சேலம், நவ.9- சேலம், பூசநாயக்கனூரில் சாதியவாதிகளின் தாக்குத லில் வீடு சேதமடைந்த நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு அரசு சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம், பூசநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த வர் சதீஷ்குமார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சதீஷ்குமா ரின் உறவினர் விஜய் என்பவருக்கும், சாதி ஆதிக்கவாதி கள் சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின் அங்கி ருந்து விஜய் சென்றுவிட்டார். இந்த தகராறு காரணமாக கோபமடைந்த 10க்கும் மேற்பட்டோர் விஜயின் உறவினர் சதீஷ்குமாரின் இல்லத்திற்கு வந்து வீட்டின் கூரை பகுதி யில் ஏறி அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த டிவி மற்றும் கேமரா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேதமானது. சதீஷ்குமார் உட்பட 4 பேர் படு காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். இச்சம்பவம் குறித்து இரும்பாலை காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து, ஏழு சிறுவர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பல்வேறு அமைப்புகள் அவரது வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறி சென்றனர். தமிழக அரசு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து சேலம் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள், இரும்பாலை காவல் துறையினருடன் சதீஷ் குமார் இல்லத்திற்கு சென்று நிவாரணத் தொகையை வழங்கி னர். வன்கொடுமை சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படும். ஆனால், முதற் கட்டமாக ரூ.30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதி தொகை 74 ஆயிரத்து 750 ரூபாய் விரைவில் வழங்கப்படும் எனவும், தற்போது வழங்கப்பட்டுள்ள ரூ.30 ஆயிரத்தை தவிர மீதி பணத்தில் வீடு பராமரிப்பு செலவிற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து சென்ற னர்.