உடுமலை,அக்.30- திருமூர்த்தி அணையில் இருந்து பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய செயல்படுத்தப்படும் திட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் போனஸ் வழங்காததை கண் டித்து தொழிலாளர்கள் சிஐடியு தலை மையில் திருமூர்த்தி அனை பகுதி யில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவில் உடுமலை நகராட்சி நீங்கலாக ஐந்து பேரூராட்சி மற் றும் இரண்டு தாலுகாவில் இருக்கும் 70 ஊராட்சியில் வசிக்கும் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்க திருமூர்த்தி அணை யில் இருந்து கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம், குடிமங்க லம் கூட்டுக்குடிநீர் திட்டம், மடத்துக் குளம் கூட்டுக்குடிநீர் மற்றும் புதிய மடத்துக்குளம் கூட்டுக்குடிநீர் திட்டம் என நான்கு திட்டங்கள் மூலம் தண் ணீர் விநியோகிக்கப்படுகிறது. திரு மூர்த்தி அணையில் இருந்து தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கட் டுப்பாட்டில் இருக்கும் நீர் உந்து நிலை யங்களில் இருந்து தண்ணீர் விநி யோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நீர் உந்து நிலையங்களில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு பல ஆண்டுக ளாக ஊதிய உயர்வு வழங்கப்பட வில்லை. மேலும் இந்த ஆண்டுக் கான தீபாவளி பண்டிகைக்கு தர வேண்டிய போனஸும் வழங்கப்பட வில்லை. இந்நிலையில், புதனன்று சிஐடியு தொழிற்சங்கத்தின் தலை மையில் நீர் உந்து நிலைய அலுவல கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இது குறித்து தொழிலாளர்கள் தெரிவிக்கையில், உடுமலைப் பேட்டை மற்றும் மடத்துக்குளம் தாலு காவில் உள்ள அனைத்து பொது மக்க ளுக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நான்கு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரியத்தினர் குடிநீர் வழங்க தனி யார் நிறுவனத்திற்கு மூன்று ஆண்டுக ளுக்கு ஒப்பந்தம் எடுத்த தயா கன்ஸ்ட் ரக்சன் ஈரோடு என்ற கம்பெனியிடம் தீபாவளி போனஸ் கேட்டபோது போனஸ் தர மறுத்துள்ளார்கள். மேலும் நீண்ட நாட்கள் கோரிக்கை யான ஊதிய உயர்வு தர மறுத்து வரு கிறார்கள். திருமூர்த்தி அணையில் பணியாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளார் கள். இதனால் இரண்டு தாலுகா முழுவதும் இருக்கக்கூடிய பொது மக்களுக்கு தீபாவளி பண்டிகை நேரத்தில் குடிநீர் செல்வது தடைபடக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. நிர்வா கத்தினர் தொழிலாளர்களின் நியா யமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.