கோவை, மார்ச் 27 ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் சூழல் வந்திருக்கி றது, இனி கோவைக்கு அடுத்த 6 மாதங்களில் மகத்தான வளர்ச்சி வரப் போகிறது என தொழில் துறை அமைச் சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரி வித்தார். மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பில் கோவை நாடா ளுமன்ற திமுக வேட்பாளராக கண பதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். இவர், தனது வேட்பு மனுவை புத னன்று தாக்கல் செய்தார். கோவை பந்தயசாலை பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான கூட்டணி கட்சி யின் நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரும், தேர் தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடியிடம் வேட்புமனு தாக் கல் செய்தார். இதில், தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிபிஎம் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன், திமுக மாந கர் மாவட்டச் செயலாளர் நா.கார்த் திக், காங்கிரஸ் மாநில செயல் தலை வர் மயூரா ஜெயக்குமார், திமுக ஐடி விங் மாநில துணைச்செயலாளர் மகேந் திரன் ஆகியோர் உடனிருந்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியா ளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர். பி.ராஜா, தேர்தல் பரப்புரையின் போது என்னிடம் ஆட்டுக்குட்டியை பரிசாக கொடுத்தனர். அதனை வைத்து, பிரி யாணி சமைக்கப் போகிறேன். பாரதிய ஜனதாக கட்சி மிகவும் கொச்சையான அரசியலை தமிழகத் திற்கு கொண்டு வந்து சேர்த்து இருக் கிறார்கள். ஆனால் தமிழகத்தில் ஜன நாயகம் செழித்தோங்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்று ஒவ் வொரு நாளும் முதலமைச்சர் வேலை செய்து வருகிறார். தேர்தல் காலத்தில் எதிரணியினர் மாற்றி மாற்றி சொல்வார்கள். அதனால் தேர் தல் களம் சூடு பறக்கும். ஆனால் தரத்தை மீண்டும் மீண்டும் எதிரணியி னர் குறைத்து கொண்டே இருக்கக் கூடாது. அதிமுகவினர் ஒரளவு சரி யாக நடந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சில பேர் கட்சியை கொச்சைப்ப டுத்தும் வகையில் பேசுவது, அந்த கட்சியினருக்கே பிடிக்கவில்லை. ஜனநாயம் மற்றும் நாகரீக அரசிய லுக்கு பெயர் பெற்ற மாநிலம் தமிழ் நாடு. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வும், இந்திய நாட்டின் வளர்ச்சிக் காகவும் அனைவரும் இந்தியா கூட்ட ணியில் ஒன்று சேர்ந்திருக்கிறோம். ஆனால், இந்த நாடும், இனமும் முன் னேறக்கூடாது, அழிய வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மறுபக்கம் இருக்கிறார்கள். இவர் கள், கீழ்தரமான அரசியலை ஓரங் கட்டி விட்டு வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். பத்து ஆண்டுகளில் அவர்கள் எதுவும் செய்யவில்லை. இந்த இரண்டரை ஆண்டுகளில் திமுக ஆட்சியில் தான் தமிழகம் செழித்தோங்கியுள்ளது. இந்தியா வின் நெம்பர் 1 மாநிலமாக விளங்கு கிறது. மாநிலத்திலும், ஒன்றியத்தி லும் இந்தியா கூட்டணி ஆட்சி அமை யும் சூழல் வந்திருக்கிறது. கோவைக்கு அடுத்த 6 மாதங்களில் மகத்தான வளர்ச்சி வர உள்ளது. கோவையை பொருத்தவரை மெட்ரோ ரயில், டெக்ஸ் சிட்டி, விமான நிலைய விரி வாக்கம் என அதிமுக கிடப்பில் போட் டது அனைத்தையும் செய்தது திமுக, என்றார்.