districts

img

நகர்ப்புற நல வாழ்வு மையத்தைத் திறக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், ஜன.8- திருப்பூர் 25ஆவது வார்டுக்கு உட் பட்ட சிறுபூலுவபட்டியில் சுடுகாட்டுக்கு  ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்டப்பட் டுள்ள குப்பைக் கழிவுகளை அகற்ற  வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் தட்டி வைத்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி, 25 ஆவது  வார்டுக்கு உட்பட்ட சிறுபூலுவபட்டியில்  சுடுகாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு வரு தால், அப்பகுதியில் உள்ள பனியன் நிறு வனங்களில் பணியாற்றும் ஆயிரக்க ணக்கான தொழிலாளர்கள், கடை உரி மையாளர்கள், வட்டாரப் போக்குவ ரத்து அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளா கின்றனர். இதுகுறித்து, மேயர் உட்பட பல அதி காரிகளுக்கு புகார் அளித்தும் நடவ டிக்கை எடுக்கவில்லை என அங்குள்ள  கடைக்காரர்களும், பனியன் தொழிலா ளர்களும் தெரிவித்தனர். இந்நிலை யில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அணைப்பாளையம் - ரங்கநாதபுரம் கிளைகளின் சார்பில் குப்பைக் கிடங்கை  அப்புறப்படுத்த வலியுறுத்தி தட்டி வைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற நல மையத்தை திறக்க வலியுறுத்தல்: அதேபோல்  திருப்பூர் மாநகராட்சி 15  ஆவது வார்டுக்கு உட்பட்ட அவிநாசி கவுண்டம்பாளையம் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் இடிக் கப்பட்டு, நகர்ப்புற நல வாழ்வு மையம்  கட்டப்பட்டது. இந்நிலையில் கட்டிட  பணிகள் முழுமையாக நிறைவடைந் தும் திறப்பு விழா நடைபெறாமல் உள் ளது. இந்த நகர்ப்புற நல வாழ்வு மையத்தை உடனடியாக திறக்க வேண் டும். மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி  போராட்டம் நடத்துவோம் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கேரி பாளையம் கிளை சார்பில் தட்டி வைக் கப்பட்டுள்ளது.