சேலம், ஆக.8- நிலுவையில் உள்ள மூன்று மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூய்மை இந்தியா திட்டப் பணியா ளர்கள் சேலம் ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டனர். ஒன்றிய அரசின் தூய்மை இந் தியா திட்டத்தின் கீழ், பரப்புரையா ளர்கள் மற்றும் மேற்பார்வையா ளர்களாககடந்த 2017 ஆம் ஆண்டு சேலம் நகராட்சி பகுதிகளில் சுமார் 130பணியாளர்கள் தனியார் நிறுவ னத்தின் ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் கிராமப் பகுதிகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்து சுகாதார முள்ள கிராமத்தை உரு வாக்கும் பணியாளர்களாக பணி யாற்றி வருகின்றனர். இதனி டையே, இந்தபரப்புரையாளர்க ளுக்கு மாதம் ரூ.21,118 எனவும், மேற்பார்வையாளர்களுக்கு ரூ,16,817 ஊதியம் என நியமிக்க ப்பட்டு, கடந்த 2022 ஆம் ஆண்டு புதிதாக ஒப்பந்தம் போடப்பட்ட லிபி இன்டீரியர் நிறுவனம் மூலம், மீண்டும் பணி அமர்த்தப்பட்டனர். பணி அமர்த்தபட்ட தூய்மை இந்தியா திட்டப்பணியாளரிடம் தனியார் நிறுவனம் வைப்பு தொகை யாக ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை பெற்றதாக தெரிய வருகிறது. இந்நிலையில், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, தனி யார் நிறுவனம் நிர்ணயித்த சம்ப ளத்தை வழங்காமல், குறைத்து வழங்குவதாகக்கூறி 100க்கும் மேற் பட்டோர் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டனர். அப்போது போராட்டக்காரர் கள் பேசுகையில், தனியார் நிறுவ னம் எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊழியத்தை வழங்காமல், பரப்பு ரையாளர்களுக்கு ரூ.12,500, மேற் பார்வையாளர்களுக்கு ரூ.9,200 வழங்கி வருகிறது. மேலும், எங்க ளது ஊதியத்தில் 12சதவிதம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை இஎஸ்ஐ, பிஎப்ஆகியவற்றில் சரியாக வரவு வைக்காமல் முறை கேட்டில் ஈடுபட்டு வருகிறது. எனவே, நிர்ணயிக்கப்பட்ட ஊதி யத்தை வழங்க வேண்டும். எங்களி டம் பெறப்பட்ட வைப்புத் தொகை யை திரும்ப வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள மூன்று மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், என்றனர்.முடிவில், ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.