திருப்பூர், மே 22-
திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சி யர்கள் திங்களன்று பதவியேற்றனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பணி யாற்றி வந்த எஸ்.வினீத் மாற்றுத்திற னாளிகள் நலத்துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சேலம் மாநகராட்சி ஆணையாளராக பணி யாற்றி வந்த தா.கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப் பட்டார். இதனைத்தொடர்ந்து திங்க ளன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் தா.கிறிஸ்துராஜ் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண் டார்.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் திருப் பூர் மாவட்டத்தின் 11 ஆவது மாவட்ட ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆட் சியராக பணியாற்றி ஹெச்.கிருஷ்ண னுண்ணி மாற்றப்பட்டு, புதிய ஆட்சிய ராக ராஜகோபால் சுங்கரா நியமிக்கப் பட்டார். இதனையடுத்து அவர் திங்க ளன்று பொறுப்பேற்றார்.
இவர் கோவை மாநகராட்சியின் ஆணையராகவும், சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையராகவும், அரசு தொழில் துறை துணை செயலாளராவும், கூடுதல் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார்.
நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக எஸ். உமா பொறுப்புபேற்றுக் கொண்டார். இவர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குநராகவும், தேசிய நலவாழ்வு குழுமத்தின் (தமிழ்நாடு) இணை இயக் குநராகவும், திருவள்ளுர் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகவும், பழனியில் சார் ஆட்சியராகவும், ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியராகவும், மே 2021 – மே 2023 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்த் திருத்த திட்டத்தின் திட்ட இயக்குநராக வும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத் தக்கது.