districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தோழர் மாதையன் முதலாமாண்டு நினைவேந்தல்

ஈரோடு, ஏப். 12- பவானி  அருகே வாய்க்கால்பாளையத்தில், தோழர்  மாதையன் முதலாமாண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஈரோடு, மாவட்டம், பவானி அருகே உள்ள வாய்க்கால் பாளையம் கிராமத்தில் விவசாய தொழிலாளர் சங்க தாலுகா  தலைவராக, தீண்டாமை ஒழிப்பு முண்ணனி தாலுகா செய லாளராக,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செய லாளராக பணியாற்றி வந்த பி.மாதையன் கடந்த ஆண்டு  காலமானார். அவரது முதலாமாண்டு நினைவு நாள்   பொதுக்கூட்டம் வாய்க்கால்பாளையத்தில் நடைபெற்றது.  கிளை செயலாளர் எம்.தங்கராசு தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் பி.பி.பழனிசாமி, தாலுகா செயலாளர் ஏ.ஜெக நாதன்,  பெரியார் திராவிடர் கழக வடக்கு மாவட்ட செயலாளர்  வேணுகோபால் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  முன்னதாக, இந்நிகழ்வில், ஏராளமானோர் கலந்து கொண்டு மாதையன் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். முடிவில் கோபால கண்ணன் நன்றி கூறினார். 

ரூ.1.10 கோடிக்கு மஞ்சள் ஏலம்

நாமக்கல், ஏப்.12- நாமகிரிப்பேட்டையில் ரூ.110 கோடிக்கு மஞ்சள் ஏல மானது.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின்  கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு  செவ்வாயன்று மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக் கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பபட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிரா மங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.  ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து  வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர். இந்த  ஏலத்தில் 2700 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 10 லட்சத் திற்கு ஏலம் போனது.  இதில் விரலி ரகம் குறைந்தபட்சம்  ஒரு குவிண்டால் ரூ.4969 முதல் அதிகபட்சமாக ஒரு  குவிண்டால் ரூ.7403க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம்  ரூ.4802க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால்  ரூ.6100-க்கும், பணங்காலி ரகம் குறைந்த பட்சம் ஒரு  குவிண்டால் ரூ.8999-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால்  ரூ.13000க்கும் ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த  வாரம் அதிகளவில் மஞ்சள் மூட்டைகள் ஏலத்திற்கு கொண்டு  வரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.     

மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

நாமக்கல், ஏப்.12- சேந்தமங்கலம் வெட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ள  அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல்  நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக பாராட்டு சான்றிதழ்  வழங்கப்பட்டது. தேசிய பசுமை படை சார்பாக, கொல்லிமலையின் 74 கொண்டை ஊசி வளைவுகளிலும், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கழிவு பொருட் களை சுத்தம் செய்த மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும்  சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர்  பாரதி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப் பாளராக நாமக்கல் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமை செயற்பொறியாளர் சுமித்ரா பாய் கலந்து கொண்டு சான்றிதழ்  வழங்கி பாராட்டினார். மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப் பாளர் ரகுநாத் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதி காரிகள், மாணவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

விதிக்கு புறம்பாக வாகனம் ஓட்டியவர்கள் உரிமம் ரத்து

ஈரோடு, ஏப்.12- மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் உள்பட 10 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்ய  போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஈரோடு மாநகர் பகுதியில் தெற்கு மற்றும் வடக்கு போக்கு வரத்து போலீசார் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது இருசக்கர வாகனங் களில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்கள், சிக்னலை மீறுபவர்கள், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுதல் உள் ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள்  மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்து வரு கின்றனர்.  குறிப்பாக, மது அருந்திவிட்டு குடிபோதையில் வாகனம்  ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதே போல் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி னால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும்.  இந்நிலையில், ஈரோட்டில் மது அருந்தி வாகனம் ஓட்டி யதாக 9பேர், அதிக வேகமாக வாகனத்தை ஓட்டியதாக  ஒருவர் ஓட்டுநர் உரிமத்தையும் என மொத்தம் 10 பேரின்  ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று  வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்தனர். 

சீசனுக்கு தயாராகிய வண்ண மலர்கள் 

உதகை, ஏப்.12- உதகை தாவரவியல் பூங்கா நர்சரியில்  வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் பூக்கள்  பூத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆர்வத் துடன் கண்டு ரசித்து செல்கின்றனர். ஆண்டுதோறும் கோடை சீசனின் போது  ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகின்றனர். இந்த சீசனையொட்டி, உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியின் போது, தாவரவியல் பூங்காவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 5 லட்சத்திற்கு மேல் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் செடிகள் வைக்கப்பட்டு அதிலும் மலர்கள் பூத்துக் குலுங்கும். இந்த  தொட்டிகள் மாடங்களில் பல்வேறு வடிவங் களில் அடுக்கி வைக்கப்படும். அவைகளை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள்  கண்டு ரசித்து செல்வார்கள். இந்நிலையில், மலர் கண்காட்சி நடத்து வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த இரு மாதங்களுக்கு முன் துவங்கியது. இதற் காக பூங்காவில் உள்ள அனைத்து பகுதி களிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட் டுள்ளன. அதேபால், 35 ஆயிரம் தொட்டி களிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட் டுள்ளன. தற்போது, பூங்காவில் உள்ள நர்சரி களில் பால்சம், ஐபோபியா, பிரமிளா ஆப்கானிகா, அகில், கேக்டஸ் அக்குரியா போன்ற மலர்கள் பூத்துள்ளன. ஓரிரு நாட் களில் இந்த மலர் செடிகள் சுற்றுலா பணிகள்  பார்வைக்கு வைக்கப்படும். மே மாதம் முதல்  வாரம் முதல் இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்லலாம்.

பெண் காவலரிடம் அத்துமீறல்:  முன்னாள் ராணுவ வீரர் கைது

நீலகிரி, ஏப்.12- பெண் காவலரிடம் அத்துமீறியதாக முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் 30 வயது பெண் காவலர். இவர் செவ்வாயன்று பணி நிமித்தமாக கோவைக்கு சென்றார். பின்னர் மீண்டும் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வந்து, அங்கிருந்து குன்னூருக்கு பேருந்தில் பயணித்தார். அதே பேருந்தில் கோத்தகிரி, அஜூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான தர்மன் (56) என்பவரும் பயணித்தார். இவர் பெண் காவலர் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்தார்.  இந்நிலையில், முன்னாள் ராணுவ வீரரான தர்மன், தனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையறிந்த பெண் காவலர் சத்தம் போட்டுள்ளார். இருப்பினும் அந்த நபர், தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்தாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அடைந்த பெண் காவலர் இருக்கையை விட்டு எழுந்து, தர்மனை சத்தம் போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முன்னாள் ராணுவ வீரர் ஆத்திரத்தில் பெண் காவலரை தாக்கினார்.  மேலும், தனக்கு எஸ்.பி. மற்றும் டி.எஸ்பி.யை தெரியும். என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்து கொண்டே இருந்தார். இதற்கிடையே பேருந்து காட்டேரி வந்ததும், பேருந்து ஓட்டுநர், தர்மனை கீழே இறக்கி விட்டார். அப்போது தர்மன் மற்றொரு பேருந்தில் ஏறவே, பெண் காவலரும் அதே பேருந்தில் ஏறினார். பின்னர் பேருந்து ஓட்டுநரிடம் தகவல்களை கூறி குன்னூர் லெவல் கிராஸ் பகுதியில் பேருந்தை நிறுத்துமாறு கூறினார். ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். இதையடுத்து பெண் காவலர், சக போலீஸ்காரரை தொடர்பு கொண்டு, நடந்தவற்றை தெரிவித்து உதவிக்கு அழைத்தார். அவர்கள் வந்தவுடன் தர்மனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பெண் காவலர் தர்மன் மீது புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தர்மன் பெண் காவலரிடம் அத்துமீறியது உறுதியானது. இதையடுத்து போலீசார் தர்மனை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

பவானிசாகர் அணை நிலவரம்

ஈரோடு, ஏப்.12- ஈரோடு மாவட்ட மக் களின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர். இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2  லட்சத்து 7 ஆயிரம் விவ சாய நிலங்கள் பாசன வசதி  பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதி யாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில், கடந்த  சில நாட்களாக பவானி சாகர் அணைக்கு வரும் நீர்  வரத்தை காட்டிலும் பாச னத்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேக மாக குறைந்து வருகிறது. புதனன்று நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 86.96 அடியாக குறைந்து உள்ளது.

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

ஈரோடு, ஏப்.12- குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த வெள்ளி திருப்பூர்  மரப்பாளையம் பகுதியில் ஏராளமானோர் வசித்து வரு கின்றனர். இங்கு, 15 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் விநி யோகம் செய்யப்படவில்லை. பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் தீர்வு எட்டப்படவில்லை. இதனையடுத்து, இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் ஒன்று திரண்டு வெள்ளி திருப்பூர் - அந்தியூர் செல்லும் பிரதான  சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் செய்த பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொது மக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வரவேண்டும். எங்கள்  பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை யடுத்து, போலீசார் போராட்டத்தை கைவிடுங்கள். குடிநீர் விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி  நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்தனர். இதனை யேற்று, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து  சென்றனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறு பாஜக ஐடி பிரிவு நிர்வாகி கைது

கோவை, ஏப்.12- அமைச்சர் வி.செந்தில்பாலாஜி குறித்து சமூக வலைத்த ளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்து, பகிர்ந்த  பாஜகவின் ஐடி பிரிவு நிர்வாகி கைது செய்யப்பட்டார். கோவை, காளப்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் மாநில பாஜக தொழில்துறை பிரிவு துணைத் தலைவ ராக உள்ளார். இவர் சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து, அவதூறான கருத்துக் களை பதிவிட்டு வந்துள்ளார். இதுகுறித்து கோவை கணபதி புதூரை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோவை மாநகர குற் றப்பிரிவு, காவல் நிலையத்தில், புகாரளித்தார்.  இதில், சமூக வலைதளத்தில் செல்வகுமார் பதிவிட்டு வரும் கருத்துக்கள் இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகை யில் இருப்பதாக புகாரில் கூறப்பட்டு இருந்தது. புகாரின்  பேரில், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பதற்றத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாஜக நிர்வாகி செல்வக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

விபத்துகளை தடுக்க தொப்பூர் கணவாயில் சோலார் பிலிங்கர் மின்விளக்கு அமைப்பு

தருமபுரி, ஏப்.12- தொப்பூர் கணவாய் பகுதியில் நள்ளிரவு மற்றும் அதி காலை நேரங்களில், விபத்தை தடுப்பு நடவடிக்கையாக தற்போது 16 இடங்களில் இடங்களில் வேகத்தை கட்டுப்படுத் தும் வகையில், தனியார் பங்களிப்புடன் சோலார் பிலிங்கர் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறுகையில், தருமபுரி - சேலம் மாவட்ட எல்லையில் உள்ள தொப்பூர் கணவாய் சுமார் 8 கி.மீ.  தூரம் கொண்டதாகும். தமிழ்நாட்டிலிருந்து வட மாநிலங்க ளுக்கும், வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாடு மற்றும் கேரளா விற்கும் செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ள தொப்பூர் கணவாய் உள்ளது. இப்பகுதி வழியாக தினசரி ஆயிரக்கணக் கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. சுங்கச்சாவடியி லிருந்து தொப்பூர் இரட்டை பாலம் வரை, 8 கி.மீ தொலைவிற்கு சாலை இறக்கமாகவும், வளைந்தும் செல்கிறது. தொப்பூர் கணவாயில் இருந்து 4 கி.மீ., தூரம் மிகவும் அபாயகரமான வளைவுகள் கொண்டதாக உள்ளது. இதனால், அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது. பெரிய அளவில் விபத்து நடைபெறும் போது, இருபுறமும்  பல கி.மீ., தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பது  வாடிக்கையாக உள்ளது. இந்த விபத்தை கட்டுப்படுத்த மாவட்ட, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மாவட்ட நிர்வா கம் மற்றும் சுங்கச்சாவடி நிறுவனம் இணைந்து பல்வேறு நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக பல்வேறு தொழில் நுட்பங்கள் கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக தொப்பூர் கணவாயில் சோலார் பிலிங்கர் மின்விளக்கு அமைக் கப்பட்டுள்ளது. இதன்மூலம் இரவு நேரத்தில் அதிவேகத் தில் இயக்கப்படும் வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டு, 30 கி.மீ. வேகத்தில் வாகனங்களை இயக்க அறிவுறுத்தப் பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் முதல் தனியார்  பங்களிப்புடன் தொப்பூர் கணவாய் போலீஸ் குடியிருப்பு பகு தியில் இருந்து ஆஞ்சநேயர் கோவில் வரை 8 இடங்களில் சோலார் பிலிங்கர் மின்விளக்கு அமைக்கப்பட்டது. அதற்கு பின்னர் இரண்டு சோலார் பிலிங்கேர் மின்விளக்குகளும், மேலும் செவ்வாயன்று தனியார் பங்களிப்புடன் மீண்டும் இரட்டை பாலம் பகுதி மற்றும் கட்ட மேடு பகுதியில் இருந்து தொப்பூர் மலைப்பகுதியில் பயணிகள் வாகனம், சரக்கு வாகனங்களை பிரித்து விடும் பகுதி வரை 6 பிலிங்கர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு இரவு மற்றும் அதிகாலை நேரத் தில் நடக்கும் விபத்தை கட்டுப்படுத்த, இந்த சோலார் பிலிங் கர் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரு மளவு விபத்து தடுக்கப்பட்டுள்ளது. தொப்பூர் மலைப் பகுதியில் கனரக வாகனங்களை இயக்கக்கூடிய லாரி ஓட்டுநர்கள் மலைப்பகுதியில் உள்ள விதிமுறைகளை முறை யாக பின்பற்றினால் முழு விபத்தையும் தடுக்க வாய்ப்பு உள்ளது, என்றார்.

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டியானை பலி

கோவை, ஏப்.12- பெரியநாயக்கன்பாளையம் அருகே தண்ணீர் தொட்டிக் குள் விழுந்த, பிறந்து 5 மாதமான குட்டியானை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சர கத்திற்கு உட்பட்ட பாலமலை - கோவனூர் செல்லும் வழியில் ஒரு பண்ணை வீடு உள்ளது. அங்குள்ள தண்ணீர் தொட்டியில் குட்டியானை நீர் அருந்தும் பொழுது உள்ளே விழுந்து இறந்து கிடந்தது. இதுகுறித்து செவ்வாயன்று மாலை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப் போது குட்டியானை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து நான்கு நாட்களுக்கு மேல் இருக்கும் என்றும், குட்டி யானையின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர், மாவட்ட வன மருத்து வர், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் மற்றும் வனத் துறை காவலர்கள் 30க்கும் மேற்பட்டோர் குட்டியானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு தொட் டியை உடைத்து குட்டி யானையை வலையின் மூலம் மேலே எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குட்டியானையை வனப் பகுதியில் உடறாய்வு கூறு செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

17 ஆடுகளை திருடிய 4 பேர் கைது

தருமபுரி, ஏப்.12- தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி அருகே உள்ள ஆண் டிப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல். விவசாயியான இவர் வளர்த்து வந்த 5 ஆடுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாய மானது. இதேபோல் ஆலங்கரை பகுதியைச் சேர்ந்த வேட்டை ராஜ் வளர்த்து வந்த 7 ஆடுகள், புதுக்கோட்டை சரடு கிரா மத்தைச் சேர்ந்த மணிமாறன் வளர்த்து வந்த 5 ஆடுகள் திடீரென காணாமல் போனது.  17 ஆடுகள் திடீரென காணாமல் போனது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யது.  இதுதொடர்பாக, கோட்டப்பட்டி காவல் துறையில் புகார்  அளித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தனிப்படை அமைத்து ஆடு திருட்டில் ஈடுபட்ட வர்கள் யார்? என்பது குறித்து கண்டறிய தீவிர தேடுதல் வேட் டையில் ஈடுபட்டனர். அப்போது அரூர் பகுதியைச் சேர்ந்த வேடியப்பன் (23), அஜித் (22), மச்ச கண்ணன் (21), நரிப்பள்ளி  பகுதியைச் சேர்ந்த மாரப்பன் (55) உள்ளிட்ட 4 பேர் ஆடு திருட் டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கோட் டப்பட்டி போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

ஈரோடு: 7 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு, ஏப்.12- ஈரோட்டில் ஒரோ நாளில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரண மாக பாதிப்பு குறைய தொடங்கியது. இந்நிலையில், செவ்வா யன்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், ஈரோடு மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் மாவட் டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண் ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 729 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த ஒருவர் பாதிப் பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 975 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் கார ணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவ தும் 20 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்நிலையில்,  நாளொன்றுக்கு 60 முதல் 70 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவ சம் அணிந்து செல்வது அவசியம் என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

மது விற்பனை

நாமக்கல், ஏப்.12- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அனு மதி இல்லாமல் மது விற்ப தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து  காவல் ஆய்வாளர் ரவி, உதவி ஆய்வாளர் தங்க வடிவேல் உள்ளிட்ட போலீசார் தீவிர  ரோந்து பணி மேற்கொண் டனர். அப்போது மது விற்ற தாக தேவூரை சேர்ந்த ஜெக தீஸ்வரன் (27), முருகன் (58), எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஏகாம்பரம் (55) ஆகிய 3  பேரை கைது செய்து, அவர் களிடமிருந்து 26 மது பாட்டில் கள் பறிமுதல் செய்யப்பட் டன.