கோவை, செப்.11- மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 103 ஆவது நினைவு நாள், தமிழக மக் கள் ஒற்றுமை மேடையின் சார்பில் புதனன்று அனுசரிக் கப்பட்டது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மகாகவி சுப் பிரமணிய பாரதியாரின் 103 ஆவது நினைவு நாள் நிகழ்வு கோவை மாவட்டம், காந்தி புரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அரு கில் புதனன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், தமிழக மக்கள் ஒற் றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் யு.கே.சிவஞானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ். கனகராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.செல்வராஜ், மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதிபாசு, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ரத்தினகுமார், சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். ராஜன், சிபிஐ எம்எல் லிப ரேசன் பாலசுப்ரமணியம், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் குரு மற்றும் நேருதாஸ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கோவை மாவட்டக்குழு மற்றும் இடையர்பாளையம் கிளை சார்பில் இடையர்பாளையம், காந்தி யடிகள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்விற்கு கவிஞர் க.சு. குணசேகரன் தலைமை வகித் தார். தமுஎகச மாவட்டத் தலைவர் தி.மணி, மாவட்டச் செயலாளர் அ.கரீம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சண்முகசுந்தரம் மற்றும் பள்ளி தாளாளர் கே.ஏ.சுப்ரமணியம் ஆகி யோர் சிறப்புரை ஆற்றினர்.