districts

img

தோழர் டி.சண்முகம் நினைவுதினம் அனுசரிப்பு

தருமபுரி, பிப்.15- தோழர் டி.சண்முகம் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு தினம் சனியன்று தருமபுரியில் அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் மாநில துணைத்தலைவராக பணியாற்றிவர் தோழர் டி. சண்முகம். தருமபுரி மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்க  ஸ்தாபனத்தை கட்டமைத்த தோழர் டி.சண்முகம் அவர்களின்,  17 ஆம் ஆண்டு நினைவுதினம் சனியன்று அனுசரிக்கப் பட்டது. தருமபுரி, செங்கொடிபுரத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்விற்கு கட்சியின் நக ரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு தலைமை வகித்தார். இதில்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச்சுனன், ஒன்றி யச் செயலாளர் கே.கோவிந்தசாமி, அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பெருமாள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.