கோவை, ஜன.13- வாலிபர் சங்கம் மற்றும் பாலர் சங்கத்தின் சார்பில் கோவை சௌரிய பாளையத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் ஞாயிறன்று நடைபெற்றது. கோவை மாவட்டம், சவுரி பாளையம் மாரியம்மன் கோவில் திடலில் ஞாயிறன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாலர் பூங்கா இணைத்து முதலாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டி கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக, ரஞ்சிதம் ராமமூர்த்தி தலைமையில் சமத்துவ பொங்கல் வைத்தனர். பின்னர் சிறுவர்களுக்கான ஓட்டப்பந்த யம், பக்கெட்டில் பந்து போடுதல், கார்ட்டூன் வண்ணம் அடித்தல், தவளை போட்டி உள்ளிட்ட போட்டிகளை ராஜப்பா, வி.கிருஷ்ணசாமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். லெமன் ஸ்பூன், பலூன் ஊதி உடத்தல், நடன போட்டி ஆகிய வற்றை சக்திவேல், எஸ்,மாரியப்பன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இசை நாற்காலி, கோலபோட்டிகள் நடைபெற் றது. இதனை பாலர் பூங்கா ஒருங்கிணைப்பாளர் ஆர்.மூர்த்தி துவக்கி வைத்தார். மாலை மேடை நிகழ்ச்சிகளும், இதனையடுத்து, பரிசளிப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, பாலர் பூங்கா ஒருங்கிணைப்பாளர் விஷ்ணுலட்சுமி தலைமை வகித்தார். பாலர் பூங்கா எம்.ஜி. கன்ஷிகா வரவேற்றார். பாலர் பூங்கா மாநில ஒருங்கிணைப்பாளர் என்.அமிர்தம் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், மாணவர் பெற்றோர் நலச் சங்கம் சார்பில் வி.தெய்வேந்திரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் இ.ராம மூர்த்தி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.அர்ஜூன், பாலர் பூங்கா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.உஷா, வாலிபர் சங்க சிங்கை நகரச் செயலாளர் எம்.மணிபாரதி, நகரப் பொருளாளர் எம்.தியாகு ஆகியோர் வாழ்த்தி பேசி னர். முடிவில், ஹெயில்மேரி நன்றி கூறினார்.