districts

img

பருவநிலை மாற்றம் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும்

திருப்பூர், ஆக. 29 - பருவநிலை மாற்றம் விவசாயி களுக்கு முன்பு இருக்கும் பெரிய சவால் என பெருமாநல்லூரில் நடந்த தென்னை கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.  இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் திருவனந்தபுரம், மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவ னம் காசர்கோடு இணைந்து திருப் பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் வியாழனன்று தென்னை மற்றும் கிழங்கு பயிர்கள் சார்ந்த வேளாண் உணவு அமைப்புகள், மீள் தன்மை மற்றும் நிலையான வருமானம் ஈட்டு தலுக்கான தொழில்நுட்பம் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது.  இதில், திருவனந்தபுரம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக இயக் குநர் ஜி.பைஜூ தலைமை வகித்து பேசுகையில், மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதற்கேற்ப உணவு உற்பத்தியை நாம் அதிகரிக்க வேண்டிய தேவையில் உள்ளோம். புதிய தொழில் நுட்பங்களை வைத்து உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டி உள்ளது.  திருப்பூர், கோவை மற்றும் கேரளா என ஒவ்வொரு பகுதியி லும் ஒவ்வொரு சூழல் உள்ளது. சூழ லைக் கொண்டு தான் சாகுபடி செய் யப்படுகிறது. பருவநிலை மாற்றம் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும். தென்னையின் ஊடு பயிராக கிழங்குகள் பயிரிடப்பட்டு, இன்றைக்கு அறுவடை செய்துள்ள னர்.  சுதந்திரத்தின் போது உணவு உற்பத்தியில் 50 மில்லியன் டன் செய்தோம். இன்றைக்கு 6 மடங்கு அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து 330 மில்லி டன் உணவு உற்பத்தி செய்கிறோம். புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் மூலமே இது சாத்தியமாகி உள்ளது. நாளுக்கு நாள் விளை நிலத்தின் பரப்பு குறைந் தாலும், புதிய தொழில் நுட்பங் களை கொண்டு சாகுபடியில் இலக்கை எட்டி வருகிறோம். சுதந்தி ரத்தின் போது 32 கோடி தேங்காய் களை அறுவடை செய்தோம். இன் றைக்கு 2200 கோடி தேங்காயை விவசாயிகள் உற்பத்தி செய்கிறார் கள். உலக அளவில் இந்தியா 30 சதவிகிதம் தேங்காய் உற்பத்தி செய்கிறது. உற்பத்தித் திறனை மேலும் மேம்படுத்தவே இது போன்ற கருத்தரங்குகள் நடத்துகி றோம்.  இந்தோனேஷியா போன்ற போட்டி நாடுகள் இருந்தாலும், இந் தியா இன்னும் உற்பத்தி திறனை மேம்படுத்தினால் 3 அல்லது 4 மடங்கு உற்பத்தியை அதிகரிக்க லாம் என்றார். தென்னை வளர்ச்சி வாரியம் மண்டல இயக்குநர் அறவாழி பேசு கையில், தென்னை வளர்ச்சி வாரி யம் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 70 ஆயிரம் ஹெக் டேர் தென்னை உற்பத்தி செய்கி றோம். தென்னையின் வேர், காய், கனி அனைத்தும் பயன்படுவதால் அதை கற்பக விருட்சம் என்று அழைக்கிறோம்.   இன்றைக்கு உணவு மூலம் ஏற்படும் ஒரு நோயாக புற்றுநோய் இருந்து வருகிறது. இதற்கு அரும ருந்து தென்னை எண்ணெயில் உள்ளது என்றார்.  இதில் தென்னை ஆராய்ச்சி விஞ்ஞானிகள்,  வேளாண்மைத் துறை, தோட்டகலைத் துறை உட்பட பல்வேறு துறை அதிகாரி கள் பங்கேற்றனர். இதில்  தென்னை வளர்ச்சி தொடர்பான கையேடுகள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றுவது தொடர் பான புத்தகங்கள் வெளியிடப்பட் டன.