துண்டா. பாஜவும் அதிமுகவும் கள்ளஉறவு வைத்துள்ளார்கள். எதற்கு என்றால், அதிமுக வினர் மீது வருமான வரித்துறையை ஏவ வேண்டாம் என்றும், வழக்குகள் போட வேண் டாம் நாங்கள்(அதிமுக) வெற்றி பெற்றால் மோடியை தான் ஆதரித்து வாக்களிப்போம் என்று மறைமுகமாக எழுதப்படாத ஒப்பந்தம் செய்து கொண்டதால்தான் எந்த இடத்தி லும் பாஜகவை பற்றி அதிமுகவினரும் பேசுவ தில்லை. எனவே, வாக்காளர்கள் சிந்தித்து திமுக கூட்டணியை வலுப்படுத்தவும் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி தலைமை யில் ஆட்சி அமைக்கவும் கதிர்அரிவாள் சின் னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். முன்னதாக இந்த வாக்கு சேகரிப்பின் போது, திமுக வடக்கு மாவட்டச் செயலா ளர் நல்லசிவம், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ரகுராம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சர வணன், நகரச் செயலாளர் மாரிமுத்து, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முனுசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குடோனில் தீ விபத்து
கோவை, ஏப்.7- சூலூர் அருகே பர்னிச்சர்களை மறு சுழற்சி செய்யும் குடோனில் பழைய பொருள்கள் வைத்திருந்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட் கள் சேதமடைந்தன. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கணியூர் பகுதியில் சிவசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில், சிவராமன் என்பவர், பழைய சோபா, மெத்தை, தலையணைகளை வாங்கி வந்து அதனை மீண்டும் மறுசுழற்சி செய்து விற் பனை செய்து வருகிறார். அந்த பர்னிச்சர் கடை இருக் கும் கடைக்கு பின்புறமாக பழைய பொருட்களை சேமித்து வைத்து வந்துள்ளார். அதில் திடீரென மதிய நேரத் தில் தீப்பிடித்துள்ளது. இதனைப் பார்த்து கடையில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற் சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கருமத் தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று திருப்பூர், கோவையில் பிரகாஷ் காரத் பேசுகிறார்
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பி னர் பிரகாஷ் கரத் உரையாற்றுகிறார். திருப்பூர் மாவட்டம், வெள்ளியங்காடு நால்ரோடு தெற்கில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரகாஷ்காரத், திருப்பூர் தொகு தியில் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயனின் வளர்ச்சி பணிகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்று கிறார். பிற்பகல் 4:30 மணி அளவில் நடை பெறும் இந்த பொதுக்கூட்டத்தில் தோழ மைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரை யாற்றுகின்றனர். திருப்பூர் கூட்டத்தை முடித்து, கோவையில் நடைபெறும் பிரச் சாரக் கூட்டத்தில் பிரகாஷ் காரத் பங்கேற்க இருப்பதால், குறித்த நேரத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தெரி வித்துள்ளார். கோவை கோவையில் தேர்நிலைத்திடல் பகுதி யில் மாலை 6 மணிக்கு, கோவை நாடாளு மன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகி யோரை ஆதரித்து பிரகாஷ் காரத் உரை யாற்றுகிறார். இதில் தமிழக அமைச்சர் கள் சு.முத்துசாமி, டி.ஆர்.பி.ராஜா மற்றும் பி.ஆர்.நடராஜன் எம்.பி., ஆகியோர் உரை யாற்றுகின்றனர்.
ஈரோட்டில் அதிகபட்சமாக 108 டிகிரி
ஈரோட்டில் அதிகபட்சமாக 108 டிகிரி ஈரோடு, ஏப்.7- கோடை வெயிலின் தாக்கமும் நாளுக்குநாள் அதிக ரித்துக்கொண்டே இருக்கிறது. ஈரோட்டில் ஞாயிறன்று அதிக பட்சமாக 108 டிகிரி வெயில் சுட்டெரித்தது. தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஈரோட் டில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. வெள்ளியன்று 106 டிகிரி வெயில் அடித்தது. ஆனால் ஞாயிறன்று அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் சுட்டெரித்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்வதற்கு தயங்கினர். இதனால் வீதிகளில் பொதுமக்க ளின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே ஈரோட்டில் 108 டிகிரி வெயில் சுட்டெரிப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மே மாதத்தில் மலைப்பகுதியான உதகை, கொடைக்கானல் போன்ற இடங் களுக்கு செல்ல பொதுமக்கள் தற்போது இருந்தே திட்ட மிட்டு வருகிறார்கள்.