districts

img

அரசுப்பள்ளியில் நாணய கண்காட்சி

ஈரோடு, செப். 15- அந்தியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளியன்று நாணய கண்காட்சி நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய நாணயங்கள், வெளி நாட்டு நாணயங்கள் மற்றும் தபால் தலைகள் கண்காட்சி வெள்ளியன்று நடைபெற்றது. இக்கண்காட்சியை ப.குமார பாளையம் அருகே உள்ள வட்டமலையைச் சேர்ந்த பஞ் சாலை தொழிலாளியான ஆர்.வெங்கடாசலம் காட்சிப்படுத்தி னார். மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் இக்கண்காட்சியை பார்வையிட்டனர்.