கல்குவாரி குறித்து புகார் அளித்ததால் கொலை செய்ய முயற்சிப்பதாக புகார்
திருப்பூர், ஜூலை 8- ஊத்துக்குளி சர்க்கார் காத்தாங்கிகண்ணி கிராமத்தில் அமைந்திருந்த கல்குவாரி சட்டத்திற்கு புறம்பாக அதிகப்படி யான வெடி மருந்துகள் பயன்படுத்துவது, பாறைக்குழியிலி ருந்து வெடித்து சிதறும் கற்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வந் தனர். இது குறித்து புகார் அளித்ததன் காரணமாக கல்குவாரி மூடப்பட்டது. அதன்பின் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எனக்கு எதிரே வந்த பிக்கப் வாகனம் என் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது நல்வாய்ப்பாக உயிர் தப்பி விட்டேன். இந்த விபத்து கல்குவாரி உரிமையாளரின் திட்ட மிட்ட சதி என்று எனக்கு சந்தேகம் இருந்தது. ஊத்துக்குளி காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் கொடுத்தேன். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறை கண்காணிப் பாளர், காவல் துணை கண்காணிப்பாளர், சார் ஆட்சியர் ஆகி யோரிடமும் புகார் அளித்தேன். மேவும் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளரிடம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்த கடிதத்தின் நகல் எனக்கு அனுப்பப்பட்டது. ஆனால் காவல்துறையினர் இது குறித்து என்ன நடந்தது என்று என்னிடம் கேட்கவில்லை. எனது உயிருக்கு பாதுகாப்பு தர வேண்டிய காவல்துறையே சட்ட விரோத கல்குவாரி உரிமை யாளருக்கு துணை நிற்கிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என நடராஜன் கூறினார்.
விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி: இடைத்தரகர்களின் முறைகேடுகளை தடுக்க கோரிக்கை
உடுமலை, ஜூலை 8- விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுக்க வழங்கப்பட்ட அனுமதியில் இடைத்தரகர்கள் முறைகேடுகள் செய் வதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ள னர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியின் விவசாயிகள் விளைநிலங்க ளுக்கு தேவையான வண்டல் மண் எடுக்க இணைய வழியில் வட்டாட்சியர் அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதன்படி நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் உடு மலை திருமூர்த்தி நகரில் தளிக்குளம், வடபூதிநத்தம் பெரியகுளம், சின்னவா ளவாடி பெரியகுளம், தென்பூதிநத்தம் கரிசல்குளம் மற்றும் தெனைக்குளம் ஆகிய குளங்களிலும், ஊராக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் இருக் கும் குடிமங்கலம் ஆரம்ப சுகாதார மையத்தின் மேற்கு பகுதி, அமந்தகடவு அம்மாபேட்டை குளம் மற்றும் செங்கு ளம், ஆத்துகிணத்துபட்டி மேற்கு பகுதி எடி காலணி பொதுகுளம், செல்வராஜ் தோட்டம் குட்டை அருகில், கொங்கல் நகரம் வடக்கு பகுதி குளம், பண்ணை கிணறு தெற்கு பகுதி குளம், சோமார பட்டி பொட்டியநாயக்கனூர் குளம், வீதம்பட்டி குளத்து விநாயகர் கோவில் குளம், விருகல்பட்டி புதூர் குளம் மற் றும் கருவேலான்குளம் மற்றும் உடு மலை ஆண்டியகவுண்டனூர் பெரிச னம்பட்டி குளம், பூலாங்கிணறுகுளம், பெரியவாளவாடி சம்டியார்குளம், கோவிந்தாபுரம் நஞ்சுண்டாபுரம்குளம், மத்தியாபுரம் கிழக்கு குளம் மற்றும் கல் ரமடை குளம், பொன்னாபுரம் அங்கிதொ ழுவு, பனபாளையம் தெற்குகுளம் மற் றும் தாசர்பட்டி வடக்கு குளம், பொட்டி கம்பாளையம் நல்லூர் ஓடை, பல்லக் காடு குளம் மற்றும் முண்டுவேலம்பட்டி, மற்றும் உடுமலை தொப்பம்பட்டி வெங்கிகல்பாளையம் குளங்கள், ரங் கம்பாளையம் குளம். மேலும், மடத்துக் குளம் ராமேகவுண்டன்புதூர் அரண் மனை குளம் மற்றும் மெட்ராத்தி குளம், பனத்தம்பட்டி ஈரசவள்ளிகுளம் மற்றும் பனத்தபட்டி குளம், வேடபட்டி அரண் மனை குளம் ஆகிய குளங்களில் விவ சாயிகள் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. கடந்த முறை விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுக்க வழங்கப்பட்ட அனுமதியில் இடைத்தரகர் களால் பல முறைகேடுகள் நடை பெற்றது. இம்முறை அதேபோல் இல் லாமல் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மண் எடுக்கும் குளங்களில் தொடர் ஆய்வு கள் மேற்கொள்ள வேண்டும். விவசாய பயன்பாட்டிற்கு எடுத்த மண்னை விளைநி லங்களில் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை மீறுபவர்கள் மீது தக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். கனரக வாக னங்களில் எடுத்து செல்லப்பட்ட மண் சாலைகளில் கொட்டப்படாமல் இருக் கும் வகையில் தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும். பல குளங்களில் அர சின் அனுமதியை மீறி கிராவல் மண் எடுப்பதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள் ளார்கள்.
கிராமங்களில் சுகாதார சீர்கேடு: காய்ச்சல் பரவும் அபாயம்
உடுமலை, ஜூலை 8- உடுமலை சுற்றுவட்டார பகுதியில் சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காய்ச் சல் பரவி வருகிறது. மேலும், நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உடுமலை , குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் குப்பைகள் மற்றும் சாக்கடைகளை தூய்மைப் படுத்த போதிய ஊழியர்கள் இல்லை. இதனால், பல இடங்களில் சாக்கடை மற்றும் தெருக்களில் குப்பைகள் தேங்கி உள்ளது. இந்த சுத்தப்படுத்தாத குப்பை மற்றும் சாக்கடைகளால் தற்போது வேகமாக காய்ச்சல் பரவி வருகிறது. மேலும் பலருக்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொது மக்கள் தெரிவிக்கையில், எங்கு பார்த்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சலுடன் மருத்துவ மனைக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் முறையாக குடிநீர் கிடைப்பது இல்லை. மேலும் சாக்கடைக்களை சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கா மல் உள்ளது என்றார்கள். வேகமாக பரவி வரும் காய்ச்சல் குறித்து பொது மக்களுக்கு அரசு சார்பில் விழிப்புணர்வு செய் யவும், அனைத்து பொது இடங்களையும் சுத்தமாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக் கையாக உள்ளது.
ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு
தருமபுரி ஜூலை- 8 தருமபுரி மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மீது வன்கொடுமை தடுப்புசட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட் டது தடங்கம் ஊராட்சி. கவிதா முருகன் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இவரின் கணவர் தூய்மைப் பணியாளரை தரைக்குறைவாக பேசியுள்ளார். சுப்பிரமணி என்பவர் கடந்த 4 ஆம் தேதி தேசிய துப்புரவு ஆணையர் முகாமில் புகார் கொடுத் தார். அந்த புகாரின் அடிப்படையில் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் விஜய்சாரதி விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவான ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரை தேடி வருகின்றனர்.
ஓய்வு காலப் பயன்கள் அளிக்காத துணி நூல் துறை
ஈரோடு ஜூலை 8- கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பெண் ஒருவருக்கு பணப்பயன்கள் வழங்காதது குறித்து ஆட்சியரிடம் அவர் முறையிட்டார். திருச்செங்கோடு, செப்பாறையில் வசிப்பவர் வசந்தா மணி. இவர் ஈரோடு-பவானி சாலையிலுள்ள தமிழ்நாடு கூட்டு றவு துணி நூல் பதனிடும் ஆலையில் தொழில்நுட்ப மேற்பார் வையாளராகப் பணியாற்றி, பதவி உயர்வு பெற்று இறுதியாக கூடுதல் மேலாளராக பணியாற்றினார். இவர், கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றார். அப்போது அவருக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பணிப்பயன்களை வழங்கவில்லை. அதுகுறித்து விசாரித்த போது, அங்கு செயல்பட்டு வந்த ஆலை பணியாளர் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் சுசீலா என்பவர் கடன் பெற்றிருந்ததும், அதற்கு வசந்தாமணி பிணை அளித்தி ருப்பதாக மோசடியாக ஜோடிக்கப்பட்டிருந்தது. இது மோசடி என தெரிந்த பின்னரும்,ஓய்வு கால பணிப்பயன்களை நிறுத்தி வைத்திருப்பது நீதியல்ல, கணவனால் கைவிடப்பட்டு, குழந் தையில்லாமல் தனித்து வாழும் பெண்ணான தனக்கு உரிய பணிப்பயன்கள் வழங்க ஆட்சியர் தலையிட வேண்டும் என வசந்தாமணி மனு அளித்தார்.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சாதித்த கிராம அரசு மருத்துவமனை
கோவை, ஜூலை 8- கொதிக்கும் எண்ணெயில் கையை விட்ட சமையலரின் கையை ஒரே நாளில் பிளாஸ் டிக் சர்ஜரி செய்து தனியார் மருத்துவம னைக்கு நிகராக கிராமப்புற அரசு மருத்துவ மனை சாதித்துள்ள சம்பவம் பொது மக்க ளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் இவர் சமையல் வேலை செய்து வருகிறார். தாராபுரத்தில் உள்ள சமையல் கூடம் ஒன்றில் கடந்த சில வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கம்போல் வேலைக்கு சென்றபோது கொதிக்கும் எண்ணெயில் தெரியாமல் கையை விட்டுள்ளார். இதில் அவரது கை முழு வதும் எண்ணெயில் பட்டு காயங்கள் ஏற்பட் டது. முழுவதும் தோல் கருகிய நிலையில் எலும்புகளும் அசைவு இல்லாமல் இருந்துள் ளது. இதனையடுத்து கோவை மாவட்ட, புறந கர் பகுதியில் உள்ள சூலூர் அரசு மருத்துவ மனையில் எலும்பு மற்றும் சிறப்பு மருத்து வப் பிரிவில் சண்முகத்துக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் கை முழுவ தும் காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) அளிக்கப்பட்டது. மேலும், எலும்புகள் சரி வர இயங்குவதற்கான சிகிச்சையும் கொடுக் கப்பட்டது. இச்சிகிச்சையால் அவரின் கை முழுவதுமாக செயல்பட தொடங்கியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் செய்யப் படும் இது போன்ற சிகிச்சை கிராமப்புறத் தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒட்டு றுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்ப வம் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள் ளது. மேலும் இந்த சிகிச்சை வெற்றி அடைந் ததை அடுத்து மாவட்ட சுகாதார இணை இயக் குனர் மருத்துவர் ராஜசேகரன் மற்றும் மருத் துவமனை தலைமை மருத்துவர் வாணி ரங்க ராஜன் ஆகியோர் இந்த அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மற்றும் மருத்துவக் குழுவி னரை பாராட்டினர். இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த கஜேந்திரன் மருத்துவர் பேசும்போது, கோவை மாவட்டம், மருத்துவக் கல்லூரி யில் கொடுக்கப்படும் சிகிச்சை போன்று கிரா மப்புறத்தில் உள்ள அரசு மருத்துவமனையி லும் இது போன்ற சிகிச்சையை செய்ய முடி யும் அதற்கான வசதிகள் இந்த மருத்துவம னையிலும் இருப்பதால் இதுபோன்ற சிகிச் சைகள் எளிதில் செய்ய முடிகிறது. அரசு மருத் துவமனையில் எலும்பு சார்ந்த தீக்காயங்கள் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் எளி தில் சரி செய்யப்படுகிறது. இது போன்ற ஒட்டு றுப்பு அறுவை சிகிச்சைகள் செய்வது என்பது பொதுமக்களுக்கு எளிதில் பயன்பெறும் என் பது அரசாங்கத்தின் நோக்கம் என்பதால், இது இங்கு சாத்தியமாகி வருகிறது என தெரி வித்தார். இந்த சிகிச்சை பெற்ற சண்முகத்தின் மனைவி தவச் செல்வி பேசும்போது, 90 சதவீகி தம் காயத்துடன் இங்கு வந்தோம். மருத்து வர்கள் உதவியினால் மீண்டும் கை பழைய நிலைமைக்கு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
கருவில் பாலினத்தை கண்டறிந்து கைதான சமையலர் தற்காலிக பணிநீக்கம்
தருமபுரி ஜூலை -6, கருவில் பாலினத்தை கண்டறியும் குழுவில் கைதான சமையலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம், நடப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு மைய சமையலராக பணிபுரி வர் லலிதா. இவர், கருவில் இருக்கும் குழந்தையின் பாலி னத்தை கண்டறிந்து கூறும் குழுவிற்கு இடைத்தரகராக செயல்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, இவரை கடந்த 28 ஆம்தேதி பென்னாகரம் காவல்துறையினரால் செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் காரணத்தினால் 28.06.2024 பிற்பகல் முதல் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலை வரால் தற்காலிக பணிநீக்கம் செய்வதாக உத்தரவிடப்பட் டுள்ளது.
வீட்டுமனை பட்டா கேட்டு மனு
வீட்டுமனை பட்டா கேட்டு மனு தருமபுரி ஜூலை 8- இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மிட்டாநூல அள்ளி கிராமத்தை சேர்ந்த மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சி யர் கி.சாந்தியிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம் நூல அள்ளி ஊராட்சிக்கு உட்பட் டது மிட்டா நூல அள்ளி கிராமம். இங்குள்ள பெரும்ப குதி மக்கள் கூலி வேலை மற்றும் நூறுநாள் வேலை திட்டத்தில் வேலை செய்து பிழைப்பு நடத்திவரு கின்றனர். இங்குள்ளவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு அதிகாரிகளிடம் மனுகொடுத்தனர். இதில் 25 நபர்களுக்கு மட்டும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மீதம் 50 நபர்களுக்கு வழங்க வில்லை. இவர்கள் வீடு இல்லாமல் ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்களாக வாழ்ந்து வருகின்ற னர். எனவே, எஞ்சியிருக்கும் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மனு
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மனு பொள்ளாச்சி, ஜூலை 8- எருமைப்பாறை கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கிட துரித நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தினர் பொள்ளாச்சி சார் ஆட்சிய ரிடம் மனு அளித்தனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகி பத்மினி சார் ஆட்சியர் அ.கேத்ரின் சரண்யாவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை டாப்சி லிப், உலாந்தி வனச்சரகத்தில் எருமைப்பாறை வனக்கி ராமம் உள்ளது. இங்குள்ள பழங்குடி மக்கள் குடியிருப்புக்காக, தமிழ்நாடு மின் வாரியம் டிரான்ஸபார்மர் அமைத் திருந்தது. இதற்கு, வனத்துறை நிதி ஒதுக்காத காரணத் தால் தற்போது அகற்றப் போவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மேலும், உடனடியாக எருமைப்பாறை கிரா மத்திற்கு மின் இணைப்பு வழங்கிட வேண்டும். உலந்தி வனச்சரகத்திற்குட்பட்ட கோழிகமுத்தி, கூமாட்டி, வனக் கிராமத்திற்கும் விரைவில் மின்வசதி செய்து தர வேண்டும் என மனு அளித்துள்ளனர்.
தாய் மற்றும் இரண்டு மகள்கள் சடலமாக மீட்பு
தாய் மற்றும் இரண்டு மகள்கள் சடலமாக மீட்பு கோவை, ஜூலை 8- வீட்டினுள் தண்ணீர் தொட்டியில் தாய் மற்றும் இரண்டு மகள்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், ஒண்டிபுதூர் அடுத்த நெச வாளர் காலனி பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஹரிணி(9), ஷிவானி(3) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். தங்கராஜ் தொடர்ந்து மது அருந்திவிட்டு மனைவி யிடம் தகறாறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தங்கராஜ், தனது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதப்பதாக அக்கம்பத்தினரை அழைத்துள் ளார். இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த சிங்கநல்லூர் போலீஸார் தொட்டியில் இருந்து மூவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து காலை நேரத்திலும் போதையில் தள்ளாடிய தங்கராஜை பிடித்து போலீ சார் விசாரணை மேற்கொண்டதில், ஞாயிறன்று இரவு மனைவிக்கும் தனக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், தனது மூத்த மகள் ஹரிணியை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசியதாகவும், அதனைத் தொடர்ந்து மனைவி மற்றும் இளைய மகள் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தங்கராஜை காவல் நிலை யத்திற்கு அழைத்து வந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து மற்ற இருவரும் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது மகள் இறந்த துக்கத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டார் களா? என்பது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதையில் தங்கராஜ், புஷ்பாவை அடிக்கடி தாக்கி, தகராறு செய்து வந்ததா கவும், தற்போது மூவரையும் கொலை செய்து விட்டதா கவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோவை யில் தாய் மற்றும் இரு குழந்தைகள் தண்ணீர் தொட்டி யில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சாதி மறுப்பு திருமண செய்தோருக்கு பாதுகாப்பு அளித்திடுக முற்போக்கு அமைப்பினர் ஆட்சியரிடம் மனு
கோவை, ஜூலை 8- சாதி மறுப்பு திருமண ஜோடிக ளுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி முற்போக்கு அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர். சாதி மறுப்பு திருமணம் செய்துள்ள ஜோடிகளுக்கு எதிரான வன்முறை களை தடுத்து நிறுத்துவதற்கும், அவர்க ளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கும் கோரி கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு சமூக, ஜனநாயக மற்றும் மனித உரிமை இயக்கங்கள் இணைந்து திங்களன்று கோவை மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் அவர்கள் கூறப்பட்டு ள்ளதாவது, சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிகளுக்கும், காதல் ஜோடிகளுக்கும் எதிரான வன்மு றைகள் மற்றும் கொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். சாதி மறுப்பு திருமணம்செய்த ஜோடிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் கள் மற்றும் தாக்குதல்களை விசாரிக்க தனிப்பிரிவு அமைக்க வேண்டும். தனிப்பிரிவில் புகார்களை எளிதாக பதிவு செய்வதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். இந்த தனிப்பி ரிவின் செயல்பாடுகளை கண்கா ணிக்க காவல்துறை உயர் அதிகா ரிகள் நியமிக்கப்பட வேண்டும். சிறப்பு பிரிவில் ஆலோசகர்களை நியமிக்க அனுமதி வழங்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடி கள், காதல் ஜோடிகளை குறி வைத்து நடக்கும் வன்முறைகள் தடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்க ளுக்கு நீதி கிடைக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில், ஆதித்தமிழர் பேரவை ரவிக் குமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆறுச்சாமி, விசிக குரு, புரட் சிகர இளைஞர் முன்னணி மலரவன், பியுசிஎல் ச.பாலமுருகன், மற்றும் நேருதாஸ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று ஆட்சியரிடம் மனு அளித் தனர்.