தருமபுரி, பிப்.7- ஊதிய உயர்வு, பணி நிரத்தரம் செய் யக்கோரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர். கடந்த 2007 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலத்தின் பரிந்துரையின் பேரில், அரசு ஆரம்ப சுகா தார நிலையங்களில் துப்புரவு பணியா ளர்களாக சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆரம்பத் தில் தொகுப்பூதிய முறையில் வழங்கப் பட்டு, தற்போது ரூ.1,500 வரை துணை இயக்குநர் சுகாதார பணிகள் மூலம் வழங் கப்பட்டு வருகிறது. இவர்கள் சுமார் 15 ஆண்டுகள் வரை குறைந்த ஊதியத்தில் வேலை செய்து வருவதால் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 15 ஆண்டு காலம் பணி செய்த எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆரம்ப சுகாதார நிலை யங்களில் பணியாற்றும் துப்புரவு பணியா ளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.