districts

img

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து கோவை

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து கோவை, துடியலூர் பேருந்து நிலையம் அருகில் சிஐடியு இன்ஜினியரிங் சங்கத்தின் சார்பில் புதனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிபிஎம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி, இன்ஜினியரிங் சங்க தலைவர் எஸ்.பி.சுப்பிரமணியம், பொதுச்செயலாளர் சி.துரைசாமி, பொருளாளர் ஏ.ஜி.சுப்பிரமணியம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.