districts

img

ரூ.30.27 லட்சத்தில் பல்நோக்கு கூடம் கோவை முன்னாள் எம்.பி., திறந்து வைப்பு

கோவை, ஜன.4- கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி. ஆர்.நடராஜனின், தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப் பட்ட பல்நோக்கு கூடம் வெள் ளியன்று திறந்து வைக்கப்பட் டது. கோவை மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம், செம்மாண்டாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி யில், கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப் பினர் பி.ஆர்.நடராஜனின் தொகுதி மேம் பாட்டு நிதி, ரூ.30 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட் டில் பல்நோக்கு கூடம் கட்டப்பட்டது. வடு கன்காளிபாளையம் பள்ளிவாசல் மற்றும் உருது பள்ளி முன்பு கட்டப்பட்ட பல்நோக்கு கூடம் திறப்பு விழா வெள்ளியன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண் டன முன்னாள் எம்.பி., பி.ஆர்.நடராஜன், புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர்  ஒன்றியச் செயலாளர் ஏ.சந்திரன் மற்றும்  அனைத்துக்கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.