நாமக்கல், ஜன.5- கொல்லிமலையில் அடையாளம் தெரி யாத விலங்கால் கால்நடைகள் உயிரிழந்து வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் கால் நடைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், என வனத்துறையினருக்கு ஆட்சியர் அறிவு றுத்தியுள்ளார். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில், கொல்லி மலை வனச்சரகத்தில் அடையாளம் தெரி யாத விலங்கு தாக்குதல் தொடர்பான ஆய் வுக்கூட்டம் சனியயன்று நடைபெற்றது. சேந்த மங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னு சாமி, வன பாதுகாவலர் (நாமக்கல் வன கோட்டம்) சி.கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஆட்சியர் உமா பேசுகையில், கொல்லிமலை வனச்சரகத்திற் குட்பட்ட அரியூர்நாடு, குண்டூர்நாடு, வாழவந் திநாடு ஆகிய ஊராட்சிகளில், கடந்த ஒரு வார காலமாக அடையாளம் தெரியாத விலங் குகள் தாக்கி ஆடுகள் இறந்து வருகின்றன. கடந்த டிச.23 முதல் ஜன.4 ஆம் தேதி வரை அரியூர்நாடு ஊராட்சி, கிழக்குவளவு பகுதி யில் 2 ஆடுகள், குண்டூர்நாடு ஊராட்சியில் இளங்கியம்பட்டியில் 2 ஆடுகள், நத்துக்கு ழிப்பட்டியில் 3 ஆடுகள், வெள்ளக்குழிப்பட்டி யில் 6 ஆடுகள், திண்டூர்பட்டியில் 7 ஆடுகள், தீவெட்டிக்காட்டில் 6 ஆடுகள், ஆரியூர் நாடு ஊராட்சி கிழக்குவளவு பகுதியில் 3 ஆடுகள் என மொத்தம் 29 ஆடுகள் மற்றும் 1 பன்றி இறந் துள்ளன. அடையாளம் தெரியாத விலங்கின் நடமாட்டம் தொடர்பாக கண்காணிக்க தானி யங்கி கேமரா 33 இடங்களில் பொருத்தப்பட் டுள்ளது. அரசுத்துறையினர் மூலம் பொதுமக் களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டு வருகிறது. மேலும், வனத்துறை சார் பில் வனச்சரக அலுவலர் தலைமையில் களப் பணியாளர்களைக் கொண்ட சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்கா ணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகி றது. கொல்லிமலை பகுதிகளில் அடையாளம் தெரியாத விலங்கு கடித்து ஆடுகளை இழந்த நபர்களுக்கு உடனடியாக நிவார ணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அரசுத் துறை அலுவலர்கள் தேவையான முன்னேச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். வனத்து றையினர் துரிதமாக செயல்பட்டு அந்த விலங் கினை பிடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்து ஏதேனும் விபரங்கள் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்து, அர சுத்துறையினருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.