districts

img

குரங்குகள் மரணம்: கோவை வனப்பாதுகாப்பு படை கூடுதல் பொறுப்பு அலுவலர் நேரில் ஆய்வு

உடுமலை, மார்ச் 1- ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்குட் பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரப் பகுதியில் கோவிலும், வனப் பகுதியில் பஞ்சலிங்க அருவியும் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான குரங்குகள் வசித்து வருகின்றன. இங்குவரும் சுற்றுலாப் பயணிகள் உணவுப் பொருட்களை குரங்குகளுக்கு அளித்து வருகின்றனர். கடந்த சில  தினங்களுக்கு முன்பு இங்கு உள்ள  குரங்குகளுக்கு மர்ம நோய் தாக்கு தல் காரணமாக, சோர்வாக காணப் பட்டன. இதையடுத்து, உடுமலை வனச்சரகர் மணிகண்டன் தலைமை யில், பாதிக்கப்பட்ட குரங்குகளை  பிடித்து, அவற்றின் ரத்த மாதிரி எடுக் கப்பட்டு, ஆய்விற்காக சென்னையி லுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நீலகிரி வரையாடுகள் திட்ட இயக்குநரும், கோவை வனப்பாதுகாப்பு படை அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வகித்துவரும் கே.கணேஷ்ராம் தலைமையில், கோவை வன கால் நடை அலுவலர் டாக்டர் சுகுமார்,  பொள்ளாச்சி உதவி வனகால்நடை  அலுவலர்  விஜயராகவன், உடு மலை வனச்சரகர் மணிகண்டன், தளி வனவர் ஜெய்சன்பிரதீப்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் 15 மேற்பட்ட வன அலுவலர்கள், ஊழியர்கள் கொண்ட குழுவினர்  வெள்ளியன்று திருமூர்த்திமலை யில் ஆய்வு மேற்கொண்டனர்.