தருமபுரியில் இப்தார் நோன்பு திறப்பு
தருமபுரி, ஏப்.6- தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழ கம் சார்பில், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தருமபுரி ரோட்டரி ஹாலில், மாவட் ்டத் தலைவர் என்.சுபேதார் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம். இலியாஸ் வரவேற்றார். மாவட்டப் பொரு ளாளர் இதயத்துல்லா, துணைத்தலைவர் ஏ. நியாஸ், துணைச்செயலாளர்கள் பைரோஸ், ஷப்பீர், மாநில செயற்குழு உறுப்பினர் யாசின் தென்றல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திமுக மாவட்டச் செய லாளர்கள் பெ.சுப்பிரமணி, சி.பழனியப்பன், தமுமுக மாநிலச் செயலாளர் அவதாரம் அஹ்மத், கிருஷ்ணகிரி மாவட்டத் தலை வர் நூர்முஹமத், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஏ.குமார், விசிக மாவட்டச் செயலாளர் த. கு.பாண்டியன், சிபிஐ மாவட்டச் செயலா ளர் கலைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ரூ.19 கோடி அபராதம் வசூலித்த சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம்
சேலம், ஏப்.6- பயணச்சீட்டு இன்றி பயணம் செய்தது உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.19 கோடி வசூல் செய்துள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித் துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் உரிய பயணச்சீட்டு எடுத்த பின்னர் ரயில்க ளில் பயணிப்பதை தெற்கு ரயில்வே தொடர்ந்து ஊக்கு வித்து வருகிறது. சேலம் கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலை யங்களில் பயணச்சீட்டு இன்றி பயணம், அதிக பாரம் உட்பட பல்வேறு முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே பறக்கும் படை யினர் ஆங்காங்கே சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த 2023 - 24 ஆம் நிதியாண்டில் சோதனை யில் ஈடுபட்ட அதிகாரிகள், பயணச்சீட்டு இன்றி பயணம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பயணிகளி டம் ரூ.19 கோடியே 3 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளனர். இது முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிகபட்ச அளவா கும். குறிப்பாக, பயணச்சீட்டு இன்றி பயணம் செய்தது தொடர் பாக ஒரு லட்சத்து 58 ஆயிரம் 907 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, ரூ.12 கோடியே 89 ஆயிரம் அபராதம் மூலம் வசூலிக்கப் பட்டுள்ளது. இந்த அபராதத் தொகை இலக்கைக் காட்டிலும் கூடுதலாக 28 சதவிகிதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதகையில் கோடை சீசன்: 35 ஆயிரம் தொட்டிகளில் நாற்று நடவுப் பணிகள் நிறைவு
உதகை, ஏப்.6- கோடை சீசனுக்காக உதகை அரசு தாவர வியல் பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டி களில் நாற்று நடவுப் பணிகள் நிறைவடைந் தது. சர்வதேச சுற்றுலா நகரமான உதகைக்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலாப் பயணி கள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 90 சதவிகிதம் பேர் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல் கின்றனர். குறிப்பாக, விடுமுறை மற்றும் கோடை விடுமுறையின் போது பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாள் தோறும் வருகின்ற னர். அண்டை மாநிலங்களான கேரளா மற் றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளே அதிகம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு கோடை காலமான மே மாதத்தில் உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. 5 நாட்கள் நடக்கும் இந்த மலர் கண்காட் சியைக் காண பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களை மகிழ்விக் கும் பொருட்டு பூங்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப் படும். இதில், பல வகையான, பல வண்ணங் களை கொண்ட மலர்கள் பூத்து காணப் படும். இதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் பல வகையான மலர் செடிகள் நடவு செய் யப்பட்டு, அவைகளில் மலர்கள் பூத்து காணப்படும். இந்த மலர் தொட்டிகள் பூங்காவில் உள்ள மாடங்களிலும், புல் மைதானங்களிலும் அலங்கரித்து வைக்கப் படும். இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டிகளிலும் நாற்று நடவு செய் யும் பணிகள் துவங்கியது. மூன்று மாதங் களாக நடந்து வந்த நாற்று நடவு பணிகள் சனியன்றுடன் நிறைவடைந்தது. தற்போது மலர் செடிகள் நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது பெரும்பாலான மலர் நாற்றுக்களில் மொட் டுக்களும் காணப்படுகிறது. இம்மாதம் 15 ஆம் தேதிக்கு மேல் இந்த மலர் செடிகளில் பல வகையான மலர்கள் பூக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. எனவே, தேர்தல் மற்றும் பள்ளி முழு ஆண்டு தேர்வு முடிந்த பின் கோடை விடு முறையை கொண்டாட உதகை வரும் சுற் றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவில் உள்ள பல வகையான மலர்களை கண்டு ரசித்து செல்லலாம்.
ரயில் முன் பாய்ந்து குடும்பத்துடன் தற்கொலை
ரயில் முன் பாய்ந்து குடும்பத்துடன் தற்கொலை கோவை, ஏப்.6- சென்னையை சேர்ந்த தாய், மகன், மகள் ஆகிய மூவர் கோவையில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வர லட்சுமி. இவர் தனது கணவர், மகன் யுவராஜ் (16), மகள் ஜனனி (15) ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்கள் முன்பு வரலட்சுமியின் கணவர் காணாமல் போன தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னையில் வழக்கு கொடுக்கப்பட்டு, வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலை யில், சென்னையில் இருந்து வரலட்சுமி தனது மகன், மகளு டன், கேரளத்தில் வேலை தேடி செல்வதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயில் மூலம் பயணம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், ரயில் பயணத்தின் போது தங் கள் உடைமைகளை யாரோ திருடியதால் வேறு வழியின்றி, கோவை போத்தனூர் பகுதியில் இறங்கியுள்ளனர். பின்னர் உணவுக்கு கூட வழி இல்லாமல், மிகுந்த துயரத்தில் இருந்த வந்த இவர்கள், தண்டவாளத்தின் இரும்பு பாதையை பிடித்த வாறு கோவை இரயில் நிலையம் நோக்கி வந்துள்ளனர். அப் போது, நடக்கமுடியாமல் பசியால் வாடிய மூவரும் நஞ் சுண்டாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவ னத்தில் உணவு உண்டதாக தெரிகிறது. அதை தொடர்ந்து அங்கேய நீண்ட நேரம் இருந்த மூவரும், வியாழன்று மாலை திடீரென பாசஞ்சர் இரயில் முன் விழுந்து, மூவரும் ஒன்றாக தற்கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரும்புபாதை போலீசார் முன்று பேரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
தேர்தல் பறக்கும் படையினரிடம், வழக்குப் போட்டு நீதிமன்றத்திற்கு வாழ்நாளெல்லாம் அலைய வைப்பேன் என்று மிரட்டிய திருப்பூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந் தத்தின் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, தோல்விக்கு கார ணம் தேடும் வகையில் சனியன்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பாளர் முருகானந்தம் தேர்தல் பறக்கும் படையி னர் மீது புகார் கூறியிருக்கிறார். வெள்ளி யன்று கோபி தொகுதிக்கு உட்பட்ட பகுதி யில் வேட்பாளர் முருகானந்தம் சென்ற வாகனத்தை பறக்கும் படையினர் ஆய் வுக்கு உட்படுத்தினர். அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காத வேட்பாளர் முருகானந்தம் காவல் துறையினரைப் பார்த்து உங்கள் மீது வழக்குப் போட்டு நீதிமன்றத்திற்கு வாழ்நாளெல்லாம் அலைய வைப்பேன் என்று மிரட்டல் விடுத்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் முருகேசன் கொடுத்த புகா ரின் பேரில் குன்னத்தூர் காவல் நிலையத் தில் முருகானந்தம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 341, 353, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அச்சுறுத்தல் ஏற்படுத்துவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள னர். வேட்பாளர் முருகானந்தத்தின் செயல் வாக்காளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் செய்த செயலுக்கு வெளிப்படையாக மன் னிப்புக் கேட்கத் தயாராக இல்லாத முரு கானந்தம், எதிர் புகார் மனுவை அளித்துள் ளார். தன்னிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாகவும், இதுகுறித்து கேட் டதற்காக தன் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் முருகானந்தம் கூறியுள் ளார். அத்துடன் தனது நேரத்தை திட்டமிட்டு முடக்குவதற்காக இச்சம்பவம் நடந்துள்ள தாக சந்தேகம் எழுவதாக புகார் மனு அளித் துள்ளார். தேர்தல் தோல்வி நிச்சயம் என் பதை உணர்ந்து அதை திசை திருப்புவதற் காக நாடகமாடுவதாக திருப்பூர் தொகுதி மக்கள் கூறினர். அண்ணாமலை மீது வழக்கு இதேபோல், கோவை தொகுதி அதி முக வேட்பாளர் ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 127ன் கீழ் அண்ணாமலை மீது, பொதுக்கூட்டத்திற்கு இடையூறு ஏற்ப டுத்தியதாக கருமத்தம்பட்டி காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதற்கு போட்டியாக, பாஜகவினர் அளித்த புகாரின் பேரில், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மீது, அனுமதியின்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையி னர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஆட்சியர் ஆய்வு
திருப்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஆட்சியர் ஆய்வு திருப்பூர், ஏப். 6 - திருப்பூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணப்படும் எல்ஆர்ஜி அரசினர் மகளிர் கல்லூரியில் பாதுகாப்பு ஏற்பாடு களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சி யருமான தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். 18ஆவது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ கத்தில் வரும் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திருப்பூர் வடக்கு, தெற்கு, அந்தியூர், பவானி, கோபிசெட்டிபாளையம், பெருந் துறை ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெறு கின்றன. இந்த தொகுதிகளில் வாக்குப் பதிவுக்கு தேவை யான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. திருப்பூர் மக்களைவைத் தொகுதியில் 1744 வாக்குச் சாவடி களில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்ப திவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான திருப் பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு கொண்டு வரப்படும். இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் தேவை யான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடந்து வரு கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறை களில் உச்சகட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளது. இது தவிர சி.சி.டி.வி. கண்காணிப்பு அறை உள்ளிட்ட பல்வேறு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக சுத்தம் செய்யும் பணியும் நடந்து வருகிறது. மேலும், பாது காப்பு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவல ரும், மாவட்ட ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜ், மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாநகராட்சி ஆணை யர் பவன் குமார் ஜி.கிரியபனவர் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது உதகை, ஏப்.6- உதகை அருகே சிட்டாவில் பெயர் சேர்க்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப் பட்டார். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள தும்மனட்டி- 2 கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். விவசாயியான இவர், தனது பெயரை சிட்டாவில் சேர்க்க கடந்த ஜனவரி மாதம் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து உள்ளார். இதைத் தொடர்ந்து, தும்மனட்டி - 2 கிராம நிர்வாக அலுவலர் கற்ப கம் என்பவரை ஜெய்கணேஷ் நேரில் சந்தித்து, இது தொடர்பாக விசாரித்தார். ஆனால், ரூ.3000 பணம் கொடுத்தால் தான் சிட்டாவில் பெயர் சேர்க்கப்படும் என்று கூறி கற்பகம் காலதாமதம் செய்த துடன், அவருடைய விண்ணப்பத்தையும் நிராகரித்து விட்டார். இதன் பின்னர், மீண்டும் கடந்த பிப்ரவரி மாதம் இ-சேவை மையம் மூலம் ஜெய்கணேஷ் சிட்டாவில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளார். அப்போதும் கற்பகம் அதை நிராகரித்து விட்டார். தொடர்ந்து, இதுதொடர்பாக கற்பகத் திடம் முறையிட்ட போதும், ரூ.3,000 பணம் தந்தால் மட்டும் தான் சிட்டாவில் பெயர் சேர்க்க முடியும் கற்பகம் திட்ட வட்டமாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, ஜெய்கணேஷ் தனது நண்பரான குமார் என்பவரின் பெயரையும் சிட்டாவில் சேர்க்க வேண்டும் என்று கூறியதற்கு, மொத்தம் ரூ.6 ஆயிரம் லஞ்சமாக கேட் டுள்ளார். ஆனால் பணம் கொடுக்க விருப்பம் இல்லாத ஜெய்கணேஷ், இதுகுறித்து உதகை லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, கிராம நிர்வாக அலுவலர் கற்பகத்திடம் ஜெய்கனேஷ் வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் கற்பகத்தை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
பிளாஸ்டிக் கழிவுகளை தின்று கால்நடைகளும் பாதிப்பு
பிளாஸ்டிக் கழிவுகளை தின்று கால்நடைகளும் பாதிப்பு உதகை,ஏப் 6- உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலகங்களும் உள்ளன. வழக்கமாக உதகையில் தின மும் 30 டன் குப்பைகள் சேகரமாகி வருகிறது. இதில் 7 டன் நகராட்சி மார்க்கெட்டில் இருந்து சேகரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து லாரி மூலம் வார்டு வாரியாக பணியா ளர்கள் வாகனங்களில் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத் தின் கீழ் சேகரிக்கப்படுகிறது. இதனை தீட்டுக்கல் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு மக்கும் குப்பைகள் உர மாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உதகை கேசினோ சந்திப்பு அருகில் லிபர்ட்டி தியேட்டர் பின்புறம் உள்ள வேன் லைன் பகுதி யில் கடந்த சில நாட்களுக்கு குப்பைகள் குவிந்து மலை போல் காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களாக குப்பைகள் அல்லப்படாததால் காற்றில் பறந்து அருகில் உள்ள குடியி ருப்பு வாசிகளின் வீடுகளுக்கு குப்பைகள் வருகிறது. மேலும் துர்நாற்றம் வீசுயும் சில சமயங்களில் அந்த வழியாக வரும் கால்நடைகள் குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் அவையும் பாதிக்கப்படுகின்றன. இதேபோல் உதகை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக குப்பைகள் சரிவர அள்ளப்படுவது கிடையாது. மேலும் குப்பை அள்ளுவதற்கு போதுமான பணியா ளர்கள் இல்லை என்றும் வாகன பராமரிப்பு சரியில்லை என்றும் அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டப்படுகின்றனர். எனவே குப்பைகளை சரியாக அல்ல நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் பாஜக நிர்வாகி கைது
கோவை, ஏப்.6- கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரான அண்ணாமலைக்கு ஆதரவாக அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் பிரச்சா ரம் மேற்கொள்ள வந்தார். எவ்வித அனு மதியும் பெறாமல் தான்தோன்றித்தனமாக இடையர் பாளையத்தில் பிரச்சாரத்தில் ஈடு பட்டார். அப்போது அங்கு வந்த போலீசா ரும், தேர்தல் பறக்கும் படையினரும் உரிய அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தினர். இதனால் போலீசாருடன் வேலூர் இப்ரா ஹிம் மற்றும் பாஜகவினர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கி ருந்து கிளம்பி செல்வதாக கூறினார். பின்னர், அருகில் உள்ள கடைகளுக்கு சென்று சிறு சிறு பொருட்களை விலைக்கு வாங்கி அங்கு இருந்த பொதுமக்களிடம் வாக்குகள் சேக ரித்தனர். இதனைக்கண்ட தேர்தல் அதிகாரி கள் தங்களிடமே போக்கு காட்டுவதாக கூறி அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொண் டதாக வேலூர் இப்ராஹிம் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து கவுண்டம்பாளை யம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென் றனர்.
களையிழந்த அன்னூர் ஆட்டுச் சந்தை - வர்த்தகம் சரிவு!
கோவை, ஏப்.6- தேர்தல் நடத்தை விதிகள் கார ணமாக அன்னூர் ஆட்டுச் சந்தையில் ரம்ஜான் பண்டிகை கால விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக விவசாயி கள் மற்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், அன்னூரில் வாரம் தோறும் சனிக்கிழமை அன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெ றுவது வழக்கம். அன்னூர் சுற்றுவட் டார பகுதிகளில் மேச்சல் நிலங்கள் அதிகம் உள்ளதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் வளர்க்கும் ஆடு மற்றும் கோழிகளை இந்த சந்தை யில் விற்பனை செய்து வருகின்ற னர். கோவை மாவட்டத்தில் புகழ் பெற்ற இந்த ஆட்டுச் சந்தையில் ஆடு மற்றும் கோழிகளை மொத்த விலைக்கு வாங்க கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாது, கர்நா டக கேரள மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து செல்கின்றனர். வழக்கமாக ரம்ஜான் பண்டிகை காலத்தில் களைகட்டும் அன்னூர் ஆட்டுச் சந்தையில் சுமார் 1.5 கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை ஆடுகள் மற்றும் கோழி கள் விற்பனை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன் றத் தேர்தல் நடத்தை விதிகள் அம லில் உள்ள நிலையில், சனியன்று அதிகாலை வழக்கம் போல ஆட்டுச் சந்தை கூடியது. வழக்கத்தைக் காட்டி லும் விவசாயிகளும் வியாபாரிகளும் மிகவும் குறைவாக வந்திருந்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் சுமார் ரூ. 50 லட்சம் அளவுக்கு மட்டுமே வியாபாரம் நடைபெற்றதாக கவலை தெரிவித்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், ஒரு நபர் 49 ஆயிரம் ரூபாய்க்குள் மட்டுமே வர்த்தகம் செய்ய முடி யும் நிலை உள்ளதால், அன்னூர் ஆட்டுச்சந்தையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை கால விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக தெரிவித் தனர்.
கொளுத்தும் வெயிலிலும் வற்றாத கோவை குற்றாலம்
கோவை, ஏப்.6- கொளுத்தும் வெயிலிலும், வறட்சியின் பிடியில் சிக்காத நதி நீர் பாயும் அருவியாக கோவை குற்றாலம் இருந்து வருகிறது. கோயம்புத்தூர் மாநகரின் மேற்கே, மேற் குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது குற்றால அருவி. இந்த அருவி கரடு முரடான ஆபத்தான வழியில் ஓடி வரும் ஒரு சிறிய அருவியாகும். சற்று அகல மாகவும், குறைந்த உயரத்தில் இருந்து விழும் பகுதியில் குளிக்கும் பகுதியாகவும் உள்ளது. சிறுவாணி மலையின் கிழக்குச் சரிவில் உருவாவதால் சிறுவாணி அருவி என வும் அழைக்கப்படும். கோடை காலத்தில் பொதுவாக நீரோட்டம் குறைவாக இருக்கும். இந்த அருவி இயற்கை எழிலுக்கும், குளிர்ச் சியான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது. இது கோவையின் முக்கியமான சுற்றுலாத் தலங்க ளில் ஒன்று. இங்கே பல வகையான பறவைகளையும் விலங்குகளையும் ஒருங்கே காண முடியும். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளதால் மாலை 5 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு அனுமதி கிடையாது. வெயில் காலங்களில் இப்பகுதி நல்ல குளிர்ச்சியான காற்றையும், குளிர்ந்த நீரையும் தருவதால் பொதுமக்கள் சுற்றுலாச் செல்ல ஏற்றதாக விளங்குகிறது. இந்நிலையில் 41.6 °C எட்டிய நிலையிலும் வற்றாத நதியாக கோவை குற்றா லம் இருந்து வருகிறது. மேலும், இயற்கை சூழ்நிலை நிறைந்து பகுதியில் மிகவும் தூய் மையாக பாய்ந்து கொண்டிருக்கும் நதிநீர் அனைத்து மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
கோவையில் ரூ. 3 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல்
கோவை, ஏப்.6- கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட மூன்று கோடியே 54 லட்ச ரூபாய் மதிப்புடைய தங்கம் மற்றும் வைர நகைகளை பறக்கும் படை அதிகாரி கள் பறிமுதல் செய்துள்ளனர். கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவது AMBEE express நிறுவனம். கோவையில் தயாரா கும் தங்க நகைகளை விமானம் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் பணியினை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நி லையில், சனியன்று கோவை ராமநாதபுரம் பெர்க்ஸ் பள்ளி அருகே பறக்கும் படை அதி காரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக AMBEE express நிறுவனத்தின் வாகனத்தினை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அதில் தங்க கட்டி மற்றும் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் இருப்பது தெரிய வந்தது. ஆனால் அவற்றிக்கான உரிய ஆவ ணங்கள் எதுவும் இல்லை. இதனையடுத்து ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் அந்த வாகனத்தையும் அதிலிருந்த தங்க, வைர நகைகளையும் அதிகாரிகள் பறிமு தல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் அவற்றை தெற்கு வட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து அவற்றை அளவிடும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மணிமேகலை செய்தியாளர்களிடம் கூறுகை யில், பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகளின் மதிப்பு ரூ. 3 கோடியே 54 லட்ச வரை இருக்கலாம். தற்போது, நகை களை மதிப்பீடு செய்யும் பணியானது நடை பெற்று வருகிறது. தனியார் நிறுவனத்தின் வாகனத்தில் நகைகள் பறிமுதல் செய்யப்பட் டுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தனியார் நிறுவ னத்தினர் உரிய ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளதாக கூறினார்.