districts

img

இந்தியா கூட்டணிக்கே எங்கள் ஆதரவு

கோவை, ஏப்.10 இந்தியா கூட்டணியை ஆத ரிக்க கோவை மலையாள மக்கள் அமைப்புகளின் பேரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மலையாள மக்கள் அமைப்பின் பேரவை கூட்டம், ஏப்ரல் 9ஆம் தேதியன்று, கோவை  காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள கோயம்புத்தூர் மலை யாள சமாஜம் அரங்கில் நடைபெற் றது. கோயம்புத்தூர் மலையாள  பண்பாட்டு மேடை ஒருங்கிணைப் பில் நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு, கே. சந்தோஷ் குமார் தலைமை வகித்தார். என்.ஆர்.முருகேசன் வரவேற்று பேசினார். மார்ச்சிஸ்ட கட்சியின்  மாவட்டச் செயலாளர் சி.பத்மநா பன், செயற்குழு உறுப்பினர் கிருஷ் ணமுர்த்தி மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மக்க ளவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர். பி.ராஜா, திமுக கோவை மாநகர்  மாவட்டச் செயலாளர் ந. கார்த்திக்  ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டத்தில் பேசிய கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ஒன்றிய பாஜக  அரசு எதிர்கட்சிகள் ஆளக்ககூடிய மாநிலங்களில் ஆளுநர்களை பயன்படுத்தி இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கடிகளை கொடுக்கிறார்கள். கேரள மாநில  அரசு சட்டமன்றத்தில் நிறைவேற் றிய மசோதாக்களை நிறுத்தி வைத்து, குடியரசு தலைவருக்கு காலதாமதமாக ஆளுநர் அனுப்பு கிறார். அப்படி தாமதமாக மசோ தாக்களை அனுப்பினாலும். குடி யரசு தலைவரும் அம்மசோதாக் கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.  கேரள அரசு நிறைவேற்றிய மசோதா என்பது மாநில மக்களின்  நலன் சார்ந்தது. இதனை ஆளுநர்  கிடப்பில் போடுவது தவறு என  கேரள அரசு நீதிமன்றத்தை  நாடியது. தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், கேரள அரசுக்கு  தமது ஆதரவை வழங்கினார். பாஜக அரசு ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடக்கும் நோக்கத்துடனேயே செயல்பட்டு வருகிறது. எனவே,  இந்த தேர்தலில் நாம் மாநிலங்க ளின் உரிமைகளையும், ஒற்றுமை யையும் காக்க, மோடி அரசாங் கத்தை வீழ்த்தி இந்தியா கூட்ட ணியை ஆட்சியில் அமர்த்த வேண் டும் என கேட்டுக்கொண்டார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், நடை பெறுவது தேர்தலா? அல்லது போரா? என்று எண்ணத் தோன்று கிறது. நான் முருக பக்தன் கேர ளத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் திருப்பணிக்கு உதவிகள் செய்ததுண்டு. என்னைபோல் எத்தனையோ பேர் ஆலய திருப்ப ணிகளுக்கு பெரும் உதவிசெய்து  வருகிறார்கள். ஆனால் பாஜக கட்சி யினர் தாங்கள்தான் கோவில்களை கட்டியதுபோலும் அடியில் படுத் துக்கொண்டு கோவில்களை தாங்கி பாதுகாப்பதுபோலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சிகாலத்தில் தான் கோவில்களும், திருப்பணிகளும் இந்துசமய அறநிலையதுறை சார்பில் சிறப்பாக செயல்பட்டு வரு கிறது பாஜகவினர் கடவுள் மற்றும்  மதநம்பிக்களை வைத்து மக்களை  ஏமாற்றி வெறுப்பை உருவாக்கி கீழ் தரமான அரசியல் செய்து வருகி றார்கள்.  கோவை மகத்தான தொழில்ந கரம். கர்நாடகாவுக்கு பெங்க ளூர் எப்படியோ? அதைபோல, கோவையை வெகுவிரைவில் வளர்ச்சியடைந்த மாநகரமாக உருவாக்கி காட்டுவோம். அதற்கு  வலுசேர்க்கும் விதமாக நடைபெற  உள்ள மக்களவை பொதுத்தேர்த லில், இந்தியா கூட்டணி சார்பில்  கோவை தொகுதியில் போட்டியி டும் வேட்பாளர் கணபதி ராஜ்கு மாருக்கு வாக்கு அளித்து வெற்றிய டைய செய்ய வேண்டும் என கேட் டுக்கோண்டார். நிகழ்வின் முடிவில்  கே.ராமகிருஷ்ணன் நன்றி கூறி னார். நிகழ்வில் கோவையில் வசிக் கும் மலையாள மக்கள் 40 க்கும்  மேற்பட்ட அமைப்புகள் சார்பில் அதன் நிர்வாகிகள், தொண்டர்கள்  திரளாக கலந்து கொண்டனர்.