நாமக்கல், ஜூன் 25- தங்க மண்ணை அள்ள தடுத்தவர் களின் வீடுகளை இடித்து தள்ளுவோம் என தனது அடியாட்களை கொண்டு மிரட்டுவதாக ஊராட்சி மன்றத் தலை வர் மீது நாமக்கல் ஆட்சியரிடம் பொது மக்கள் புகார் அளித்தனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்க லம் அடுத்துள்ள முத்துக்காப்பட்டி மேதரா மாதேவி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல் ஆட்சியர் அலு வலகத்தில் கோரிக்கை மனுவினை திங்களன்று அளித்தனர். அதில், சேந்த மங்கலம் அடுத்துள்ள முத்துக்காப்பட்டி மேதரமாதேவியில் கிராம பொது மக்க ளுக்கு 1972 ஆம் வருடம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் முத்து காப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அருள் ராஜேஷ் என்பவர் ஊரில் உள்ள பாழடைந்த கிணற்றை மூடியதில், தங்க மண் துகள் இருப்பதை அறிந்து, அதை கள்ளத்தனமாக திருட முயற்சி செய் தார். இதை அப்பகுதி பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரம் கொண்ட ஊராட்சி மன்றத் தலைவர் பழி வாங்கும் நடவடிக்கையை மேற் கொண்டு வருகிறார். மேலும், தங்க மண்ணை அள்ள தடுத்தவர்களின் வீடு களையும், தனக்கு எதிராக பேசி வரும் நபர்களின் வீடுகளையும் சாலை விரி வாக்கம் என்ற பெயரில் வீடுகளை இடித்து தள்ளுவோம் என தனது அடி யாட்களை கொண்டு மிரட்டி வருகி றார் என தெரிவித்துள்ளனர்.