districts

“கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு”

காவல் துறையின் பாரபட்சம்

இந்துத்துவ மற்றும் இஸ்லாமிய மதஅடிப்படைவாத அமைப்புகள் நாள்தோறும்  சர்ச்சையான கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்ற னர். அருவருப்பான மற்றும் மோதல் போக்கை உருவாக்கும் வகையில் இந்த  பதிவுகள் இடம்பெற்று வருகிறது. இதுகுறித்து முற்போக்கு ஜனநாயக அமைப்பு கள் புகார் அளித்தால் காவல்துறை கண்டுகொள்வதில்லை. அதேநேரத்தில் முற் போக்காளர்கள், கடவுள் மறுப்பாளர்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி னால் யாரும் புகார் அளிக்காமலேயே காவல்துறையே புகார் அளித்து கைது செய்கி றது. இந்த விவகாரத்தில் மட்டுமல்லாது ஆர்ப்பாட்டங்கள், பிரச்சார இயக்கங்கள் இவையனைத்திற்கும் இந்த வேறுபாடுகளை காவல்துறையினர் பின்பற்றுகின்ற னர். மதவாதிகளிடம் நட்பை பாராட்டிக் கொண்டு முற்போக்கு ஜனநாயக அமைப்பு களிடம் பகைமை பாரட்டுவதாக ஜனநாயக, முற்போக்கு அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

கோவை, ஜன.13–  கருத்தை வெளிப்படுத்த அனைவருக் கும் உரிமை உண்டு என சமூக வலைத் தளங்களில் கடவுள் மறுப்பு கொள்கையை பதிவிட்டவருக்கு ஜாமீன் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அனீஸ். கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர். இந்நிலையில் சமீ பத்தில் சர்ச்சையில் சிக்கி பெண் சாமியார் குறித்து முகநூல் பக்கத்தில் ஒரு பிரிவினர் விமர்சித்து வந்துள்ளனர். இதனை கண்ட  அனீஸ் அனைத்து மதங்களிலும் மூட நம்பிக்கை உள்ளது என்கிற கருத்தை வெளிப் படுத்தியுள்ளார். அனீஸ் வெளிப்படுத்திய கருத்து குறித்து யாரும் நேரிடையாக புகார் அளிக்கவில்லை. இருப்பினும் அனீஸ் வெளிப்படுத்திய கருத்து இரு பிரிவினரி டையே மோதலை ஏற்படுத்தும் சர்ச்சைக் குரிய கருத்து என குனியமுத்தூர் உதவி ஆய்வாளர் கணேஷ்குமார் புகார் அளித் தார். இதனடிப்படையில் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் இரு மதங்களுக்கு இடையே பகை உணர்வை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அனீஸை கைது செய்து பெருந்துறை கிளைச் சிறையில் அடைத்தனர்.  இந்நிலையில் அவர் ஜாமீன் கேட்டு  கோவை மாவட்ட முதன்மை  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த  ஜாமீன் மனு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சக்தி வேல், மனுதாரர் ஒரு நாத்திகர், மனுதார ருக்கு தனது கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு.  இந்திய அரசியலமைப்பு சட்டம் இதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. புகாரில் மக்கள் மத்தியில் நல்லிணக் கத்தை, ஒற்றுமையை சீர்குலைக்கும் வகை யில் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுக் கான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருதவில்லை. ஆகவே, அனீசுக்கு நிபந் தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட் டார்.