தருமபுரி, ஆக. 24- தருமபுரி நகராட்சிக்குட்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி சனியன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தருமபுரி அறிவுசார் மையத்தில் 200க்கும் மேற்பட்டோர் தினசரி வந்து பல்வேறு போட்டி தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். மேலும் நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கும் பயன்படும் வகையில் நூற்றுக்கும் மேற்பட் புத்ததகங்கள் இங்குள்ளது. மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேசை நாற்காலிகள், அறைகளில் சுய முன்னேற்ற போஸ்டர் ஒட்டவும் மற்றும் சுத்திகரிக்கபட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார். மேலும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தற் பொழுது பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் போட்டித் தேர்வுகளுக்கு மாலை நேரத்தில் மற்றும் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்த ஆர்வமுள்ளவர்கள் நகராட்சி நிர்வாகத்தை அணுகலாம் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் புவனேஸ் வரி, நகர் நல அலுவலர் மரு தாமரைக்கண்ணன் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்ட உதவி பொறியாளர்கள் புவனேஸ்வரி, நவீன்குமார் ஆகியோர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்த னர்.