அவிநாசி, டிச.21- பாஜகவைச் சேர்ந்த ஊராட்சி மன் றத் தலைவர், 100 நாள் வேலை திட்டத் தில் பொய்யாக கணக்குகாட்டி பணம் எடுத்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி வெங்கமேடு பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்பாடு கள் குறித்து தணிக்கை செய்யப் பட்டு, சிறப்பு கிராம சபை கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், 2023-24 ஆம் ஆண்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாப் பாத்தி மற்றும் சென்னியம்மாள் ஆகி யோருக்கு வெவ்வேறு குடும்ப எண் வழங்கி, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்கப் பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 7,402 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல பணிசெய்யாத 6 நபர்களுக்கு பணி செய்ததாக நபர் ஒன்றுக்கு 1685 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. சாமந்தங்கோட்டை பகுதியில் பணி கணக்கு விவர பலகை வைக்கா மலே, வைக்கப்பட்டதாக கூறி 4,500 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சாலை பணிகளில் ஒரு லட்சத்து 92 ரூபாய் நிதி இழப்பீடாக காட்டப்பட் டுள்ளது. பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டும் திட்டத்தில் காந்திமதி மற் றும் கவிதா ஆகியோருக்கு முழு தொகை ரூபாய்1 லட்சத்து 20 ஆயி ரம் வழங்கப்பட்டது. ஆனால் வீட்டின் அடித்தளம் மட்டுமே கட்டப்பட்டுள் ளது. மேலும் பொதுமக்கள் புகார் பதிவேடு முறையாக பராமரிக்கப்ப டவில்லை என தணிக்கை செய்த அதி காரி சுட்டிக்காட்டியுள்ளார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுப்பாளையம் ஊராட்சி கிளைகள் சார்பில் மனு அளிக்கப்பட் டது. அதில், பாஜகவை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கஸ்தூரி பிரியா 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு வராத பல்வேறு நபர்களை கணக்கு காட்டி பணம் எடுத்துள்ளார். மேலும், சாமந்தங்கோட்டைமுதல் மேற்கு வஞ்சிபாளையம் வரை 2 கிலோ மீட்டருக்கு சாலை அமைக் கும் பணியில் முறைகேடு செய்துள்ள தாக கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப் பினர் முருகன், ஊராட்சி மன்ற உறுப் பினர்கள் பாலசுப்பிரமணியம், குமர வேல், கிளைச் செயலாளர் ஹனிபா, முன்னாள் செயலாளர் ஈஸ்வரன், கதிர்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.