கோவை, டிச.10- கோவை மாநகரில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், நடப்பாண்டில் கொலை வழக்குகள் 40 சதவிகிதம் குறைந்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் பால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோயமுத்தூர் ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா ஆகிய அமைப்புகளின் சார்பில், கோவை மாநகர காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் காவலர்களில் சிறப் பாக பணியாற்றிய 100 காவலர்க ளுக்கு விருது வழங்கும் விழா அவி நாசி சாலையில் உள்ள தனியார் விடுதி அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணை யர் வி.பாலகிருஷ்ணன் பங்கேற்று, காவலர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார். இதன்பின் அவர் செய் தியாளர்களிடம் கூறுகையில், தற் போது குற்றவாளிகள் செல்போன் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சமூக ஊடகங்கள் மற்றும் செல் போன் அப்ளிகேஷன்களை பயன் படுத்துவதால் குற்றவாளிகளை பிடிப் பதில் தாமதம் ஏற்படுகிறது. தொழில் நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தவாறு காவல் துறையில் பல்வேறு நுட்பங் களை பயன்படுத்தி வருகிறோம். பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடு கின்றனர். அவர்களை பிடிப்பதற்கு தனிப்படைகளை அந்தந்த மாநிலங்க ளுக்கு அனுப்பி பிடிப்பதால் தாம தம் ஏற்படுகிறது. சைபர் கிரைம் பொருத்தவரை 1030 என்ற எண்ணில் குற்றம் நடை பெற்ற 24 மணி நேரத்திற்குள் பொது மக்கள் புகாரளித்தால் குற்றவாளி களை கண்டுபிடிக்க எளிதாக இருக் கும். ட்ரோன் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பு கோணத்தில் பார்க்கும் பொழுது விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தொழில்நுட்ப வளர்சிக்கு தகுந்தபடி காவல் துறையினர் குற்றங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காவலர்க ளுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிப்பதால் காவல் துறையினரின் பணிச்சுமை சற்று குறைந்துள்ளது. காவலர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கு காவல்துறையின ருக்கு தனி பயிற்சி அளிக்கப்பட்டு வரு கிறது.
கோவையைப் பொறுத்த வரை கடந்த 10 ஆண்டுகளில் ஆண் டிற்கு 30 முதல் 32 கொலைகள் என்றி ருந்த நிலையில், நடப்பாண்டில் அது 40 சதவிகிதமாக குறைந்து 21 கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகியுள் ளது. அதேபோல் கோவை மாநகரத் தில் போக்குவரத்தை சீரமைப்பதற் காக பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொண்டதன் பலனாக விபத்துகள் குறைந்துள்ளன. ஆம்புலன்ஸ் செல் வதற்கான நேரம் கடந்தாண்டு 11.4 நிமிடங்களாக இருந்தது. தற்போது 7.4 நிமிடங்களாக குறைந்துள்ளது. இதனால் ஒரு உயிரை காப்பாற்றுவ தற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. கோவை மாநகரத்தில் போக்கு வரத்து சிக்னல்கள் நீக்கப்பட்டு, “யு - டர்ன்” முறை அமல்படுத்திய பிறகு, சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். முக்கியமான பகுதிகளில் ஆர்டிஃபிசியல் இண்ட லிஜென்ஸ் தொழில்நுட்பத்துடன் முதற்கட்டமாக 110 கேமராக்கள் பொருத்தப்பட்டு இரண்டாம் கட்ட மாக கேமராக்கள் பொருத்த நடவ டிக்கைகள் மேற்கொண்டு வருகி றோம். மேலும், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் சமூக வலை தளங்களில் பதிவிடும் வகையில் யாரேனும் செயல்பட்டால் சட்ட ஆலோசனையின் பேரில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு வி.பால கிருஷ்ணன் தெரிவித்தார்.