districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

சேலம், நவ.3- ஆத்தூர் அருகே ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்  துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, வடக்கு காடு பகுதியில் அய்யனார் கோவில்  ஏரி அமைந்துள்ளது. ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அய்யனார் கோவில் ஏரி நிரம்பி உள்ளது. மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவரின் மகன் திருச்சிற்றம்பலம் சிவா (18), சேலத்திலுள்ள தனியார் கல்லூரி யில் பயின்று வருகிறார். இந்நிலையில், நண் பர்களான சபரீஷ்வரன், மனோஜ் ஆகியோரு டன் அய்யனார் கோவில் ஏரியில் ஞாயிறன்று திருச்சிற்றம்பலம் சிவா குளிக்கச் சென்றுள் ளார். ஏரியின் நீர் பகுதியில் இறங்கி திருச்சிற் றம்பலம் சிவா புகைப்படம் எடுக்குமாறு நண் பர்களிடம் சொல்லியுள்ளார். அப்போது அதி களவில் ஆழம் இருந்ததால் திடீரென சிவா  நீருக்குள் மூழ்கியுள்ளார். அவரை நண்பர்கள்  காப்பாற்ற முயன்றும் முடியாததால், அருகி லிருந்தவர்கள் ஆத்தூர் தீயணைப்புத் துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரப் போராட் டத்திற்கு பின் கல்லூரி மாணவர் திருச்சிற்றம் பலம் சிவா உடலை சடலமாக மீட்டனர். இதை யடுத்து அவரது உடலை ஆத்தூர் நகர காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க கோரிக்கை

உடுமலை, நவ.3- உடுமலை, திருமூர்த்தி நகர் அருகே பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், திருமூர்த்தி நகர் கிராமம் அருகே  உள்ளது பொன்னால் அம்மன் சோலை. இப் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படும் வகையில், கே.ரெட்டிபாளையம் முதல் பொன்னால் அம்மன் சோலை வரை தார்ச்சாலை அமைக்க வேண்டும் என வலியு றுத்தி போராட்டம் நடைபெற்றது. இதன்பின் புதிதாக அமைக்கப்பட்ட சாலைக்கு இடை யில், ரெட்டிபாளையம் முதல் பொன்னால் அம்மன் சோலை செல்லும் வழியில் பாலாறு  குறுக்கிடுகிறது. மழைக்காலங்களில் விவசா யிகள் பாலாற்றைக் கடந்து விவசாய நிலங்க ளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி பாலாற்றின் குறுக்கே தமிழக  அரசு உடனடியாக தரைப்பாலம் அமைத்துக்  கொடுக்க வேண்டும், என அப்பகுதி விவசாயி கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

காவிரி - திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த சிறப்புக்குழு

நாமக்கல், நவ.3- காவிரி - திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல் படுத்த சிறப்புக்குழு அமைக்கப்படும் என நாமக்கல் நாடாளு மன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல், சேலம், திருச்சி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம், காவிரி ஆற்றின் கிளை நதியாக விளங்கும் திருமணிமுத்தாற்றை மீட்டெடுக்க வேண்டும் என் கிற எண்ணம் தீவிரமாக உள்ளது. காவிரி - திருமணிமுத் தாறு இணைப்புத் திட்டம் முழுமையாக வெற்றி பெற வேண்டுமெனில், மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த தன்னார் வலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இடம் பெற வேண் டும். இதற்கான சிறப்புக்குழுவை அமைக்க கொமதேக முடிவு செய்துள்ளது. காவிரி - திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற தன்னார்வலர்களை ஒருங்கி ணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் சேர விரும்புவோர் 81110 01999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம். மேலும், இந்த எண்ணில் உள்ள வாட்ஸ்அப் குரூப் பில் இணைந்து தங்களின் முழு விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.  சேலம் மாவட்டம், மேட்டூரிலிருந்து நாமக்கல் மாவட்டம், பவித்திரம் வரை 132 கி.மீ.தொலைவுக்கு நிலங்கள் பயன் பெறும். 50 ஆயிரம் ஏக்கர் வரையில் பாசனம் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சேலம், நாமக்கல், திருச்சி மாவட்ட விவசாயிகள் முழுமையாக பயனடைவர். மேலும், ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், எருமப்பட்டி, தாத்தையங்கார்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் நிரந்தரமாக பயனடையும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்ட கட்டடத்தை மருத்துவமனை விரிவாக்கத்திற்கு பயன்படுத்திடுக

உடுமலை,நவ.3- ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட மனமகிழ் மன்ற கட்டத்தை காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற  உடுமலை அரசு மருத்துவமனை நோயளிகள் நல சங்க  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகரக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. உடுமலை அரசு மருத்துவமனைக்கு எதிரே நகராட்சிக்கு  சொந்தமான 97 சென்ட் பரப்பளவு இடம், மனமகிழ் மன்றம்  என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்நிலை யில், கடந்த 2017 ஆம் ஆண்டு நகராட்சி ஆணைய ராக இருந்த சரவணக்குமார், ஆக்கிரமிப்பு செய்துள்ள மன மகிழ் வளாகத்தில் இருந்த அறைகளுக்கு சீல் வைத்தார்.  பின்னர், முழுமைக்கும்  சீல் வைக்கபட்டு மனமகிழ் மன்றம்  செயல்பட்ட இடம் முழுவதும் உடுமலை நகராட்சிக்கு சொந் தம் என்றும், விரைவில் இந்த இடம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற் பொழுது வரை இக்கட்டிடம் மற்றும் இடம் மக்கள் பயன் பாட்டிற்கு வரவில்லை. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை  நகரச் செயலாளர் தண்டபாணி கூறுகையில், உடுமலை மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதால் ஏற் கனவே நெருக்கடியாக உள்ளது. உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதனால், தற் போது இருக்கும் கட்டிடத்தில் தனி வார்டு ஒதுக்கினால் மீண் டும் நெருக்கடி தான் ஏற்படும். எனவே உடுமலை நக ராட்சிக்கு சொந்தமான மனமகிழ் மன்ற இடம் முழுவதை யும் சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற வேண்டும்.  அரசு மருத்துமனை விரிவாக்கம் செய்ய இந்த இடத்தை  பயன்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் பல போராட்டம் நடத்தியதன் விளைவாக கடந்த  2021 ஆம் ஜூலை மாதம் பேரிடர் மேலாண்மை சட்டத் தின்படி மனமகிழ் மன்ற கட்டிடம் மற்றும் இடத்தில் கொரோனா  பரிசோதனை மையத்தையும், மருத்துவமனை ஊழியர்கள் ஓய்வுக்கும் மற்றும் அரசு வாகனங்கள் நிறுத்துமிடம், என அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்கு வருவாய்துறை நிர்வா கம் தற்காலிகமாக கொண்டு வந்தது. எனவே, ஆக்கிர மிப்பிலிருந்து மீட்கப்பட்ட இந்த இடத்தினை  அரசு மருத்து வமனை விரிவாக்கத்திற்கு பயன்படுத்த வருவாய் துறை  மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், தமிழக அரசு தாமதம் செய்யாமல் அரசு மருத்துவனை யின் விரிவாக்கப் பணிகளுக்கு இந்த இடத்தை பயன்படுத்த  வேண்டும். அரசு மருத்துவமனையில் நடைபெறும் நோயளி கள் நல சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

நகை கொள்ளை

உடுமலை, நவ.3- உடுமலை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை,  பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார்  விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், மருள்பட்டி அருகே உள்ள வாணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய குமார் (63). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர்,  சனியன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இதன்பின் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் சென்று பார்த்த போது,  பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 18 சவரன் நகை மற்றும்  ரூ.1,75,000 பணம் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்த  புகாரின்பேரில், உடுமலை காவல் துறையினர் கைரேகை நிபு ணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

அணைகள் நிலவரம்

பவானி சாகர் அணை
நீர்மட்டம்: 92.35/105அடி
நீர்வரத்து:16539கனஅடி
நீர்திறப்பு: 1200கனஅடி
மழையளவு: 41.4மிமீ
சோலையார் அணை
நீர்மட்டம்:159/160 அடி
நீர்வரத்து:436.66கனஅடி
நீர்திறப்பு:365.83கனஅடி
மழையளவு:16 மிமீ
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:71.20/72 அடி
நீர்வரத்து:1173க.அடி.
நீர்திறப்பு:907க.அடி
மழையளவு:40 மிமீ
ஆழியார் அணை
நீர்மட்டம்:117.90/120அடி
நீர்வரத்து:234கனஅடி
நீர்திறப்பு:345கனஅடி
திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:52.93/60அடி 
நீர்வரத்து:757கனஅடி
நீர்திறப்பு:865கன அடி
மழையளவு:7மிமீ
அமராவதி அணை
நீர்மட்டம்: 86.95/90அடி
நீர்வரத்து:643கனஅடி
நீர்திறப்பு:576கனஅடி