லாரியில் திடீர் தீ விபத்து
மேட்டுப்பாளையம், செப்.11- மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் ஈச்சர் லாரியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார். கடலூர் மாவட்டம், ஆலத்தூர் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற் றிக்கொண்டு செவ்வாயன்று காலை மேட்டுப்பாளையத் தில் உள்ள ராம்கோ சிமெண்ட் குடோனுக்கு ஈச்சர் லாரி ஒன்று வந்துள்ளது. அங்கு சிமெண்ட் மூட்டைகளை இறக்கி வைத்து விட்டு செவ்வாயன்று இரவு சுமார் 11 மணியளவில் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் இந்தியன் வங்கி அருகே சென்று கொண்டிருந்துள்ளது.அப்போது, திடீரென ஈச்சர் லாரியின் இன்ஜினில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக லாரியை ஓட்டி வந்த விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்த முனியசாமி (50) என்பவர் லாரியிலிருந்து குதித்து உயிர் தப்பினார். பின்னர் அக்கம்பக்கத்திலிருந்த நபர்கள் மண் மற்றும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர். இது குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் எவருக்கும், எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. லாரியின் முன்பக்கம் முழுவதுமாக தீயில் எரிந்து தீக்கிரையானது. இச்சம்பவம் குறித்து தீயணைப்புத்துறையினர் மற்றும் மேட்டுப்பாளையம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். எப்போதும் பரபரப்பான உதகை சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிப்பு
கோவை, செப்.11- முற்போக்கு இயக்கங்களின் சார்பில், கோவையில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்வு நடைபெற்றது. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்வு காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு புதனன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவர் யு.கே.சிவஞானம், மாவட்டச் செய லாளர் வழக்கறிஞர் இரா.ஆறுச்சாமி, தந்தை பெரியார் திராவிட கழகம் பொதுச் செயலாளர் கு. ராமகிருட்டி ணன், ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் ரவிக் குமார், திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று தியாகி இமானு வேல் சேகரன் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
போக்சோ வழக்கில் ஒருவர் கைது
நாமக்கல் செப்.11- இரண்டு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போக்சோ வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சவுரிபாளை யம் மாதா கோயில் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுண்டக்கா என்கிற ராஜி. இவரின் வீட்டின் அருகே விளை யாடிக் கொண்டிருந்த சிறுமிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து, சிறுமியின் தாய் கொடுத்த புகாரியின் அடிப்படையில் புதனன்று சுண் டக்கா (எ) ராஜி-வை கைது செய்தனர். பின்னர் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குற்றவாளி மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ரயில் சேவை நீட்டிப்பு
சேலம், செப்.11- கோவையிலிருந்து பீகார் மாநிலத்திலுள்ள பரௌனிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளி யிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை - பரௌனி சிறப்பு ரயில் செவ்வாயன்று முதல் நவ.26 ஆம் தேதி செவ் வாய்க்கிழமைகளில் இயக்கப்படும். கோவையிலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக வியாழக்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு பரௌனி சென்றடையும். இதேபோல மறுமார்க்கத்தில் பரௌனி - கோவை சிறப்பு ரயில் வரும் வெள்ளியன்று (நாளை) முதல் நவ.29 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை களில் இயக்கப்படும். பரௌனியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக திங்கள்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு கோவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது போதையில் தொடரும் விபத்து: மக்கள் அச்சம்
நாமக்கல், செப்.11- பள்ளிபாளையத்தில் மது போதையில் தொடரும் விபத்து சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கருப்பு நிற சொகுசு கார் ஒன்றை செவ்வாயன்று இரவு காவேரி ஆர்.எஸ் என்ற பகுதியில் இருந்து பள்ளிபாளையம் நோக்கி இயக்கியுள்ளார். குட்டைமுக்கு என்ற பகுதியில் லாரியின் மீது மோதி விட்டு நிற்காமல் மணிகண்டன் வந்துள்ளார். ஜீவா செட் என்ற பகுதியில் குறுகலான சாலையில் வாகனத்தை இயக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். இதை கவனித்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காரினை மடக்கி பிடித்து காரில் இருந்த அவரை கீழே இறக்கி அவரிடம் விசாரித்தனர். இதில், அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் பல்வேறு இடங்களில் மோதிவிட்டு நிற்காமல் சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து பள்ளிபாளையம் போலீசார் மணிகண்டனை பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சங்ககிரி சாலையில் மது போதையில் காரை ஓட்டி வந்த நபர் ஒருவர், இதேபோல நான்கு வயது சிறுவன் உள்பட ஐவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தது, குறிப்பிடத்தக்கது.
மாணவியிடம் தகராறு செய்தவர் கைது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு
திருப்பூர், செப். 11- தாராபுரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவியிடம் ஆபாசமாக பேசி, வம்பு செய்த சமூக விரோதி மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்த னர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் சூரியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் தூய்மை தொழிலாளி. இந்நிலை யில் இவரின் மகள் பள்ளி சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக திங்களன்று பேருந்து நிறுத் தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது சஞ்சைய் என்பவர் இவரிடம் ஆபாசமாகப் பேசி தகராறு செய்தி ருக்கிறார். இதையடுத்து, காவலர்கள் சஞ்சயை அழைத்து இனி இதுபோல் செய்யமாட்டேன் என எழுதி வாங்கி விட்டு அனுப்பி விட்டனர். சம்பந்தப் பட்ட நபர் மீண்டுத் தகராறு செய்யக்கூடும் என அச் சமடைந்த அவரது தந்தை, தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் மனுக் அளித்தார். மேலும், இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபு ரம் வட்டக் குழு செயலாளர் என்.கனகராஜ், காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியு றுத்தினார். இந்நிலையில் செவ்வாயன்று, ஆய்வு பணிக் காக தாராபுரத்திற்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் மார்க் சிஸ்ட் கட்சியின் வட்டக் குழு செயலாளர் என்.கனக ராஜை நேரில் அழைத்து இந்த சம்பவம் குறித்து விசா ரித்தார். மேலும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் முத்துக்கண்ணனும் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத் திருந்தார். இந்தப் பின்னணியில் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மாணவி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியிடம் தக ராறு செய்த ஈரோட்டைச் சேர்ந்த சஞ்சய் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுக்கடைக்கு எதிர்ப்பு
திருப்பூர், செப்.11- திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே செயல் பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை மூட வேண் டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரி டம் மனு அளித்தனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டக் குழு செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன், துணை மேயர் ஆர். பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் புதனன்று மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதில், திருப்பூர் கொங்கு மெயின் ரோடு இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை (கடை எண்:1909) இடமாற்றம் செய்யக் கோரி, முன்பே மனு கொடுத்து போராட்டங்கள் நடத்தப் பட்டுள்ளது. எனினும் அந்தக் கடை அகற்றப்பட வில்லை. கடந்த பிப்ரவரி மாதம், இரண்டு மாதத்தில் இந்த கடை இடமாற்றம் செய்வதாக டாஸ்மாக் நிர்வா கம் அறிவிப்பு பலகை வைத்திருந்தது. ஆனால் இன்னும் மதுபானக் கடை இடமாற்றம் செய்யப்பட வில்லை. ஏற்கனவே டாஸ்மாக் மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய மேலாளர் பொறுப் பேற்றுள்ளார். ஆனால், அவரை பொதுமக்கள் நேரடி யாக இரண்டு முறை சந்திக்கச் சென்றபோதும், அவரை சந்திக்க முடியவில்லை. நேரம் ஒதுக்கி தரக் கேட்டு நேரம் ஒதுக்கி தரவில்லை என ஆட்சியரிடம் தெரிவித்தனர். கோரிக்கை குறித்து கேட்டறிந்த ஆட்சியர், டாஸ்மாக் மண்டல மேலாளருடன் கலந்து ஆலோசித்து விரைவில் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றார்.
யானை தாக்கி ஒருவர் காயம்
கோவை, செப்.11- தடாகம் அருகே நடைப் பயிற்சிக்கு சென்றவரை, காட்டு யானை தாக்கிய சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், மதுக் கரை, மருதமலை, தடாகம், சோமையனூர் போன்ற பகு திகளில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வரு கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சி யின் காரணமாக மலையில் இருந்து வனவிலங்குகள் உணவு தேடி சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து, பருவ மழை பெய்து வறட்சி நிலை மாறிய பிறகும் இங்கு உள்ள உணவு பொருட் களை ருசி கண்ட யானைகள் வனப் பகுதிக்குள் செல்லா மல் அப்பகுதியிலே முகாமிட்டு உள்ளது. இந்நிலை யில், செவ்வாயன்று இரவு தடாகம் அருகே உள்ள சோமையனூரில் இருந்து காளையனூர் பகுதியில் மனோகரன் என்பவர் தோட்டத்தில் புகுந்த ஓற்றை காட்டு யானையை விரட்டிச் சென்ற வனத் துறையினர். இதைத் தொடர்ந்து புதனன்று அதிகாலை 5.30 மணி அளவில் சோமையனூரில் இருந்து காளையனூர் செல்லும் வழி யில் நடைப் பயிற்சிக்கு சென்ற கணேசன் என்ப வரை அந்த ஒற்றை காட்டு யானை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த கணேசனுக்கு கை உடைந்தது. இதுகுறித்து தகவலின் பெயரில் அப்பகுதியில் கண் காணித்து வந்த வனத்துறை குழுவினர் உடனடியாக அங்கு சென்று அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. மேலும், தொடர்ந்து இது போன்ற அசம்பாவித சம் பவங்கள் நடைபெறாமல் இருக்க நிரந்தரமாக அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த முறை கட்டிய மின் கட்டணத்தை இம்முறையும் கட்ட வலியுறுத்தல்
உடுமலை, செப்.11- உடுமலைப்பேட்டை கோட்டம் மடத்துக்குளம் பிரிவு அலுவலகத்தில் இருக்கும் கண்ணாடிபுத்தூர், கிருஷ்ணாபுரம் பகிர்மானங்களில் இருக்கும் மின் இணைப்புகளில் நிர்வாக காரணங்களினால் செப்டம்பர் மாத மின் கணக்கீடு மேற்கொள்ள முடியவில்லை. எனவே வாடிக்கையாளர்கள் கடந்த ஜூலை 2024 மாதம் செலுத்திய மின்கட்டண தொகையை நடப்பு மாதமும் கட்டணமாக செலுத்த உடுமலை மின் பகிர்மான செயற் பொறியாளர் மூர்த்தி கூறியுள்ளார்.
கைத்தறி நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம்
சேலம், செப்.11- செப்.15 ஆம் தேதியன்று கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கைத்தறி துறை மற் றும் சுகாதாரத்துறை இணைந்து நடத்தும், கைத்தறி நெசவா ளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில் செப்.15 ஆம் தேதியன்று காலை முதல் மேச்சேரி பகுதியிலுள்ள விஜிபி மஹாலில் நடைபெற உள்ளது. இம்முகாமில் இருதய நோய் மருத்துவம், கண், காது, மூக்கு, மருத்துவம் போன்ற பொது மருத்துவ பரி சோதனைகள் மற்றும் மகளிர் சுகாதாரம் மற்றும் வருமுன் காப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். எனவே, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கூட்டுறவு மற்றும் நெசவு சார்ந்த உபதொழில் புரிபவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.