districts

img

தண்ணீர் விடுவதில் குளறுபடி: பிஏபி அதிகாரிகள் விவசாயிகளை வஞ்சிப்பதாக புகார்

உடுமலை, செப்.1- திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல விவசாய பயன்பாட் டிற்கு கடந்த மாதம் தண்ணீர் திறக்கப் பட்ட நிலையில், அதிகாரிகள் கவனக்கு றைவால் பல இடங்களில் தண்ணீர் செல் லவில்லை என விவசாயிகள் கூறுகின்ற னர்.  கடந்த வாரம் குடிமங்கலம் ஒன்றிய  பகுதிகளில் முறையாக பிஏபி வாய்க் கால் பராமரிப்பு செய்யாததாலும், சில  வசதி படைத்தவர்கள் அரசுக்கு சொந்த மான வாய்க்காலை சேதப்படுத்தி பொதுப்பணித்துறை சட்ட விதிகளுக்கு  புறம்பாக வாய்க்காலின் அளவை மாற்றி அமைத்து உள்ளதால் கீழ் மடை மற்றும் இதர பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில்லை என உடுமலை  பிஏபி அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால், உடுமலை தலைமை பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி னார்கள். இது குறித்து குடிமங்கலம் பகுதி  விவசாயிகள் கூறுகையில், குடிமங்க லம் மற்றும் கொள்ளுப்பாளை யத்துக்கு உண்டான வாய்க்கால் பகிர் மானம் வாய்க்காலில், நியூ குடிமங்க லம் என்ற வாய்க்கால் தண்ணீர் பெயர ளவில் மட்டுமே வந்து கொண்டுள்ளது.  இது சம்பந்தமாக உடுமலை பிஏபி தலைமை அதிகாரிகள் உட்பட அனைத்து அதிகாரிகளிடம் தெரிவித் தும் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை. மேலும் உடுமலை செயற்பொ றியாளர் மற்றும் உதவி பொறியாளர் களை அலுவலகத்தில் பார்க்க முடிய வில்லை. தொலைபேசியையும் எடுப் பது இல்லை. அதிகாரிகளை சந்திக்க  திருமூர்த்தி அணைக்கு சென்றாலும் சந் திப்பது இல்லை. இதனால் இரண்டாம்  மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப் பின் முதல் சுற்று முடியும் நிலையிலும், கடை மடை விவசாயிகளுக்கு தண் ணீர் கிடைக்கவில்லை. எங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் இருப்பதற்கு  முழு காரணம் உடுமலை பொதுப்பணித் துறை மற்றும்  பிஏபி அதிகாரிகள் தான்  காரணம். விவசாயிகளை ஏமாற்றுவ தாக நினைக்கும் அதிகாரிகளின் செயல்  அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு செல்லும் தண்ணீர், அனைத்து விவ சாயிகளுக்கும் முறையாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.