districts

img

கனமழையால் சரிந்த தடுப்புச்சுவர்

உதகை, மே 4- பர்லியார் குடியிருப்பு பகுதியில் கன மழையின் காரண மாக கட்டப்பட்ட தடுப்புச்சுவர் சரிந்துள்ளது.  குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியார்  குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு வசிக்கும் பெரும்பாலா னோர் வியாபாரத்தை நம்பி உள்ளனர். பர்லியார் குடியிருப்பு பகுதி பர்லியார் ஊராட்சியின் 9 ஆவது வார்டுக்கு உட்பட்டது ஆகும். இந்த குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் தங்க ளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர  கோரிக்கை விடுத்து இருந்தனர். இதில் மழை காலங்களில் வீடு களுக்கு பின்புறம் மண்சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்புச் சுவர் அமைத்து தர வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை யாக இருந்தது. இதன்படி ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்றது. தடுப்புச்சுவர் கட்டும் பணி கடந்த 10 நாட்க ளுக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக குன்னூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிந்ததால் பொதுமக்கள் குடி யிருக்கும் வீடுகளுக்கு பின்புறம் கற்கள் மற்றும் மண் விழுந்து உள்ளது. எதிர்வரும் நாட்களில் குன்னூர் பகுதியில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மழை பெய்தால் மழை நீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. இத னால் வீடுகள் சேதமடையும் அபாயம் உள்ளது. தரமற்ற கட்டுமான பணியே இடிந்து விழ காரணம் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டு தரமான முறையில் தடுப்புச்சுவர் விரைவில் அமைத்துத்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.