கோவை, அக்.24- அரசு இடஒதுக்கீட்டின் கீழ் தேர்வான பழங்குடி மாண வரிடம் பன்மடங்கு கட்டணம் கேட்கும் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, புதனன்று மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய். பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இவர், குஞ்சபனை அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளியில் பன்னி ரெண்டாம் வகுப்பு முடித்துள்ளார். 12 ஆம் வகுப்பில் 600க்கு 489 மதிபெண் பெற்று அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் கோவை ரத்தினம் கல்லூரியில் பிசியோதெரபி படிக்க தேர்வாகி இருக் கிறார். இந்நிலையில், புதனன்று கல்லூரிக்குச் சென்ற போது, இரண்டு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தினால் மட்டுமே கல்லூரியில் சேர முடியும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதாக தெரிகிறது. ஆனால், 30,000 ரூபாய் மட்டுமே கட்டணமாக அரசு நிர்ணயத் துள்ளது. இந்நிலையில், தன்னிடம் அதிக தொகையை கல்லூரி நிர் வாகம் கட்டணமாக செலுத்தும் படி கேட்பதாகவும், வறுமை யில் வாழ்ந்து வரும் தங்கள் குடும்பத்தால் அவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாது என்றும், மேற்கல்வியை தொடர உதவுமாறு கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தார்.