districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தாராபுரத்தில் தக்காளியை திருடியவர் கைது

தாராபுரம், ஜன.12-  கடந்த சிலநாட்களுக்கு முன்பு வரை தக்காளி விலை  ரூ.120 வரை விற்றது. பொதுமக்கள் தக்காளி வாங்கவே  சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த டிச.28 அன்று  தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்த தக் காளி வியாபாரி சீனிவாசன் (28), என்பவர் வெளியூ ரில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து சரக்கு  வாகனத்தில் கொண்டு வந்துள்ளார். மறுநாள் அதி காலை தாராபுரம் மார்க்கெட்டுக்கு தக்காளிகளை கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக வாக னத்தை தனது வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். அதனை  தொடர்ந்து மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வாக னத்தில் இருந்த தக்காளி பெட்டிகள் குறைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், மீதமிருந்த தக் காளி பெட்டிகளை சரிபார்த்த போது சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தக்காளி பெட்டிகளை மர்ம நபர் திருடிசென்றதை கண்டு அதிச்சியந்த அவர், இதுகு றித்து தாராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள் ளார். புகாரின்பேரில் தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தரும புரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த விஜய குமார் (28), என்பவர் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந் தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறை யினர் அவரிடமிருந்து தாக்காளி விற்ற பணம் ரூ.10  ஆயிரம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய வாக னத்தை  பறிமுதல் செய்தனர். பின்னர் தாராபுரம் குற்றவி யல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தனர்.

தீர்வுக்கு முன்வராத ஜவுளி வியாபாரிகள்: போராட்டத்தை தீவிரப்படுத்த விசைத்தறியாளர்கள் முடிவு

திருப்பூர், ஜன. 12 – விசைத்தறியாளர்கள் முன்வைத் துள்ள கோரிக்கையின் மீது நியாய மான தீர்வு காண முன்வராமல் இழுத்த டிக்கும் போக்கை விசைத்தறி ஜவுளி வியாபாரிகள் கடைப்பிடிப்பதால், ஊர் தோறும் கூட்டுக் கூட்டம் நடத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது என்று விசைத்தறி யாளர் சங்க கூட்டமைப்பும், தொழிற் சங்கங்களும் தீர்மானித்துள்ளனர். கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறியாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம்  புதன்கிழமை மாலை சுல்தான்பேட்டை அம்மன் கலையரங்கத்தில் நடைபெற் றது. இக்கூட்டத்தில், கோவை, திருப் பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத் தறிகள் மூலம் 2 லட்சம் தொழிலாளர் கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். ஏழாண்டுகளுக்கு மேலாக நெசவுக் கூலி உயர்வு கொடுக்காமல் ஜவுளி வியாபாரிகள் மறுத்துவரும் நிலை யில் கடந்த  ஆண்டு நவம்பர் மாதம் அரசுத் தரப்பில் பல்லடம் ரக துணி  உற்பத்திக்கு 20 சதவிகிதம், சோமனூர்  ரக துணி உற்பத்திக்கு 23 சதவிகிதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவையும் அமல்படுத்த ஜவுளி வியாபாரிகள் மறுத்து வரு கின்றனர்.  இதையடுத்து கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங் கங்கள் கூடிப் பேசி, அரசு அறிவித்த கூலி உயர்வை வழங்க வலியுறுத்தி ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரை யற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி 4 ஆவது நாளான புதன் கிழமையும் வேலைநிறுத்தம்  தொடர்ந்து நடைபெற்றது. ஆனால்  செவ்வாய்க்கிழமை கோவையில்  நடந்த பேச்சுவார்த்தையும் பெயரள வில் நடந்ததால், விசைத்தறி வேலை நிறுத்தத்தை வேகப்படுத்துவது என வும், அதற்காக விசைத்தறி உரிமை யாளர்களும், தொழிலாளர்களும் இணைந்த ஆலோசனை கூட்டத்தை ஊர்வாரியாக நடத்துவது எனவும்  முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் போராட்டத்தை தீவிரப்படுத்த கூடிப் பேசுவது எனவும் முடிவு செய் யப்பட்டது.  இதில் விசைத்தறி உரிமையா ளர்கள் சங்கத்தின் சார்பில் அவிநாசி சங்கத் தலைவர் என்.எம்.முத்துசாமி, மங்கலம் பகுதி தலைவர் ஏ.பி.வேலுச் சாமி, செயலாளர் எம்.பழனிச்சாமி, துணைத் தலைவர் ஆர்,கோபால், கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.பழனிச் சாமி, பி.வெங்கடாசலம், தெக்கலூர் பொன்னுசாமி மற்றும் தொழிற்சங்கங் களின் கூட்டமைப்பு சார்பில் சிஐ டியு திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் பி.முத்துசாமி, மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, எல்பிஎப் செயலாளர் சிவ சாமி, ஆர்.ரங்கசாமி, சரவணன் (மின் சாரம்) மகேஸ், ஐஎன்டியூசி நிர்வாகி எம்.நடராஜ், சபா துரை, ஏடிபி சார்பில்  எஸ்.சுப்பிரமணியம், எம்எல்எப் சார் பில் பாண்டியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 240 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கோவை, ஜன.12- பொங்கல் பண்டிகையொட்டி கோவையில் இருந்து வெளியூர்களுக்கு பொதுமக்கள் செல்ல 240 சிறப்பு பேருந்து கள் இயக்கப்படுகிறது என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் ஜன.14 ஆம் தேதியன்று (நாளை) கொண்டாடப்பட உள்ளது. இதை யொட்டி பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுவதை தவிர்க்க தமிழக அரசு போக்குவரத்து கழகம்  சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கூறுகையில், கோவை காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, சத்தியமங்கலம் பகுதிக்கும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி மார்க்கமாக செல்லும் பேருந்து களும், கொடிசியா திடலில் இருந்து சேலம், திருச்சி மார்க்க மாக செல்லும் பேருந்துகளும், உக்கடம் பேருந்து நிலை யத்தில் இருந்து பொள்ளாச்சி, பழனி, உடுமலை, வால் பாறை, மதுரை, தேனி மார்க்கமாக செல்லும் பேருந்துக ளும் இயக்கப்படுகின்றன. இதன்படி கோவையில் இருந்து  மதுரைக்கு 100 பேருந்துகள், சேலம் மற்றும் திருச்சிக்கு தலா 50 பேருந்துகள், தேனிக்கு 40 பேருந்துகள் என 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், கொடிசியா மைதானம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையங்களுக்கு போதுமான இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களாக கொடிசியா மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, என்றார்.

கல்வித்தொகை பெற காலக்கெடு நீட்டிப்பு

திருப்பூர், ஜன.12-  சிறுபான்மை மாணவர் கள் கல்வித்தொகை பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள தாக  மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார்.  தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11ம்  வகுப்பு முதல் பி.எச்டி.,  படிப்பு வரை படிக்கும் இஸ் லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய,  புத்த, பார்சி மற்றும் ஜெயின்  மதங்களை சார்ந்த மாணவ-மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக் கலாம். இவர்கள் www.scho larships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வரும் ஜன. 15 ஆம் தேதி வரை காலக் கெடு நீட்டிப்பு செய்யப்பட் டுள்ளது, என ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார்.

தாராபுரத்தில் தக்காளியை திருடியவர் கைது

தாராபுரம், ஜன.12-  கடந்த சிலநாட்களுக்கு முன்பு வரை தக்காளி விலை  ரூ.120 வரை விற்றது. பொதுமக்கள் தக்காளி வாங்கவே  சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த டிச.28 அன்று  தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்த தக் காளி வியாபாரி சீனிவாசன் (28), என்பவர் வெளியூ ரில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து சரக்கு  வாகனத்தில் கொண்டு வந்துள்ளார். மறுநாள் அதி காலை தாராபுரம் மார்க்கெட்டுக்கு தக்காளிகளை கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக வாக னத்தை தனது வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். அதனை  தொடர்ந்து மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வாக னத்தில் இருந்த தக்காளி பெட்டிகள் குறைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், மீதமிருந்த தக் காளி பெட்டிகளை சரிபார்த்த போது சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தக்காளி பெட்டிகளை மர்ம நபர் திருடிசென்றதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகு றித்து தாராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள் ளார். புகாரின்பேரில் தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தரும புரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த விஜய குமார் (28), என்பவர் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந் தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறை யினர் அவரிடமிருந்து தாக்காளி விற்ற பணம் ரூ.10  ஆயிரம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய வாக னத்தை  பறிமுதல் செய்தனர். பின்னர் தாராபுரம் குற்றவி யல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தனர்.

கல்வி உதவித்தொகை பெற காலக்கெடு நீட்டிப்பு 

திருப்பூர், ஜன.12-  திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்க ளில் 11ம் வகுப்பு முதல் பி.எச்.டி., படிப்பு வரை படிக் கும் சிறுபான்மை மாணவ-மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற www.scho larships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வருகிற 15  ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள் ளது. 

பயோமெட்ரிக் முறையால் நியாய விலைக் கடையில்  நெடுநேரம் காத்திருந்த பொதுமக்கள்

அவிநாசி, ஜன.12- பயோமெட்ரிக் முறை மாற்றப் பட்டதால், சேவூர் நியாய விலைக் கடையில் நீண்ட நேரமாக காத்தி ருந்து பொதுமக்கள் அவதிக்குள் ளாகினர். தை திருநாளை முன்னிட்டு, கடந்த வாரம் முதல் நியாயவி லைக் கடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகி றது. இப்பரிசு தொகுப்பு பெறுவ தற்கு குடும்ப அட்டை மட்டும் ஸ்கேன் செய்யப்பட்டு கையெ ழுத்து பெறப்பட்ட பிறகு பொருள் கள் வழங்கப்பட்டு வந்தது. கைரே கைப் பதிவு இல்லாமல், பயோ மெட்ரிக் முறையின்றி பொருள் கள் வழங்கப்பட்டதால், நியாயவி லைக் கடைக்கு வரும் குடும்ப அட் டைதாரர்கள், விரைவில் பொருட் களை வாங்கிச் சென்று வந் தனர். இதற்கிடையில் திடீரென மீண்டும் பயோமெட்ரிக் முறைக்கு மாற்றப்பட்டு கைரேகைப் பதிவு முறை செயல்படுத்தப்பட்டதால், நியாயவிலை கடைக்கு வந்த ஒவ் வொரு குடும்ப அட்டைதார்களும் இயந்திரத்தில் குடும்ப அட் டையை பதிவு செய்து, கைரேகை  பதிவானவுடன் தான் பொருட் களை வாங்கி செல்லும் நிலை ஏற் பட்டது.  குறிப்பாக  அவிநாசி வட்டம்,  சேவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கடை எண்.1இல் ஆயிரத்திற்கும் அதிக மான குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். பயோமெட்ரிக் முறை யில் கைரேகை பதிவாக தாம தமானதால், 100க்கும் மேற்பட் டோர் காலை முதல் 4 மணி நேரத் திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதையடுத்து மதி யம் 2மணிக்கு பயோமெட்ரிக்  முறை ரத்து செய்யப்பட்டதால்,  காத்திருந்த குடும்ப அட்டைதாரர் கள் எளிமையாகவும், விரைவாக வும் பரிசு தொகுப்பு பொருள்களை வாங்கிச்சென்றனர். இதேபோல், மாதமாதம் வழங்கப்படும் பொருள்களை வாங்குவதற்கும் பயோமெட்ரிக் முறை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: நகைக்கடையில் திருட்டு

கோவை, ஜன.12- நகை வாங்குவது போல நடித்து மோதிரங்களை திருடிச் சென்ற வாலிபர்களை காவல் துறையினர் தேடி வரு கின்றனர். கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதியில் உள்ள  ஒரு தங்க நகைக்கடையில் நகைகள் இருப்பு தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது குழந்தைகள் அணி யும் 14 தங்க மோதிரங்கள் காணமல் போனது தெரியவந்தது. 8 கிராம் எடை கொண்ட தங்க மோதிரங்களின்  மதிப்பு  ரூ.45  ஆயிரம் ஆகும். இதுகுறித்து கடை மேலாளர்  காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையி னர் நகைக்கடைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப் போது, 35 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் நகை வாங்கு வது போல் நடித்து மோதிரங்களை எடுத்து பாக்கெட்டில் போட்டு விட்டு தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந் தது. இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறை யினர், தங்க மோதிரங்களை திருடிச்சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

இளைஞர் அடித்து கொலை - 10 பேர் கைது

கோவை, ஜன.12-  கோவை ஆலாந்துறையையடுத்த சித்திரைசாவடி தோட்டத்தில் உள்ள வீட்டில் திருட முயன்றதாக கூறி வட மாநில இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்ப வத்தில் தொடர்புடைய 10 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், ஆலந்துறை அருகே உள்ள சித்தி ரைச்சாவடி அணையில் அடையாளம் தெரியாத ஆண் சட லம் மிதப்பதாக ஆலாந்துறை காவல் துறையினருக்கு தக வல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சட லத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், திங்க ளன்று இரவு ஆலாந்துறை சித்திரைச்சாவடி பகுதியில் உள்ள தோட்டத்தில் இருந்த மணி என்பவரது வீட்டிற்கு வந்த  வடமாநில இளைஞர் அங்கு திருட முயன்றதாகவும், அப் போது அங்கிருந்தவர்கள் ஆத்திரத்தில் அந்த இளை ஞரை பிடித்து சராமாரியாக தாக்கி கட்டி வைத்துள்ளனர்.  இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த போலீசார் பிடிபட்ட நபர் குடிபோதையில் இருந்ததால் காலையில் காவல் நிலையத் தில் ஒப்படைக்கும்படி சொல்லிவிட்டு அங்கிருந்து சென் றுள்ளனர். ஆனால், காயங்களுடன் கட்டி வைக்கப்பட்ட வட மாநில இளைஞர் மறுநாள் காலையில் மாயமானதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மாயமான நபர் தான் சித்திரைச் சாவடி அணையில் சடலமாக மீட்கப்பட்டவர் என்பது விசா ரணையில் தெரியவந்தது. மேலும் பலர் தாக்கியதில் அந்த நபர் உயிரிழந்ததும், இதையடுத்து அவரின் உடலை சித்திரைச்சாவடி அணை யில் வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து சித்திரைச் சாவடியை சேர்ந்த கே.விஸ்வநாதன் (30), ஏ.காளியப்பன்  (56), கே.சம்பத்குமார் (41), கே.துரைசாமி (50), எஸ்.கார்த்தி  (31), பி.கணேசன் (37), பி.ஜெகநாதன் (45), ஏ.பொன்னுசாமி  (52) மற்றும் போளூவாம்பட்டியைச் சேர்ந்த ஆ.ஜோதிராஜ்  (50), எஸ்.சரவணகுமார் (44) ஆகிய பத்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், உயிரிழந்த நபர் யார்  என்பது குறித்தும்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகி றது. இந்நிலையில், விசாரணைக்கு சென்ற காவல் துறையி னர் சம்மந்தப்பட்ட இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்திருந்தால் அந்த வடமாநில இளை ஞர் உயிரிழந்திருக்க மாட்டார் எனவும், போலீசாரின் அலட்சி யத்தாலே ஒரு உயிர் பலியானது என ஆலாந்துறை பகுதி  மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து காவல் உயர் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், சம்பவ இடத்திற்கு விசாரணைக்குச் சென்ற  காவல் துறையினரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடமையை சரியாக செய்யவில்லை என தெரியவந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளார்.

சேலத்தில் களை கட்டும் வெல்லம் விற்பனை

சேலம், ஜன.12- பொங்கல் பண்டிகை நெருங்குவ தைத் தொடர்ந்து, சேலம் மார்க்கெட் டில் இருந்து அனைத்து ஊர்களுக் கும் வெல்லம் அனுப்பும் பணி தீவிர மடைந்துள்ளது. பொங்கல் பண்டிகை வரும் ஜன.14  ஆம் தேதியன்று கொண்டாடப்படுகி றது. அன்றைய தினம் பொங்கல் வைத்து வழிபாடு நடத்த மக்கள் தயா ராகி வருகின்றனர். இதற்காக மார்க் கெட்டிற்கு கடந்த சில நாட்களாக வெல் லம் வரத்து அதிகரித்துள்ளது. சேலத் தில் மிகப்பெரிய வெல்ல மார்க்கெட் டாக செவ்வாய்பேட்டை மூலபிள்ளை யார் கோவில் பகுதியில், மொத்த வியா பாரிகள் திரளும் மார்க்கெட் இயங்கி  வருகிறது. இங்கு தற்போது, தினமும் 200 டன் அளவிற்கு வெல்லம் வருகி றது. இதனை மொத்த வியாபாரிகள் வாங்கி, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வருகின்ற னர். ஓமலூர், காடையாம்பட்டி, காமலா புரம், தாரமங்கலம், ஆத்தூர் பகுதியில் இருந்து உற்பத்தியாளர்கள், தங்கள் ஆலைகளில் தயாரிக்கப்பட்ட முதல் தரம், இரண்டாம் தரம் வெல்லத்தை சிப்பங்களில் கொண்டு வந்து விற் பனைக்கு வைக்கின்றனர். இதில்,  பொங்கல் பண்டிகைக்காக அச்சு வெல் லமும் அதிகளவு கொண்டு வந்து  விற்கின்றனர். இதனை சேலம் வியா பாரிகள் வாங்கி, சென்னை, செங்கல் பட்டு, வேலூர், கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அதேபோல், கர்நாடக மாநிலத்தில் இருந்து தினமும் 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து, வெல்லத்தை டன் கணக்கில் வாங்கிச் செல்கின்றனர். வழக்கமாக சேலம் வெல்ல மார்க்கெட் டில் தினமும் 100 டன் அளவிற்கு வியா பாரம் நடக்கும். ஆனால், தற்போது பொங்கலுக்காக தினமும் 200 டன் அளவிற்கு வெல்லம் வியாபாரம் ஆகி றது. இதுகுறித்து வெல்ல வியாபாரி கள் கூறுகையில், பொங்கல் பண்டி கையை யொட்டி வெல்ல வியாபாரம் அதிகரித்துள்ளது. இங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் கலப் படம் இல்லாத தரமான வெல்லம் செல் கிறது. மொத்த வியாபாரிகள் வாங்கி,  சில்லறை வர்த்தகத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். விலையில் மாற்றம் ஏதும் இல்லை. பொங்கல் முடியும் வரை வெல்ல வியாபாரம் நல்ல முறை யில் இருக்கும் என எதிர்பார்க்கி றோம், என்றனர்.

கோவையில் அதிகரிக்கும் கொரோனா

கோவை, ஜன.12- தமிழகத்தில் 3-வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப் படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை சார் பில் பல்வேறு தடுப்பு நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில், செவ் வாயன்று  மாவட்டம் முழுவ தும் 10 ஆயிரம் பேருக்கு  பரிசோதனை மேற்கொள் ளப்பட்டது. இதில், புத னன்று 981 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இதனால் கோவை  மாவட்ட மக்கள் பெரும் அச் சத்தில் ஆழ்ந்துள்ளனர்.