districts

img

தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை?

கோவை, மார்ச் 31- நிதி வழங்குவதில் தமிழ் நாட்டிற்கு ஓரவஞ்சனை காட்டும் பாஜக-விற்கு தேர்த லில் பாடம் புகட்ட வேண்டும்  என கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கண பதி ராஜ்குமார் வாக்குசேக ரிப்பின்போது பொதுமக்களி டம் உரையாற்றினார். இந்தியா கூட்டணி சார் பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கள்ளி மடை பகுதியில் பிரச்சாரத்தை துவக்கிய அவருக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து உப்பிலி பாளையம் பகுதியில் வாலிபால் விளையாடி இளைஞர்களை கவர்ந்த வேட்பாளர், வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் ஏதாவது ஒன்று என் றால் உடனடியாக அங்கு நிதி செல்கிறது. ஆனால், தமிழகத்திற்கு மட்டும் எவ்வித நிதி யும் பாஜக அரசு தர மறுக்கின்றது. இவர்க ளுக்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். அதிமுக பாஜகவின் பி டீமாக  செயல்படுகின்றது என்று குற்றம்சாட்டினார்.  மேலும், திமுக அரசு மக்களுக்கு செய்த திட் டங்களான மகளிர் உரிமைத்தொகை, இல வச பேருந்து பயணம், மற்றும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் உள்ளிட்ட ஏராள மான திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேக ரித்தார். இந்த பிரச்சாரத்தின் போது, இந்தியா கூட் டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம், காங்கி ரஸ், சிபிஐ, மதிமுக, கொமதேக, விசிக, முஸ் லீம் லிக், மக்கள் நீதி மையம், மனிதநேய மக் கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.