districts

மத்திய சிறையில் கண்காணிப்பு தீவிரம்: கோவை மாநகர காவல் ஆணையர் பேட்டி

கோவை, டிச.18- கோவை மத்திய சிறையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாநகர  காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். கோவை, ராமநாதபுரம் மற்றும் செல்வபு ரம் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 54 கண்காணிப்பு கேமராக்கள், கண்காணிப்பு கேமராவிற்கான கட்டுப்பாட்டு அறைகள் ஆகியவற்றை செயல்பாட்டுக்கு மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை தொடங்கிவைத்தார். பின்னா், அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது, கோவை மாநகரில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அதன் படி, ராமநாதபுரம் பகுதியில் 30, செல்வபு ரம் பகுதியில் 24 என 54 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநகரில் தற் போது 30 ஆயிரம் கேமராக்கள் செயல் பாட்டில் உள்ளன. மேலும், முக்கிய சாலை களில் 15,000 கேமராக்கள், குடியிருப்புப் பகுதிகளில் 15,000 கேமராக்கள் பொருத் தப்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்கள், பேருந்து நிலை யங்கள், பொதுமக்கள் அதிகளவில் கூடும்  பகுதிகளை மையமாக வைத்து 110 ஆர்டிபி சியல் இன்டெலிஜென்ஸ் கேமராக்கள் நிறு வப்பட்டுள்ளன. மேலும், தேவைப்படும் இடங்களில் இது போன்ற நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. மத்திய சிறையில் ஐஎஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருப்பதாக மீண்டும் கைது செய்யப்பட்ட கைதி ஒருவர் ஐஎஸ் அமைப்பின் கொடியை வரைந்ததாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து சிறையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது என்றார்.