ஈரோடு, ஜன.8- உழைக்கும் வர்க்கத்தின் உரி மைப் போராளி தோழர் நாராயண சாமியின் நினைவேந்தல் நிகழ்வு புளி யம்பட்டியில் ஞாயிறன்று நடைபெற் றது. தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் சென்னையில் ஓட்டுநராக தோழர் நாராயணசாமி பணிபுரிந்து வந்தார். 1970 ஆம் ஆண்டில் தனியார் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட் டது. அதன்பிறகு கோவையைத் தலை மையிடமாகக் கொண்டு சேரன் போக் குவரத்துக் கழகம் அமைந்தது. நாரா யணசாமி சேரன் போக்குவரத்துக் கழ கத்தில் ஓட்டுநராகப் பணியமர்த்தப் பட்டார். அப்போது தொழிலாளர் கள் சங்கம் அமைக்க முடியாத அள விற்கு அடக்குமுறை இருந்தது. இந்நி லையில், அதிகாரிகள் அமைத்த சங் கத்தின் ஆண்டு பேரவையில் அவர் களே நிர்வாகிகளை அறிவிக்கும் வழக் கம் இருந்தது. இதனை எதிர்த்து தோழர் கே.ரமணி வழிகாட்டலில் போட்டியிட்டு நாராயணசாமி அணி வெற்றி பெற்றது.
இவ்வாறு போக் குவரத்து தொழிலாளர்களுக்கு மட்டு மின்றி அனைத்து பகுதி தொழிலா ளர்களுக்கும் போராடி வந்த தோழர் நாராயணசாமி 8.1.2007 ஆம் ஆண்டு மறைந்தார். இவ்வாறு சமரசமற்ற தொழி லாளி வர்க்க உரிமை போராளி தோழர் எஸ்.நாராயணசாமியின் நினைவேந் தல் நிகழ்வு அனைத்துவகை தொழி லாளர் ஐக்கிய தொழிற்சங்கத்தின் சார்பில் புன்செய் புளியம்பட்டியில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ் விற்கு சங்கத்தின் தலைவர் டி.சுப்பிர மணி தலைமை வகித்தார். பொருளா ளர் ஏ.பி.ராஜூ வரவேற்றார். சரோஜா நாராயணசாமி தியாகிகள் சுடர் ஏற்றி னார். பொதுச்செயலாளர் ப.மாரி முத்து கொடியேற்றினார். இக்கூட்டத் தில், தோழர் நாராயணசாமியின் மனைவிக்கு சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் கனகராஜ் பயனாடை அணிவித்தார். நிறைவாக, சங்கத் தின் உதவித்தலைவர் பி.என்.ராஜேந் திரன் நன்றி கூறினார்.