districts

img

பணி நிறைவு பாராட்டு விழா

திருப்பூர், ஜூலை 7  கூட்டுறவு பணியாளர் சங்க திருப்பூர் மாவட்டத் தலை வருக்கான பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற் றது. தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன துணைப் பொதுச்செயலாளரும், திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கத் தலைவருமான, திருப்பூர் மாவட்ட  நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை விற் பனையாளர் பி.கௌதமன் பணி நிறைவு பாராட்டு விழா  திருப்பூர் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடை பெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் சி. மூர்த்தி தலை மையில் சனியன்று நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட் டச் செயலாளர் கே.ரங்கராஜ், பொருளாளர் ஜி.சம்பத்,  மோட்டார் சங்கச் செயலாளர் ஒய்.அன்பு, சாலையோர வியாபாரிகள் சங்கத் செயலாளர் பாலன் மற்றும் கூட்டு றவு சங்க மாவட்டச் செயலாளர் கே.மகேந்திரன், கூட்டுறவு  ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் பி.சுரேஷ், கூட்டுறவு  ஊழியர் சங்க நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பி னர்கள் மற்றும் இதர கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற கௌதமனுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்திப் பேசினர்.