திருப்பூர், மே 9- மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் வலையபாளையத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி திங்களன்று தொடங்கி வைக்கப்பட்டது. கோவை நாடாளுமன்றத் தொகுதி, பல்லடம் ஊராட்சி ஒன்றியம், பூமலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வலையபாளையத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தேன்மொழி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி பாலசுப்ரமணியம், பூமலூர் ஊராட்சி மன்ற தலைவர் ப்ரியங்கா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சபுரோ எம்.ரங்கசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர்.பரமசிவம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வை. பழனிசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.