கோவை ஆக.31- கணுவாய் தடுப்பணை புனர மைப்புப் பணி துவக்க நிகழ்வு சனி யன்று கணுவாய் பகுதியில் நடை பெற்றது. கௌசிகா நீர்க்கரங்கள் மூல மாக கணுவாய் பகுதி மக்கள் மற் றும் தன்னார்வலர்களை இணைத்து கோவை மேற்கு மலைத் தொடர்கள் தடாகம் பகுதியின் விளிம்பில் அமைந்துள்ள சுமார் 14 ஏக்கர் பரப்பளவு உள்ள கணு வாய் தடுப்பணை சீரமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதன் முதல் கட்டமாக சனி யன்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டி நிகழ்வை துவக்கிவைத்தனர். இதுகுறித்து கௌசிகா நீர்கக ரங்கள் அமைப்பினர் கூறுகையில், கோவை மேற்கு தொடர்ச்சிமலை தடாகம் பகுதியில் உள்ள மிக முக் கியமான தடுப்பணை இதுவாகும். சங்கனூர் நதியின் இடையே நீர் வனத்துறை கட்டுபாட்டில் இது அமைந்துள்ளது. கடந்த ஆண்டு சுமார் 27 வருடங்களுக்கு பிறகு கணுவாய் தடுப்பணை நிறைந்து வழிந்தது. இது சின்னவேடம்பட்டி ஏரி ராஜவாய்க்காலுக்கு பெரும ளவு தண்ணீர் கிடைத்தது. இந்நிலையில் அந்த தடுப் பணை முழுவதும் சீமை கருவேல மரங்கள் மற்றும் குப்பை கழிவுகள் நிறைந்து பராமரிப்பின்றி கிடந்த நிலையில், அதனை மீட்டுருவாக் கம் செய்ய தன்னார்வலர்கள் கெளசிகா நீர்கரங்கள் அமைப்பு முயற்சி எடுத்து பணிகள் துவங் கப்பட்டது. இதன் மூலம் குப்பை களை ஒதுக்கி அகற்றி சீமை கரு வேல மரங்களை அகற்றி சுத்தம் செய்து சுற்றிலும் கம்பி வேலி அமைத்து மரக்கன்றுகள் வைத்து பசுமை பணிகள் மேற்கொண்டு நன்னீர் சேமிக்கும்படி கனுவாய் தடுப்பணையை தொடர்ந்து பராம ரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என் றார். நிகழ்வில் மாநகராட்சி ஆணை யர் பேசுகையில், இன்று பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ற வாறு நீர் நிலைகளை பாதுகாப்பது அதை நிர்வகிப்பது பெரும் கடமை யாக உள்ளது. தங்களது ஊரில் சுமார் பத்துக்கு மேற்பட்ட நீர்நிலை களை புனரமைப்பு செய்ததாக நெகிழ்வுடன் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து ஆட்சியர் பேசுகையில், மழை பொழிவு தொடர்ந்து அதிகரித்த படி உள்ளது. அதில் எந்த மாறுபாடும் இல்லை. ஆனால் அது குறுகிய காலத்தில் காலநிலை மாற்றம் காரணமாக அதிக அளவு மழைப்பொழிவை நாம் பெறுகிறோம். இதன் விளை வாக தண்ணீர் உடனடியாக அதிக அளவில் ரன் ஆஃப் ஆக ஓடிவிடு கிறது. அத்தகைய சூழ்நிலையில் நீர் நிலைகளை காப்பது அவற்றை பராமரிப்பது மிகவும் முக்கியத்து வம் வாய்ந்தது அதன் மூலம் கிடைக் கும் நீரை சரியானபடி சேமிக்க முடி யும் என்றார். இந்த நிகழ்வில் ஒரு பகுதியாக பன்னிமடை ஊராட்சி நிர்வாகம் சார்பாக குப்பை மேலாண்மை செய்ய கண்டறியப்பட்ட இடத் திற்கு முறைப்படி அனுமதி அளித்து ஒதுக்கும்படி மாவட்ட ஆட்சியர் வசம் கோரிக்கை விடுத்தனர். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக தடுப் பணையை சுத்தம் செய்த தூய்மை பணியாளர்கள் மற்றும் கணுவாய் தடுப்பணை பாதுகாப்புக் குழு தன் னார்வலர்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். இதில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர் மாமன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.