districts

img

வனவிலங்கு குடிநீர் தொட்டியை சீரமைக்கும் பணி துவக்கம்

மேட்டுப்பாளையம், ஜன.25- வனவிலங்குகளுக்கான குடிநீர் தொட்டிகள் பராமரிப்பின்றி கிடப்ப தாக தீக்கதிர் நாளிதழில் செய்தி  வெளியான நிலையில், தற்போது தண்ணீர் தொட்டிகள் மற்றும் வனக் குட்டைகளை  வனத்துறையினர் சீர மைக்கும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். யானை உள்ளிட்ட வனவிலங்கு கள் தாகம் தீர்க்க ஊரை ஒட்டியுள்ள வனப்பகுதிக்குள் வனத்துறையின ரால் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட் டிகள் மற்றும் வனக்குட்டைகள் போதிய பராமரிப்பின்றி கிடந்தன. இதனால் நீரைத்தேடி ஊருக்குள் நுழையும் யானைகளின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. இப்பிரச் சனையை கவனத்தில் கொண்டு வன விலங்குகளின் தண்ணீர் தாகத் தினை பூர்த்தி செய்ய வனத்துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மனித - விலங்க மோதல்கள் அதிகரிக்கும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையே இதுகுறித்த கட்டுரை தீக்கதிர் நாளி தழில் கடந்த திங்களன்று வெளியா னது. இச்செய்தியின் எதிரொலியாக வனத்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளை யம் வனச்சரகதிற்கு உட்பட்ட தண் ணீர் தொட்டிகள் மற்றும் சிறுமுகை வனச்சரகதிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வனக்குட்டைகள் சீரமைக்கும் பணியில் வனத்துறையினர் இறங் கியுள்ளனர். வனத்துறை அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் வனப்பணி யாளர்கள் தொட்டிகளை சுத்தம் செய்து வருவதோடு, பொக்லைன் இயந்திரங்களின் உதவியோடு வனக் குட்டைகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தண்ணீர் தொட்டிகளில் தற்போது புதிய நீர் நிரப்பட்டு வருவ தால் காட்டு யானைகள் நீரைத்தேடி மீண்டும் தண்ணீர் தொட்டிகளை நோக்கி வரத் துவங்கியுள்ளன. இத னால் மகிழ்ச்சியடைந்துள்ள வன  உயிரின ஆர்வலர்கள் தங்களது நன் றியினை தெரிவித்து கொண்டனர்.