உடுமலை, ஜூலை, 2- சாக்கடைக் கழிவுகளை அகற்றுவது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் இடையில் போட்டியுள்ளதால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில், மடத்துக்குளம் அருகே காரத்தொ ழுவு, மடத்துக்குளம் முதன்மைச் சாலை யில் அமைந்துள்ள, கணியூர் பேரூ ராட்சி பகுதிக்கு அருகில் இருக்கும் ஜோத்தம்பட்டி ஊராட்சியின் கட்டுப் பாட்டில் உள்ள சாக்கடைக் கழிவு நீர் வடி கால் கால்வாய் நிரம்பி கணியூர் பேரூ ராட்சி பகுதியில் இருக்கும் தார் சாலை யில் ஓடுகிறது. ஜோத்தம்பட்டி ஊராட்சி யில் இருந்து வரும் கழிவுநீர் சாக்கடை என்று கணியூர் பேரூராட்சி நிர்வாகம் காலம் கடத்தி வருகிறது. சாக்கடைக் கழிவு நீர் சாலையில் ஓடுவதால் மக்க ளுக்கு தொற்று நோய்கள் பரவும் அபா யம் ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக தின சரி இருசக்கர, நான்கு சக்கர, சரக்கு லாரிகள், அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், பள்ளி வாகனங்கள் செல் கிறது. கழிவுநீர் சாக்கடை தேங்கியுள்ள இப்பகுதியில் பொது சுடுகாடு, சிறிது தூரத்தில் தனியார் பள்ளி, பெட்ரோல் பங்க், கணியூர் காவல் நிலையம், அரசு மாணவர் விடுதி என தினமும் ஆயிரக் கணக்கானோர் கடந்து செல்லும் இட மாக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில், இறந்து போன கோழிகள், கோழிக் கழிவுகள், இறந்து போன விலங்குகள், உணவக கழிவுகள் சாலையில் சிதறிக் கிடக்கின்றன. எனவே பொது மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர்.