ஈரோடு, ஜூன் 17- போட்டித் தேர்விற்கான மாதிரி தேர்வுகள், பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா ஈரோட்டில் ஞாயிறன்று துவங்கியது. ஈரோட்டில் தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு சார்பில், டீம் அகாடமி நடத் தும் போட்டித் தேர்வுகளுக் கான மாதிரி தேர்வுகள், பயிற்சி வகுப்பு கள் தொடக்கவிழா அகாடமி தலைவர் ப.மாரி முத்து தலைமையில் துவங்கிது. ஈகேஎம் அப் துல்கனி மதரஸா இஸ்லாமிய உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அகா டமியின் செயலாளர் ஏ.ஹாத்திம்தாய் வரவேற் றார். வாசவி கல்லூரியின் முன்னாள் முதல் வர் எஸ்.ஜெயசங்கர், கருடா ஹோம்ஸ் எம். ரவிச்சந்திரன், பள்ளியின் தலைவர் ஜி.முக மது தாஜ் முஹையித்தீன், காசிபாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கே.துரை ராஜ், நுகர்வோர் பாதுகாப்பு மைய முன்னாள் செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில், அகாடமி பொருளாளர் ஆர்.அர்ஜுனன் நன்றி கூறினார்.