பொள்ளாச்சி, ஆக. 7- பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவ டிக்கைக் குழு (ஜேஏசி - ஏசிடி) எம்யுடிஏ சார்பில் பொள்ளாச்சியில் புதனன்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரி ஏயுடி கிளை சார் பாக பாலக்காடு சாலையில் உள்ள என்ஜிஎம் கல்லூரி வளாகத்தில் கருப்பு ஆடை அணிந்து காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவை தொகையை தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்கிய தமிழக அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்காமல் பாரபட்சம் காட்டி வருகிறது. இதனை, உட னடியாக வழங்கிட வேண்டும். யுஜிசி நெறிமுறைகளின் படி கல்லூரி ஆசிரியர்களுக்கும் எம்.பில் மற்றும் பிஎச்டி பட்டத்திற்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், ஏயூடி கிளைத் தலைவர் என்.அன்பரசு, செய லாளர் எஸ்.சிவசங்கர், பொருளாளர் சுஜா மேதிவ், துணைத் தலைவர் எஸ்.முத்துகுமரவேல், இணைச் செயலாளர் எஸ். சோமசுந்தரம் உள்ளிட்ட கல்லூரி பேரா சிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.