districts

img

மாணவர் சங்க கோரிக்கை மீது ஆட்சியர் நடவடிக்கை

சேலம், மார்ச் 16- குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்க இருந்த  நிலையில், அனைத்து மாணவர்க ளுக்கும் பட்டம் வழங்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார். சேலம் அரசு கலைக்கல்லூரி (தன் னாட்சி) பட்டமளிப்பு விழாவில், துறை வாரியாக முதல் 5 மதிப்பெண் எடுத்த மாணவர்களை மட்டும் பட்டமளிப்பு விழாவிற்கு பங்கேற்குமாறு தகவல் வெளியானது. இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் சேலம்  மாவட்ட துணைச்செயலாளர் டார் வின், அரசு கலைக்கல்லூரி கிளைச் செயலாளர் கோகுல், அபிராமி உள் ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகாரளித்தனர். இதைய டுத்து மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி, உடனடியாக கல்லூரி முதல் வரை தொலைபேசியில் அழைத்து விசாரித்து, பட்டமளிப்பு விழாவில் அனைத்து மாணவர்களும் பங்கேற் கும் வகையில் பட்டமளிப்பு விழாவை நடத்துமாறு உத்தரவிட்டார். மேலும், இதுசம்பந்தமாக சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, சேலம் அரசு கலைக்கல்லூரி பட்ட மளிப்பு விழாவில், தகுதியான அனை வருக்கும் பட்டம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகாரளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.