சாதி, மதம் விபரங்கள் கேட்கும் தனியார் பள்ளி: ஆட்சியரிடம் புகார்
கோவை, செப்.2- கல்வி பயிலும் மாணவர்களிடம் சாதி, மத விப ரங்களை கட்டாயப்படுத்தி கேட்கும் தனியார் பள்ளி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் முற்போக்கு அமைப்பினர் புகார் அளித்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் திங்க ளன்று பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடை பெற்றது. வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, உதவி ஆட்சியர் (பயிற்சி) அங்கித் குமார் உள்ளிட்ட அதிகாரி கள் பங்கேற்றனர். கூட்டத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலர் கு.ராமகிருட்டி ணன் தலைமையில் திராவிடர் தமிழர் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனு அளித்த னர். அதில், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சில தனி யார் பள்ளிகள், தங்களது பள்ளியில் பயிலும் மாணவர்க ளின் ஜாதி, மதம் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்கும் படி கட்டாயப்படுத்தியதற்கு எதிராக முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், ஆதிதிரா விடர், பழங்குடியினர் மாநில ஆணையம் போன்றவற் றில் கடந்த ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. இதைய டுத்து, மாணவர்கள் மத்தியில் சமத்துவம், சகோதரத்து வம், முழுமையான வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் ஜாதி, மதம் சார்ந்த அடையாளங்களை பள்ளி மாணவர்க ளின் வீட்டுப்பாடக் குறிப்பேடு, சுயவிவரப் படிவத்தில் இந்த கல்வியாண்டு முதல் குறிப்பிடக்கூடாது என்று அனைத்து தனியார், சுயநிதி, மெட்ரிக், சிபிஎஸ்சி, நர்சரி பிரைமரி பள்ளி முதல்வர்களுக்கும் கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு, பீளமேடு பிஎஸ்ஜி மெட்ரிடிகுலேசன் பள்ளி, சித்தாபுதூர் பி.ஆர்.சித்தாநாயுடு மெமோரியல் பள்ளி, சொக்கம்புதூர் எஸ்பிஓ பள்ளி, புலியகுளம் வித்திய நிகேதன் பள்ளி, காரமடை வித்தியா விகாஷ், ஆர்எஸ்புரம் நேரு வித்தி யாலயா மற்றும் சின்மயா வித்தியாலாயா ஆகிய தனியார் பள்ளிகள் தங்களிடம் பயிலும் மாணவர் களின் ஜாதி, மத விவரங்களை இந்த ஆண்டும் கட்டாயப் படுத்தி பெற்றுள்ளன. சட்ட விரோதமான இந்த செயல் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை
சேலம், செப்.2- சேலம் மாவட்டத்தில் உள்ள நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூ திய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந் தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விளை யாட்டுத் துறையில் சர்வதேச/தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தின்கீழ், விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்ப டுகிறது. குறைந்தபட்ச தகுதியாக சர்வதேச/தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். விண் ணப்பதாரரின் வயது வரம்பு 31.08.2024 அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். மேலும், விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரமாக இருக்க வேண்டும். விண்ணப்பதா ரர்கள் செப்.30 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டேங்கில் பாம்பு
பெட்ரோல் டேங்கில் பாம்பு கோவை, செப்.2- இருசக்கர வாகன பெட்ரோல் டேங்கில் மண்ணுளிப் பாம்பு இருந்ததை கண்டு வாகன ஓட்டி அதிர்ச்சியடைந் தார். கோவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில், சாலை ஓரம் நிறுத்தி இருந்த தினேஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தில் மண்ணுளிப் பாம்பு இருந்தது. தனது வாகனத்தில் பெட்ரோல் உள்ளதா இல்லையா என பார்க்க இருசக்கர வாகனத்தின் டேங்கை திறந்த போது அங்கு பாம்பு இருப்பது தெரிய வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்த பாம்பு பிடி வீரர்சஜீஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்த னர். அங்கு வந்த சஜீஸ் பாம்பை லாவகமாக பிடித் தார். இந்த பாம்பானது அரிய வகை மண்ணுளிப் பாம்பு என்றும், வால் பகுதியும் தலை போன்று இருப்பதால் இரண்டு தலை உள்ள பாம்பு எனவும் இதைக் கூறுவர். மருத்துவத்துக்காக சிலர் இதை அதிக விலைக்கு விற்ப தாகவும் பாம்பு பிடி வீரர் தெரிவித்தார்.
விளம்பர தட்டிகளை அகற்ற அறிவுறுத்தல்
நாமக்கல், செப்.2- நடைபாதைகளை மறித்து வைக்கப்பட்டுள்ள விளம்பர தட்டிகளை அகற்ற வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, நாமக்கல் நகர காவல் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வணிக வளாகங் கள், நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு முன்னால் பாதசாரி கள் பயன்படுத்தும் நடைபாதையை வழிமறித்து வைக்கப்பட் டுள்ள விளம்பர போர்டுகள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றப்படாத நிலையில், மாநகராட்சி அதிகாரிகளின் உதவியோடு அவை அப்பு றப்படுத்தப்படும் எனவும், கடை உரிமையாளர் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் அறிவு றுத்தப்பட்டுள்ளது. காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வணிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இரவு நேரங்களில் கதவை தட்டும் கொள்ளையர்கள்
சேலம், செப்.2- சேலத்தில் நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டி, வடமாநில நபர்கள், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவ தால், அப்பகுதி பொதுமக்கள் அச்சம டைந்துள்ளனர். சேலம் மாவட்டம், சூரமங்கலம், ஆசாத் நகர் பகுதியில் நள்ளிரவில் ஐந்துக்கும் மேற்பட்ட வடமாநில கொள்ளையர்கள் கதவுகளை தட்டி கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். இப்பகுதியில் கண்காணிப்பு கேம ராக்கள் இல்லாததால் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடந்து வந்ததா கவும் கூறப்படுகிறது, இதனால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், ஞாயி றன்று நள்ளிரவில் வடமாநில கொள் ளையர்கள் அப்பகுதிக்கு வந்துள்ளனர். இதனையடுத்து ஒரு வீட்டிலிருந்து கொள்ளையர்களைப் பொதுமக்கள், பார்த்துக்கொண்டிருந்தபோது, அவர் கள் பக்கத்து வீட்டு மாடியில் ஏறி திருட முயன்ற போது அவர்களை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து கொள்ளை யர்கள் தப்பிக்க முயன்றனர். அவர் களை பிடிக்க முயன்றபோது அனைவ ரும் தப்பியோடிய நிலையில் ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினார். இதனைத்தொடர்ந்து சூரமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கட்டி வைக்கப்பட்டிருந்த நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்ற னர். இதையடுத்து நடைபெற்ற விசார ணையில், அந்த நபர் ஒடிசா மாநிலத் தைச் சேர்ந்த சந்தன் லிங்கா (25) என்ப தும், புதிய கட்டுமானப் பணிகள் நடை பெற்று வரும் வீடுகளில் உள்ள மோட் டார் பம்புகள், ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டின் கதவை உடைத்து திருடி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
மகளிர் திட்டத்தில் முறைகேடு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் புகார்
ஈரோடு, செப். 2- மகளிர் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக ஈரோடு மாவட் டம், வாய்ப்பாடி கிராம ஊராட்சி மன்ற உதவி தலைவர் விஜய லட்சுமி ஆட்சியரிடம் பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார். அம்மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டம், வாய்ப்பாடி ஊராட்சியில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் செயல்படுகிறது. மகளிர் திட்டம் மூலம் நடைபெறும் இப்பணிகளுக்கு சென்னிமலை வட்டார ஒருங்கிணைப் பாளர் படித்த பெண்களை தவறாக பயன்படுத்தி வரு கிறார். அவர்களை தவறாக வழிநடத்தி அதற்கான செயலி யில் தவறான பதிவுகளை இடுகிறார். இதுகுறித்து விசாரித்த போது, போலி கையொப்பங்கள் இட்டு காசோலைகள் வழங்குவது போன்ற முறைகேடுகள் நடப்பது தெரிய வந்தது. காசோலையில் ரூ.7 ஆயிரத்து 500 என்பதை ரூ.27 ஆயிரத்து 500 என மாற்றியது போன்ற விபரங்கள் தெரியவந்துள்ளன. கூடுதலாக எடுத்த பணத்தை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றுவது போன்ற முறைகேடுகள் நடந்து வருவது தெரிய வந்தது. மேலும் பயணப்படி கொடுப்பதாகவும், சான்றிதழ் கொடுப்பதாகவும் அழைத்து பயிற்சிக்கு அனுப்பப்பட்ட வர்களுக்கு எதுவும் வழங்கவில்லை. இதுபோன்ற முறை கேடுகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்: விண்ணப்பிக்க அழைப்பு
திருப்பூர், செப்.2- இது குறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக விளையாட்டு துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று, தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணைய தளம் மூலம் மட்டுமே வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச தகுதிகளாக தேசிய அளவி லான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பெற்றவர்கள், ஒன்றிய அரசால் நடத்தப் பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட் டிகள், அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 2024 ஆம் ஆண்டு 31.8.2024 ஆகஸ்ட் மாதம் 58 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதா ரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்கள் ஆகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூபாய் 6000 ஆக இருத் தல் வேண்டும். ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக் கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர் களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. மேற்காணும் விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் 1.9.2024 முதல் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 30.9.2024. இத்தேதிக்கு பின் னர் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள் ளப்படமாட்டாது. எனவே திருப்பூர் மாவட்டத்தில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் www.sdap.tn.gov. in என்கிற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெ றலாம் என தெரிவித்துள்ளார்.
அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்டுள்ள குளம் குட்டைகளை உடனடியாக இணைக்க சிபிஎம் வலியுறுத்தல்
அவிநாசி, செப்.2- அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் விடு பட்டுள்ள குளம், குட்டைகளை உடனடியாக இணைக்க வேண்டும் என அவிநாசி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகளில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில மாநாடு விழுப்புரத்திலும், அகில இந்திய மாநாடு மதுரையிலும் நடைபெற உள் ளது. இதையொட்டி, கட்சியின் ஒன்றிய மாநா டுகள், கிளை மாநாடுகள் பல்வேறு பகுதிக ளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதி யாக அவிநாசி ஒன்றிய பகுதியில் கிளை மாநாடுகள் நடைபெற்றது. இதில், அவிநாசி ஒன்றிய பகுதிகளில் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்டுள்ள குளம் குட்டைகளை உடனடியாக இணைக்க வேண்டும். அரசு பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்ப றைகள் கட்டி தர வேண்டும் உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள் ளது. இதைதொடர்ந்து, அம்மாபாளையம் பி கிளைச் செயலாளராக ஈஸ்வரன், ஏ கிளைச் செய லாளராக ராஜ், திருமுருகன் பூண்டி கிளைச் செயலாளராக சுப்பிரமணியம், ராக்கியாபா ளையம் கிளைச் செயலாளராக ராஜேந்தி ரன், உமையஞ்செட்டிபாளையம் கிளைச் செயலாளராக வையாபுரி, நடுவுச்சேரி கிளைச் செயலாளராக ராஜேஷ், செல்வபுரம் கிளைச் செயலாளராக முருகேஷ், செங்காடு கிளைச் செயலாளராக பன்னீர்செல்வம், வெங்கமேடு கிளைச் செயலாளராக சுபாஷ், அவினாசிலிங்கபாளையம் கிளைச் செயலா ளராக மணி, வஞ்சிபாளையம் தெற்கு கிளைச் செயலாளராக ஹனிபா, பொன் ராமபுரம் கிளைச் செயலாளராக துரைசாமி, பாரதி நகர் கிளைச் செயலாளராக மணி, முருகம்பாளை யம் கிளைச் செயலாளராக செல்வராஜ், கவுண்டம்பாளையம் மாதர் கிளைச் செயலா ளராக தங்கமணி, அவிநாசி வடக்கு கிளைச் செயலாளராக சந்திரசேகர், கருணைபாளை யம் மாதர் கிளைச் செயலாளராக பாப்பாத்தி, துளசிபுரம் கிளைச் செயலாளரக குமாரசாமி, அவிநாசி மாதர் கிளைச் செயலாளராக தேவி உள்ளிட்டோர் தேர்வாகியுள்ளனர். இந்த கிளை மாநாடுகளில் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், வேலுச்சாமி, சண்முகம், பழனிச்சாமி, பால சுப்பிரமணியம், கருப்புசாமி, தேவி, மோகன சுந்தரம், முருகன், வையாபுரி, பழனிச்சாமி, குமாரசாமி, ராஜன், காமராஜ், ஒன்றியச் செய லாளர் ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவுற்ற திட்டப் பணிகள்: அமைச்சர் திறந்து வைப்பு
திருப்பூர், செப்.2- திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் காரத்தொழுவு ஊராட் சியில் முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திங்களன்று திறந்து வைத் தார். மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் காரத் தொழுவில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பி னர்கள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.16.50 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை, ரூ.10.50 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம், ரூ.7.40 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தும் இடம், ரூ.3.30 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் என மொத்தம் ரூபாய் 37.70 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணி களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நாடா ளுமன்ற உறுப்பினர் கா.ஈஸ்வரசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கோ.மலர்விழி உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.
மார்க்சிஸ்ட் கட்சி போராட்ட அறிவிப்பு வெற்றி: நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கம்
திருப்பூர், செப். 2- வெள்ள கோவிலில் இருந்து பல் வேறு கிராமங்கள் வழியாக ஈரோட் டிற்கு சென்று வந்த அரசு பேருந்து தன் னிச்சையாக நிறுத்தப்பட்டதை கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்திருந்தது. இந்தப் போராட்ட அறிவிப்பை அடுத்து நிறுத் தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கப் படுகிறது. வெள்ளகோவிலில் தினமும் காலை 8.15 மணிக்கு துவங்கி ஒலப்பா ளையம், பூசாரி வலசு, பச்சாக்கவுண் டன் வலசு, வீர சோழபுரம், மோளக்குட் டப்பாளையம், வாலி பணங்காடு, லிங் கப்பகவுண்டன் வலசு, செலாம்பாளை யம், முள்ளிவாடிப் பாளையம், பழைய வெள்ளியம் பாளையம், புதுவெள்ளி யம் பாளையம், நத்தக்காடையூர் வழி யாக ஈரோட்டிற்கு காலை 10 மணிக்கு சென்றுடைந்து, பின்பு மாலை ஈரோட் டில் 4.20 மணிக்கு எடுத்து நத்தக்காடை யூர் வழியாக மாலை 6 மணிக்கு வெள்ள கோவில் சென்றுடையும் டி.என்.39 என். 0486 என்ற எண்ணுடைய அரசு பேருந்து வசதி கடந்த மாதம் 17ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டது. இப்பகுதி வாழ் பொது மக்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வலியு றுத்தி ஆகஸ்ட் 27ஆம் தேதி செவ்வாய் கிழமை காங்கயம் அரசு பேருந்து பணி மனை முன்பு போராட்டம் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்திருந்தனர். இந்தப் பேருந்து இயக்கப்ப டுவதால் நஷ்டம் ஏற்படுகிறது என்று சொல்லி நிறுத்தியதாக தெரிகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்ட அறி விப்பின் எதிரொலியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் இந்த பேருந்து இயக்கப்பட்டது. வழக்க மான வழித்தடத்தில் மேற்கண்ட கிரா மப்புறங்கள் வழியாக இந்தப் பேருந்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இதனால் ஓலப்பாளையம் மற்றும் கண் ணபுரம் பகுதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஈரோட்டிற்கும் அரச்சலூ ருக்கும் சென்று வருவதற்கு பயனுள்ள தாக இருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி யின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து மீண்டும் பேருந்தை இயக் கியுள்ள போக்குவரத்து கழகத்தின் காங்கேயம் கிளை நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நன்றி தெரிவித்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கை ஒருவர் தீக்குளிக்க முயற்சி
திருப்பூர், செப்.2- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று திருநங்கை ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப் போது ஆட்சியர் அலுவலக பகுதியில் திடீரென திருநங்கை ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன் றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து காவலர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் கல்லூரி சாலையை சேர்ந்த ஸ்ரேயா என்பது தெரிய வந்தது. தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்து போலீசாரிடம் ஸ்ரேயா கூறியதாவது, நான் கல்லூரி சாலையில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறேன். கடந்த வாரம் தனது கடையை பொதுமக்கள் மற்றும் சில திருநங்கை கள் அடித்து உடைத்தனர். என்னையும் தாக்கினர். இது குறித்து நான் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என் கடையை உடைத்து, என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
மாற்றுத்திறனாளியின் மனு தள்ளுபடி மீன்வளத்துறை வினோத விளக்கம்
ஈரோடு, செப்.2- வாய்பேச முடியாத, செவித்திறன் குறைபாடுடையவர் முதலமைச்சரின் தனிப்பிரிவில் கொடுத்த மனு தள்ளுபடி செய்வதற்கு மீன்வளத்துறை வினோதமான விளக்கத்தை அளித்துள்ளது. ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை, பாரதியார் வீதியில் வசித்து வருபவர் சீனிவாசன். மாற்றுத்திறனாளியான இவ ரால் வாய் பேச முடியாது. செவித்திறன் குறைபாடும் உடைய வர். 9ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந் நிலையில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வரு கிறார். இரு மகள்களும் கோவையில் விடுதியில் உயர் நிலைக்கல்வி பயின்று வருகின்றனர். வறுமையில் வாடும் தனது குடும்பத்தினைக் காப்பாற்ற கடன் உதவி கேட்டு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் மனு கொடுத்தார். அதில் மீன்கடை நடத்துவதற்கு உதவி கேட்டுள்ளார். அம்மனுவிற்கு மீன்வளம் மற்றும் மீன வர் நலத்துறை கடந்த 22ஆம் தேதி பதில் அளித்துள்ளது. அதில், மனுதாரரின் கோரிக்கை தொடர்பான எந்தவொரு விபரமும் இணைப்பில் இல்லை. மேலும், தொலைபேசி வாயி லாக பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனால் மனுதாரர் அழைப்பை ஏற்காததால் மனுதாரரின் கோரிக்கை என்ன வென்று அறிய இயலவில்லை. எனவே, அவரது மனு நிராக ரிக்கப்படுகிறது என வினோதமான விளக்கத்தை அளித் துள்ளனர்.
சாலைகளை சீரமைக்கக்கோரி தீர்மானம்
சாலைகளை சீரமைக்கக்கோரி தீர்மானம் தருமபுரி, செப்.2- சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என பாலக்கோடு பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருராட்சி அலுவ லகத்தில் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம், பேரூராட்சித் தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், பாலக்கோடு பேரூராட்சி பகுதியில் பொதுமக்க ளுக்கு இடையூறாக உள்ள தெருநாய்களை பிடிப்பது, பருவ மழை காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு தேவை யான அடிப்படை வசதிகளுக்கான பணிகளை மேற்கொள்ளு தல், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றுதல், அனைத்து வார்டு பகுதிகளிலும் பழுதான சிமெண்ட் மற்றும் பேவர்பிளாக் சாலைகளை சீரமைத் தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ் வில் பேரூராட்சி கவுன்சிலர்கள், துப்புரவு ஆய்வாளர் ரவீந்தி ரன், டெக்னிசியன், அலுவலர்கள், தூய்மைக் காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், பேரூராட்சித் துணைத்தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா நன்றி கூறி னார்.