districts

img

ஒகேனக்கல் காவிரி கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

தருமபுரி, ஜூலை 20- ஒகேனக்கல் காவிரியாற்றில் விநாடிக்கு 61  ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ள தால், கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள் ளார். கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்பிடிப்பு பகுதி களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நா டகா அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அதன்படி, சனியன்று கர்நாடகா அணைகளில் இருந்து 75 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரியாற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டு லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங் கியுள்ளது. அதன்படி, வெள்ளியன்று காலை நில வரப்படி விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, சனியன்று 61 ஆயிரம் கனஅடி யாக அதிகரித்தது. தொடர்ந்து பருவமழை தீவிர மடைந்துள்ளதால், ஒரு லட்சம் கனஅடியாக உயர வாய்ப்புள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயின ருவி, சினியருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டுள்ளது. 5 ஆவது நாளாக ஒகேனக் கல்லில் பரிசல் இயக்கவும், அருவிகளில் மற்றும்  ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க தடை நீடித்து வரு கிறது. நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்ப தால், காவிரி கரையோரப் பகுதிகளில், வருவாய், ஊரக வளர்ச்சி, தீயணைப்பு மற்றும் காவல் துறை யினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லு மாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் நீர்வரத்தை தொடர்ந்து கண்கா ணித்து வருகின்றனர். இந்நிலையில், சனியன்று ஒகேனக்கல் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காவிரி யாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்து வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை, தீயணைப்புத்துறை, நீர்வளத்துறை அதி காரிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டார். வெள் ளத்தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற் கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.