districts

img

கோவை - அபுதாபி இடையே விமான போக்குவரத்து துவக்கம்

கோவை, ஆக.10- கோவை - அபுதாபி இடையே நேரடி விமான சேவை சனியன்று தொடங்கி யது. பயணிகள் மற்றும் தொழில் அமைப் புகள் தரப்பில் தொடர்ந்து பல ஆண்டுக ளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் கோவை - அபுதாபி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இண்டிகோ  நிறுவனம் சார்பில் விமான சேவை  தொடங்கப்பட்டுள்ளது.  சனியன்று காலை 6.40 மணியள வில் அபுதாபியில் இருந்து கோவை வந்த விமானத்தில் 163 பயணிகள் பய ணித்தனர். மீண்டும் காலை 7:30 மணிய ளவில் கோவையில் இருந்து 168 பய ணிகளுடன் விமானம் அபுதாபி புறப் பட்டு சென்றது.  இதுகுறித்து தொழில்துறையினர் கூறும் போது, கோவை- அபுதாபி இடையே விமான சேவை தொடங்கப் பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கி றது. பல்வேறு உலக நாடுகளுக்கு கோவையிலிருந்து செல்ல இந்த விமான சேவை பெரிதும் உதவும். என்ற னர்.  முன்னதாக கோவை விமான நிலை யத்தில் தரையிறங்கிய விமானத்திற்கு  இருபுறங்களிலும் தீயணைப்பு துறை வாகனம் மூலம் தண்ணீர் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.