சேலம், ஆக.26- சேலத்தில் நகர கேஸ் விநி யோக திட்டத்தில், சமையலுக்கு பயோகேஸ் விநியோகம் செய்ய 2,600 வீடுகளில் மீட்டர் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்த, வாகன எரிபொருள் உபயோகம், சமையலுக்கான எல் பிஜி கேஸ் உபயோகம், நிலக்கரி, விறகு போன்ற திட எரிபொருள் உப யோகம் போன்றவற்றை குறைத்து இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில், நிலத்திற்கு அடியில் இருந்து கிடைக்கும் இயற்கை எரி வாயுவை சேமித்து, வீட்டு கேஸ் இணைப்பு, வாகன எரிபொருள், தொழிற்சாலை பயன்பாடு போன்ற வற்றிற்கு பயன்படுத்த, நகர எரி வாயு விநியோக திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) மூலம் கடந்த 2018 ஆம் ஆண்டு இயற்கை எரி வாயு விநியோக திட்டம் தொடங்கப் பட்டது. ரூ.1,300 கோடியில் துவங் கப்பட்ட இத்திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 3.35 லட்சம் வீடுக ளுக்கும், 158 பெட்ரோல் பங்க்கு களுக்கும் இயற்கை எரிவாயு இணைப்பு வழங்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. இதற்காக சேலம் இரும்பாலை சாமுண்டிநகரில் இயற்கை எரிவாயு பிளாண்ட் அமைக்கப்பட்டு, கடந்தாண்டு மே மாதம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது சேலம் இரும்பாலை வளாகத்தில் உள்ள மோகன்நகரில் 50 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கினர். வீடுகளுக்கான சமையல் இயற்கை எரிவாயு விநியோகத்தை விரிவாக்கம் செய்யும் பணியை தொடர்ந்து ஐஓசி இயற்கை எரி வாயு பிரிவு அதிகாரிகள் மேற் கொண்டு வருகின்றனர். இந்த வகையில் பாகல்பட்டி, மாரமங் கலத்துப்பட்டி, இரும்பாலை, ஜாகீர்அம்மாபாளையம், சூர மங்கலம், சர்கார்கொல்லப்பட்டி, சங்கர்நகர், திருவாகவுண்டனூர், சூரமங்கலம் முல்லைநகர் ஆகிய இடங்களில் பதிக்கப்பட்டுள்ள விநி யோக குழாய்கள் மூலம் வீடுக ளுக்கு இயற்கை எரிவாயு விநியோ கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ள னர். இதற்காக அந்த பகுதிகளில் உள்ள 2,600 வீடுகளில் மீட்டர் பொருத்தியுள்ளனர். சுமார் 300 வீடுகளில் இயற்கை எரிவாயுவை விநியோகம் செய்து, பயன்பாட் டிற்கு கொண்டு வந்துள்ளனர். அந்த வீடுகளில் தற்போது இயற்கை எரி வாயு மூலம் பெண்கள் சமையல் செய்து வருகின்றனர். இயற்கை எரிவாயுவை கொண்டு சமையல் செய்யும்போது அதன் பயன்பாட்டு அளவு, அந்தந்த வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள மீட்டரில் பதிவாகும். அதனடிப்ப டையில் மாதந்தோறும், மின்கட்ட ணம் செலுத்துவது போல் செல் போன் செயலியில் இருந்து இயற்கை எரிவாயு உபயோகத் திற்கு கட்டணத்தை மக்கள் செலுத்த இயலும். மீட்டர் பொருத் தப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதிக் கும் படிப்படியாக விநியோகம் செய்ய உள்ளதாக ஐஓசி இயற்கை எரிவாயு பிரிவு அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.