கோவை, ஆக.18- அரசுப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கோவை ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி, அங் குள்ள மாணவர்களுக்கு பாடம் எடுத்து, கலந்துரையாடினார். கோவை மாவட்டம், கிணத் துக்கடவு அருகே உள்ள சிங்கை யன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளிக்கு வருகை தந்த ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை மாணவ, மாணவிகள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின் ஆட்சி யர், பள்ளியிலுள்ள சமையல றைக்கு சென்று அங்கு மாண வர்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவுகளை பார்வையிட்டு மாணவர்களுக்கு சமைத்த உணவை வாங்கி சாப்பிட்டு சுவைத்து பார்த்தார். அப்போது மாணவர்களுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது? சாம்பாரில் என்னென்ன பொருட்கள் போடப்படுகிறது என அங்கிருந்த சத்துணவு பணியாளிடம் கேட்டறிந்தார். அதன்பின் அங்கிருந்து பள்ளி வகுப்பறைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாணவி ஒருவரை அழைத்து வாய்ப்பாடு சொல்ல கூறினார். அப்போது மாணவி கள் மாவட்ட ஆட்சியரிடம் வாய்ப்பாடு ஒப்பித்தனர். அதன் பின் அங்கிருந்த பள்ளி மாண வர்களிடம் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என கேள்வி கள் கேட்டார். அப்போது மாண வர்கள் போலீஸ், இன்ஜினியர் எனக்கூறினார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் நன் றாக படிக்க வேண்டும் என அறிவுரை கூறிய கிராந்தி குமார்பாடி, இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நடை பெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.