குன்னூர் அருகே இறந்து கிடந்த சிறுத்தை - வனத்துறையினர் விசாரணை
உதகை, பிப்.10- குன்னூர் அருகே தனியார் தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுத்தை குறித்து வனத்துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், குன்னூரில் சமீபகாலமாக கரடி, காட் டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளிலும், தேயிலைத் தோட்டங்களிலும் சாதாரணமாக வன விலங்குகள் உலா வருகின்றன. இதனால் அப்ப குதி பொதுமக்கள் அச்சத்துடனே வாழ்த்து வருகின்றனர். இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள கேத்தி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட அட்டுகொலை கிராமத்தில் தனியார் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக அப் பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித் தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் போல்லே சச்சின் துக்காராம் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் கிடந்த சிறுத்தை யின் உடலை மீட்டனர். இதன்பின், முதுமலையில் இருந்து கால்நடை மருத்துவர்களை வரவழைத்து பிரேத பரி சோதனை மேற்கொண்டனர். இதில், இறந்து கிடந்தது 13 வய தான பெண் சிறுத்தை என்று தெரியவந்தது. இந்த சிறுத்தை எவ்வாறு உயிரிழந்தது என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூத்த எழுத்தாளருக்கு கனவு இலக்கிய விருது
திருப்பூர், பிப்.10- திருப்பூரில் வசிக்கும் 86 வயது மூத்த எழுத்தாளர் பொன் மணிக்கு கனவு இலக்கிய விருது வழங்கப்பட்டது. திருப்பூர் மாஸ்கோ நகர் அரசுப் பள்ளிக்கு எதிரில் நடை பெற்ற இலக்கிய கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை முன் னாள் துணை இயக்குநர் குமார், எழுத்தாளர் பொன் மணிக்கு கனவு இலக்கிய விருதினை வழங்கினார். எழுத்தா ளர் பொன்மணி இலக்கிய கட்டுரைகள், கவிதைகள் என 10 நூல்களை வெளியிட்டிருப்பதாகவும், பல்வேறு இதழ்களில் வெளியாகி, புத்தகம் ஆக்கப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இருப்பதாகவும் எழுத்தாளர் சுப்ரபாரதிமணி யன் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் செங்கனி, எழுத்தாளர்கள் அழகுபாண்டி அரசப்பன், சுப்ரபாரதிமணியன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
பட்டு சேலை உற்பத்தியாளர்கள் 10 நாட்களுக்கு சப்ளை நிறுத்தம்
திருப்பூர், பிப்.10– கோவை, திருப்பூர், ஈரோடு மாவட் டங்களில் பட்டு சேலை உற்பத்தியாளர் கள் பத்து நாட்களுக்கு கைத்தறி நெச வாளர்களுக்கு பட்டு நூல் சப்ளை செய் வதை நிறுத்துவதாக அறிவித்துள்ள னர். கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் புளியம்பட்டி, சத்தியமங்கலம், திருப்பூர் பாண்டியன் நகர், கணக்கம்பாளையம், கணபதி பாளையம், காங்கேயம், குண்டடம், தாராபுரம், பெல்லம்பட்டி, வதம்பச் சேரி, காமநாயக்கன்பாளையம் உள் பட பல்வேறு ஊர்களில் பட்டு கைத்தறி நெசவு நடைபெற்று வருகிறது. பட்டுச் சேலை உற்பத்தியாளர்கள், வியாபாரி களிடம் கைத்தறி நெசவாளர்கள் பட்டு, பாவு நூல் வாங்கி கூலிக்கு நெசவு செய்து தருகின்றனர். இந்நிலையில் கச்சா பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பிப்ர வரி 10ஆம் தேதி முதல் பத்து நாட்க ளுக்கு பட்டுச் சேலை உற்பத்தியை நிறுத்துவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். எனவே கைத்தறி நெசவாளர்களுக்கு பட்டு, பாவு நூல் தருவதை நிறுத்தப்பட்டுள்ளது. கச்சா பட்டு விலை கிலோ ரூ.3700 ஆக இருந் தது. கடந்த நான்கு மாத காலத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்து, தற்போது ரூ.5800 ஆக அதிகரித்துள்ளது. இன் னும் கிலோ ரூ.6000 ஆக உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆகவே, இந்த கடுமையான விலை உயர்வு காரணமாக பட்டு நூல் விலையைக் குறைக்க வலியுறுத்தி பத்து நாட்க ளுக்கு சப்ளையை நிறுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்
தேர்தல் காரணமா?
எனினும், நகர்ப்புற உள்ளாட்சி தேர் தல் நடைபெற்று வரும் நிலையில் தயார் செய்யப்பட்ட பட்டுச் சேலை களை மொத்தமாக கொண்டு செல்வது மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி தருவதற்காக லட்சக்கணக்கில் பணம் கொண்டு செல்வது ஆகிய நட வடிக்கைகள் தேர்தல் பறக்கும் படையி னரால் தடுத்து நிறுத்தப்படும், பணம் பறிமுதல் செய்யப்படும் என்ற அச்சம் காரணமாகவே பட்டு நூல் சப்ளையை பத்து நாட்களுக்கு நிறுத்துவதாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரி வித்தனர். பத்து நாட்கள் எனும்போது பிப்ரவரி 20ஆம் தேதி தேர்தல் முடிந்து விடும். அதன் பிறகு பறக்கும் படையி னர் சோதனை, பணம் பறிமுதல் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக் கது. குறிப்பாக கைத்தறி நெசவாளர் களுக்கு நெசவுக் கூலியாக தருவதற்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பணத்தை வியாபாரிகள் கொண்டு வரு வார்கள், அதேபோல் நெசவு செய்த 50 பட்டுச் சேலைகளை பண்டல் கட்டி எடுத்துச் செல்வதாக இருந்தாலும் லட் சக்கணக்கில் மதிப்பு வரும். எனவே தான் தற்போது நெசவாளர்களுக்கு பட்டு நூல் சப்ளையை நிறுத்தியுள்ள னர். அதே சமயம் இந்த காரணத்தை வெளிப்படையாக சொல்ல முடியாது. பட்டு நூல் விலை உயர்வும் நெருக்கடி ஏற்படுத்தும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடிப்படையில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது என்று பட்டு கைத்தறி நெசவுத் தொழில் துறையினர் கூறுகின்றனர்.
வழிப்பறி, மதுவிற்பனை- மூவர் கைது
திருப்பூர், பிப்.10- பொங்கலூர் பெருந் தொழுவு மற்றும் அலகு மலை பகுதிகளில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்ப டுத்தியும், அச்சுறுத்திப் பணம் பறிக்க முயன்றதாக வும் அடிக்கடி புகார்கள் எழுந்தது. அதன் அடிப் படையில் வழக்கு பதிவு செய்த அவினாசிபாளையம் காவல்துறையினர் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக கௌதம் மற்றும் அலகுமலையை சேர்ந்த சண்முகம் ஆகிய இருவரை யும் கைது செய்து பல்லடம் கிளை சிறையில் அடைத்த னர். இதேபோல், பொங்க லூர் பகுதியில் சட்டவிரோத மாக மது விற்பனை செய்த முத்துப்பாண்டி என்பவரை கைது செய்த அவிநாசிபா ளையம் காவலர்கள் அவ ரிடம் இருந்து 140 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பல்லடம் கிளை சிறையில் அடைத்தனர்.
மகளை பாலியல் தொந்தரவு செய்த தந்தைக்கு ஏழாண்டு சிறை தண்டனை
ந்தரவு செய்த தந் தைக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றம் ஏழாண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது. திருப்பூர் குப்பாண்டம்பாளையம், குருசாமி கவுண்டர் காம்பவுண்டில் குடியிருந்து வந்தவர் நாகராஜன். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி மதுபோதை யில், தனது 15 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்துள் ளார். இதுதொடர்பாக அவரது மனைவி, திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத் துள்ளார். இந்த புகாரின்பேரில் நாகராஜன் கைது செய்யப் பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து புத னன்று நீதிபதி சுகந்தி தீர்ப்பளித்தார். இதில் நாகராஜிற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராத மும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர் கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.